Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டாபயவின் செயலணிகள் நாட்டை இராணுவ மயப்படுத்துவதற்கான நகர்வு -சிவில் சமுக பிரதிநிதிகள் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபயவின் செயலணிகள் நாட்டை இராணுவ மயப்படுத்துவதற்கான நகர்வு -சிவில் சமுக பிரதிநிதிகள் அறிக்கை

கோட்டாய ராஜபக்ச உருவாக்கியுள்ள செயலணிகள் நாட்டை இராணுவ மயப்படுத்துவதற்கான நகர்வாக அமைந்துள்ளதாக ஸ்ரீலங்காவின் சிவில் சமூகபிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலணிகள் தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

59 சிவில் சமூக பிரதிநிதிகளும் 15 அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ஏற்கனவே உள்ள தொல்பொருள் திணைக்களம் போன்றவற்றை புறக்கணித்து இந்த செயலணிகள் பரந்துபட்ட தெளிவற்ற ஆணைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்களை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றம் இல்லாத சூழ்நிலையிலேயே இந்த செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன

மேலும் நாடு கொரோனா வைரஸ் காரணமாக முடக்கப்பட்டுள்ள நிலையிலும்,இந்த செயலணிகள் உருவாக்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் தங்கள் கரிசனைகளை வெளியிட முடியாத தருணத்திலும் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

நெருக்கடியின் போது அளவுக்கதிகமான காரணங்களை பயன்படுத்துவதற்கு வலுவான காரணங்கள் அவசியம்.

நாடு முன்னொரு போதும் எதிர்கொண்டிராத பொருளாதார, சுகாதார மற்றும் சமூக நெருக்கடி காரணமாக கரிசனை எழுந்துள்ள இந்த சூழ்நிலையில் தொல்பொருளிற்கும் பாரம்பரியத்திற்கும் ஏன் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து செயலணிகளிலும் இராணுவ அதிகாரிகள் இடம்பெற்றுள்ள அதேவேளை பாதுகாப்பான ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குவதற்கான செயலணி முற்றுமுழுதாக படையினரையும் பொலிஸாரைம் உள்ளடக்கியுள்ளது.

இது நவம்பர் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கையின் கல்வி சுகாதாரம் அபிவிருத்தி பொதுநிர்வாகம் மட்டுமல்லாது நீதித்துறையிலும் உள்ள சிவில் செயற்பாடுகள் இராணுவமயமாக்கலிற்கு உள்ளாக்கப்படுவதற்கான நகர்வாக தென்படுகின்றது.

இது நீண்ட காலமாக நிலைத்துநீடித்து வரும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள இடராகும்.

செயலணியின் உறுப்பினர்கள் முற்றுமுழுதாக நாட்டின் சிங்கள சமூகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணம் தொடர்பான செயலணியில் பௌத்த மதகுருமார் இடம்பெற்றுள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் சமமாக வாழ்கின்றனர் என்பது புறக்கணிக்கப்பட்டு இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

இந்த செயலணி இந்த மக்களின் நலன்களை புறக்கணிப்பதற்கான சாத்தியம் உள்ளதுடன்,செயலணி அரசாங்கம் பின்பற்றும் பெரும்பான்மை வாதத்தினை வெளிப்படுத்தும்.

இலங்கையின் ஜனநாயக பொறிமுறைகளை அரசியல்மயப்படுத்தாமல் அவற்றை இராணுவமயப்படுத்த முயலாமல் , வினைத்திறன் மிக்க முறையில் செயற்படுபவையாக அவற்றை மாற்றவேண்டும்.

இந்த செயலணிகள் முற்றுமுழுதாக ஜனாதிபதிக்கு பொறுப்புக்கூறவேண்டியவை. மேலும் அவற்றின் பணியாளர்கள் தேவைப்படும் அனுபவமுள்ள பொதுச்சேவை பணியாளர்கள் இல்லை.மாறாக அவர்கள் பொதுச்சேவை அனுபவமற்ற பாதுகாப்பு படை அதிகாரிகள்.

அவர்கள் பொதுச்சேவையின் பணிகளை கண்காணிக்க உள்ளதுடன் அமைச்சரவை மற்றும் அமைச்சுகளின் அதிகாரங்கள் செயற்பாடுகளை அபகரிப்பார்கள்.

இந்த செயலணிக்கு நிதி எவ்வாறு வழங்கப்படும்,அமைச்சுகளின் பணிகளை அவர்கள் எந்தளவிற்கு முன்னெடுப்பார்கள் செலவுகளை குறைப்பது என்பது அரசாங்கத்தின் முக்கிய கரிசனையாக காணப்படுகின்ற வேளையில் இந்த செயலணியால் எவ்வளவு மேலதிக செலவுகள் ஏற்படப்போகின்றன போன்ற விபரங்கள் தெளிவற்றவையாக காணப்படுகின்றன.

நோய்தொற்றின் சூழமைவில் இலங்கை முக்கியமானதொரு கட்டத்தில் உள்ளது.இலங்கையின் பொருளாதாரம் முற்றாக சிதறடிக்கப்பட்டுள்ளதுடன் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நம்பிக்கையை கட்டியெழுப்பவேண்டிய நிலை காணப்படுகின்றது.

நெருக்கடி என்பது இராணுவமயப்படுத்தவதற்கான சாக்காக அமையாது,இந்த நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் சவால்களுக்கு இராணுவமயப்படுத்தல் ஒரு வழிமுறை இல்லை என தெரிவித்துள்ளன.

 

https://www.ibctamil.com/srilanka/80/145261

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.