Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓமந்தை சோதனை நிலையம் வாரத்தில் மூன்று நாள்கள் திறக்கப்பட்டிருக்கும் அரசின் யோசனைக்கு விடுதலைப் புலிகள் இணக்கம்

Featured Replies

ஓமந்தை சோதனை நிலையம் வாரத்தில் மூன்று நாள்கள் திறக்கப்பட்டிருக்கும் அரசின் யோசனைக்கு விடுதலைப் புலிகள் இணக்கம்

கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த, ஓமந்தைச் சோதனை நிலையம் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.

வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் சோதனை நிலையத்தை திறந்து போக்குவரத்துக்கு வகை செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது.

செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு ஊடாக அரசாங்கம் தெரிவித்த யோசனைக்கு விடுதலைப் புலிகள் நேற்று இணக்கம் தெரிவித்தனர்.

இந்த இணக்கப்பாடு, வன்னியில் ஏற் பட இருந்த பெரும் மனிதாபிமானப் பிரச் சினைகளைத் தவிர்த்துள்ளதாக அரச சார் பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத் தரப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் திருப்தி தெரிவித்துள்ளனர்.

இம் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் ஓமந்தைச் சோதனை நிலையம் மூடப்பட் டிருந்தால் வன்னிக்கான உணவு மற்றும் எரிபொருள் விநியோகம் என்பன பாதிப் புற்றிருந்தன.

மிகக் குறிப்பாக அங்குள்ள அரச நிறு வனங்களினதும் அரச சார்பற்ற நிறுவனங்களி னதும் பணிகள் பாதிப்புறும் நிலை உரு வாகியது. இது குறித்து அகதிகளுக் கான ஐ.நா.தூதரகம் மற்றும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் பெரும் கவலை தெரிவித்திருந்தனர். சோதனை நிலையம் தொடர்ந்து மூடப்படுமானால் பெரும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தோன்றும் அபாயம் என்றும் அவர்கள் எச்சரித்திருந்தனர்.

பாதை திறக்கப்படுவதால் அவசர நோயாளர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியாத பேரவலம், அரச சார்பற்ற நிறு னங்களின் நிவாரணப் பணிகள் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாதம் 22ஆம் திகதியன்று விடு தலைப் புலிகளால் தடுத்துவைக்கப் பட்ட வாகனம் ஒன்று அவர்களின் அனுமதியின்றி ஓமந்தை நோக்கிச் சென்றதும் அதனை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப் பட்டதும் அதன் பின் சோதனை நிலைய மும் பாதையும் மூடப்பட்டிருந்தமை தெரிந்தவையே.

பாதையைத் திறப்பது குறித்து செஞ் சிலுவைச் சர்வதேசக் குழுவின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி டூன் வன்டன் கோவ் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தி அவர்களின் பாதுகாப்பு உத்தரவாதத்தை பெற்றிருந்தார்.

நேற்று "டூன் வன்டன் கோவ் பாது காப்பு அமைச்சு அதிகாரிகளுடன் கொழும் பில் பேச்சு நடத்தினார்.

வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் பாதையைத் திறப்ப தற்கு பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் தெரி வித்தது.

அந்தச் சிபார்சு நேற்று விடுதலைப் புலிகளின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப் பட்டது.

அந்தச் சிபார்சினை நடைமுறைப்படுத்த விடுதலைப் புலிகள் செஞ்சிலுவைச் சர்வ தேசக் குழுவுக்கு சம்மதம் தெரிவித்தனர். எனினும் நோயாளர்களின் மனிதாபிமான பிரச்சினைக்கு தீர்வு காண வசதியாக 7 நாள்களும் சோதனை நிலையம் திறக்கப் பட வேண்டுமென விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இரு தரப்புகளும் இணக்கம் தெரிவித் ததைய டுத்து சோதனை நிலையமும் பாதை யும் இன்று திறக்கப்பட விருக்கின்றன.

பாதை மூடப்பட்டதால் தமது மனி தாபிமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள் ளன என்று ஐ.நா. நிறுவனங்கள் தெரிவித் திருந்தன.

பாதை மூடப்பட்டதால் வவுனியா வுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலையில் ஐந்து நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர் என கிளிநொச்சி வைத்தியசாலைப் பொறுப் பாளர் என்.சதானந்தன் தெரிவித்தார்.

(அ1)

உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் வேகமாக செய்திகள் வரவேண்டும் என்ற தங்களின் ஆதங்கம் புரிகிறது..

தயவு செய்து சில வினாடிகள் செலவழித்து பந்திகளுக்கு இடையில் இடைவெளிகள் இருக்கின்றனவா? வாசிக்ககூடிய முறையில் உள்ளதா? போன்ற விடயங்களை கவனத்தில் எடுத்தால் நன்றாக இருக்கும்..

நன்றி..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.