Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தல்: தூதரகங்களில் முறைப்பாடு.

Featured Replies

கொழும்பில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தல்: தூதரகங்களில் முறைப்பாடு.

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பணம் பறிக்கப்படுவது தொடர்பாக கொழும்பில் உள்ள பல வெளிநாட்டுத் தூதரகங்களில் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பணம் அறவிடப்பட்டதன் தொடர்ச்சியாக முஸ்லிம் வர்த்தகர்களும் கடத்தப்பட்டு பணம் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாட்டு தூதரகங்களை அணுகியுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள், அந்த நாடுகள் தமது அழுத்தங்களை அரசு மீது பிரயோகித்து இதனை உடனடியாக நிறுத்த முன்வரவேண்டும் என கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிக கவனங்களை செலுத்துவதாக இராஜதந்திர வட்டாரங்கள் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளன.

முன்னர் கொழும்பு வடக்கில் கடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் ஒருவரிடம் ஆயுதக்குழுவினர் 50 மில்லியன் ரூபாய்கள் கப்பமாக கேட்டபோதும், அவர் 22 மில்லியன் ரூபாய்களை செலுத்தி விடுதலையானார்.

எனினும் தான் மேலும் துன்புறுத்தப்படலாம் என அஞ்சி, அவர் தற்போது தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுடனும் இது தொடர்பாக கலந்துரையாடியதாகவும், அவர் இந்த விடயத்தை அடுத்து வரும் நாடாளுமன்ற அமர்வின் போது விவாதிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

-Puthinam-

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், கிழக்கின் விடிவெள்ளியாகத் தன்னைக் கூறிக் கொள்ளும் கருணாவிடம் முறையீடு செய்ய வேண்டியதுதானே.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், கிழக்கின் விடிவெள்ளியாகத் தன்னைக் கூறிக் கொள்ளும் கருணாவிடம் முறையீடு செய்ய வேண்டியதுதானே.

ம் கடத்தியவனிட்டையே முறியிட்ட பெருமை கிடைக்கும்

இவ்வாறு பெரிய பணத் தொகையை வங்கிச் சேவையின் பங்களிப்பின்றி நோட்டுக்கட்டுகளாக கைமாற்றஞ் செய்வதை சிறிலங்கா அரசு இன்னும் நடைமுறையில் வைத்திருப்பதும் இந்த கப்பம் கேட்கும் நாடகத்துக்கு வழிவகுத்துக்கொடுக்கிறது. இவ்வாறு ஒருவரைக் கடத்திக் கப்பம் பெறும்போது கடத்தப்பட்டவர் பெரும்பாலும் வருமானவரி இலாகாவுக்கு தண்ணிகாட்டி கறுப்புப் பணம் வைத்திருக்கும் பெரிய முதலாளியாகவே தெரிவுசெய்யப்படுவதும் கப்பம் வழங்கப்படும்போது பணம் வங்கிக் கணக்கினூடாகச் செலுத்தபடாமலிருப்பதும் கப்பம் பெறும் அடாவடித் தனத்தை ஊக்கிவிப்பதாகவே அமையும். இந்த நடைமுறையை மேலை நாடுகளில் உள்ளதுபோன்று மாற்றியமைத்து பெரிய பணத்தொகைகள் வங்கிக் கணக்கினூடகவே பரிமாற்றம் செய்யப்படவேண்டுமென்று அரசு சட்டம் கொண்டுவர வேண்டும்.

மகிந்தக்கு உதெல்லாம் காட்டுச்சட்டமாம் :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.