Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜீவ் கொலைக்குப் பின் புலிகள் மீது வெறுப்பை ஏற்படுத்திய இரண்டாவது சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலைக்குப் பின் புலிகள் மீது வெறுப்பை ஏற்படுத்திய இரண்டாவது சம்பவம்

[31 - May - 2007]

கடந்த மார்ச் மாதம் இந்திய மீனவர்கள் புலிகள் இயக்கத்தினரால் பாக்கு நீரிணைக் கடல் பகுதியில் வைத்துப் பிடித்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் அரசியல் ரீதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது. இது பற்றி இந்தியப் பத்திரிகைகள் தெரிவிக்கையில், இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் அண்மையில் மிக மோசமான அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ள சம்பவம் இதுவென்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களைப் புலிகள் இயக்கத்தினரே பிடித்துச் சென்று தடுத்து வைத்தார்கள் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்தும், விடுவிக்கப்பட்ட மீனவர்கள் புலிகளால் நடத்தப்பட்ட விதம் குறித்து அவர்களின் அனுபவங்களை வெளியிட்டதைத் தொடர்ந்துமே ஏற்பட்டதாக இந்தியப் பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் தமிழ் மீனவர்கள் கடத்தப்பட்ட மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கடத்தப்படுதல், துன்புறுத்தப்படுதல், கடத்திச் செல்லப்படுதல் ஆகிய சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சிறிலங்கா படையினருக்கும் அரசுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு மாநில அரசையும் இந்திய மத்திய அரசையும் கோரியுமே மேற்படி ஆர்ப்பாட்டங்களை தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் நடத்தியிருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்நாடு மீனவர்களைக் கொலை செய்தல், கடத்துதல் போன்ற நடவடிக்கைகளை தாம் செய்யவில்லை என சிறிலங்கா கடற்படை தரப்பில் பலமுறை அறிவிக்கப்பட்டிருந்தும் இந்திய அரசியல்வாதிகள் அதனை நம்பவில்லை.

ஸ்ரீ கிருஷ்ணா எனப்படும் படகுடன் சேர்த்து பன்னிரண்டு தமிழ்நாட்டு மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் கடத்தப்பட்டவுடன், முதலில் தமிழ்நாடு அரசியல்வாதிகள் அதற்காகக் குற்றம் சாட்டியது சிறிலங்கா கடற்படையினர் மீதே.இதற்கு முன்னரும் தமிழ்நாடு மீனவர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டபோது அதற்காகவும் முதலில் சிறிலங்கா கடற்படையினர் மீதே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் உண்மை நிலை தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் தெரியவர நெடு நாட்கள் எடுக்கவில்லை. குறித்த ஐந்து மீனவர்கள் கொல்லப்பட்டது சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்ட தமிழ்நாடு பொலிஸ், அவர்களைப் புலிகள் இயக்கத்தினரே கொலை செய்ததாகத் தகவல் கிடைத்திருப்பதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு தமிழ் நாட்டில் புலிகளுக்கு எதிராகப் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.

பின்னர் இவ்வாறு புலிகளுக்கு எதிராக எதிர்ப்பைக் கிளப்பிய சம்பவம் கடத்திச் சென்ற மீனவர்களை இரண்டு படகுகளில் ஏற்றிச் சென்று தமிழ்நாட்டுக் கடலோரம் புலிகள் இயக்கத்தினர் விடுவித்தபோது ஏற்பட்டது.இந்தச் சந்தர்ப்பத்திலேயே தமிழ்நாடு மீனவர்களைக் கடத்திச் சென்றதால் தமக்கேற்பட்ட பெரும் எதிர்ப்பையும் பின்னடைவையும் புலிகள் இயக்கம் உணர்ந்து கொண்டது. விடுவிக்கப்பட்ட மீனவர்களை தமிழ்நாடு பொலிஸார் பொறுப்பெடுத்த பின்னர் அவர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அந்த மீனவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்கப்படுமென அறிவித்தார்.

அந்த சந்தர்ப்பத்தின்போது மீனவர்களைப் பேட்டி காண்பதற்கு பொலிஸ் அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்காதபோதும் கிளெமென்ற் எனப்படும் கடத்தப்பட்ட மீனவர் தனது அனுபவங்களை செய்தியாளர்களுக்குக் கூறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

குறித்த கிளெமன்ற் எனப்படும் மீனவர் தெரிவித்த தகவல்களுக்கேற்ப புலிகள் இயக்கத்தினர் மேற்படி மீனவர்களைக் கடத்திச் சென்ற பின்னர் சில நாட்கள் மன்னாருக்கு அருகேயுள்ள தீவு ஒன்றில் தடுத்து வைத்திருந்ததாகவும், அதன் பின்னர் வெவ்வேறு இடங்களுக்குக் கூட்டிச் சென்றதாகவும் அங்கெல்லாம் பிரபாகரனின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன எனவும் இரவு வேளைகளில் பாம்புகள் நடமாடும் காட்டுப் பகுதியில் மெத்தைகளைப் போட்டு உறங்கியதாகவும் கூறியுள்ளனர். மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலிகள் இயக்கம் விமானத் தாக்குதல் நடத்திய தினத்திலும் பின்னர் எண்ணெய்க் களஞ்சியம் மீது விமானத் தாக்குதல் நடத்திய தினத்திலும் புலிகள் இயக்கத்தினர் வெடி கொளுத்தி மகிழ்ச்சி கொண்டாடினார்கள் எனவும் அத்துடன் கடத்தப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் ஐஸ்கிறீம் கொடுத்தார்கள் எனவும் மீனவர் கிளெமென்ற கூறியுள்ளார்.

அண்மையில் மாலைதீவு கடற்பிராந்தியத்தில் கடலோர காவற் படையினரால் தாக்கியழிக்கப்பட்டஇ யந்திரப் படகு புலிகளால் மேற்படி மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிறி கிருஷ்ணா எனப்படும் படகே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மீனவர்களிடமிருந்து பொறியியலாளர் ஒருவரையும் மேற்படி சிறிகிருஷ்ணா படகில் ஆயுதம் கடத்திய புலிகள் கூட்டிச் சென்றார்கள் எனவும் இவரை மாலைதீவு கடற்படையினர் கைது செய்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி அனைத்து சம்பவங்களின் பின்னரும் தெரிவாகியிருக்கும் ஒரு விடயம் தமிழ்நாடு மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கும் கடத்தப்பட்டதற்கும் புலிகள் இயக்கமே பொறுப்பெடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்த மீனவர் கொலை, கடத்தல் சம்பவங்களுக்காகப் புலிகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரும் மக்கள் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும், ஒரு சில இந்தியப் பத்திரிகைகளின் கருத்துக்கேற்ப முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் புலிகளுக்கு எதிராகப் பெரும் எதிர்ப்புணர்வும் வெறுப்பும் ஏற்பட்டுள்ள மற்றுமொரு சம்பவமே இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி புலிகளின் ஆதரவாளர் என்றே தமிழ்நாடு அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அவர் புலிகள் இயக்கத்துக்கு எதிராகச் செயற்பட மாட்டார் எனவும் புலிகளைப் பொறுத்தவரை கருணாநிதி நெகிழ்ச்சியான கொள்கையையே கடைப்பிடிப்பார் எனவும் மேலும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் கருணாநிதியின் மகள் கனிமொழி புலிகள் அமைப்பின் தீவிர ஆதரவாளர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.அவ்வாறு கருணாநிதியின் மகள் ஒருவரும் புலிகளுக்குச் சார்பானவராகும். இந்த நிலையில் முதலமைச்சர் கருணாநிதி அரசியல் ரீதியில் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறார். இதேபோன்ற புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளராகிய வைகோ எனப்படும் வீ.கோபாலசாமியும் அவருடன் சேர்ந்த அரசியல்வாதிகளும் புலிகள் இயக்கத்தின் மீனவர் கடத்தல் நடவடிக்கைகள் வெளியானதால் பெரும் அரசியல் இக்கட்டுக்குள் மாட்டியிருப்பதுடன், புலிகள் இயக்கம் மீது அதிருப்தியடைந்த நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்திய மத்திய அரசும் இதுவரையில் புலிகள் இயக்கத்தினரின் மீனவர் கடத்தல் சம்பந்தமாக புலிகளுக்கு எதிராக உறுதியான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. இதற்குக் காரணம் மத்திய அரசுக்கு முதலமைச்சர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆதரவு தேவை என்பதாலேயே.

-லங்காதீப விமர்சனம் 27.05.2007

தினக்குரல்

பொய் பொய் பொய்

இந்த லங்கா தீப உண்மையைத் தவிற மற்றதெல்லாம் போடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.