Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு ஐ.தே.க. கடுமையான கண்டனம்

Featured Replies

தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு ஐ.தே.க. கடுமையான கண்டனம்

[வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007, 08:58 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறக்கோட்டைப் பகுதியிலுள்ள விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்கள் அனைவரையும் அங்கிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலைக்குள் வெளியேற்றுமாறு காவல்துறையினரால் விடுக்கப்பட்ட உத்தரவை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்திருக்கும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கும், அவர்களைக் கைது செய்வதற்கும் தேவையான சட்டதிட்டங்கள் அதிகளவில் உள்ளன. அதனைப் பயன்படுத்தாது அப்பாவித் தமிழர்களை நெருக்கடிக்குள் தள்ளுவது பாரிய குற்றமாகும்.

இதன் மூலம் பயங்கரவாதத்தைத் தடுக்க முடியாது. அது மேலும் பலமடையும் நிலைமைதான் ஏற்படும். எதுவிதமான அனுபவமும் இல்லாத பாதுகாப்பு அமைச்சின் தன்னிச்சையான செயற்பாடுகளால் தெற்கிலும், வடக்கிலும் வாழும் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.

எல்லைக்கிராமங்களில் வாழும் சிங்கள மக்களும், வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் தாம் வாழும் கிராமங்களைவிட்டு வெளியேறிச் செல்கின்றார்கள். குண்டுவெடிப்புக்களினாலும் பாதிப்படைகின்றார்கள்.

மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, பாதுகாப்பற்ற நிலைமையே உருவாக்கப்பட்டிருக்கின்றது. அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குட்படாது மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் .

வடக்கு - கிழக்குப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனை முன்னெடுக்காது ஊடகப் பிரச்சாரத்தையே ராஜபக்ச சகோதரர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

செய்தி மூலம்: புதினம், நன்றி!

தமிழ் மக்களை விடுதிகளில் இருந்து வெளியேற்றுவது கொடூரமான வன்முறை: த.தே.கூ

[வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007, 05:22 ஈழம்] [க.திருக்குமார்]

தமிழ் மக்களை கொழும்பில் உள்ள விடுதிகளில் இருந்து வெளியேற்றுவது அடிப்படை உரிமைகள் மீதான கொடூரமான வன்முறை எனவும், இந்த நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீக்காந்தா தெரிவித்துள்ளதாவது:

இந்த நடைமுறை வடக்கு - கிழக்கு மற்றும் மலையகத்தில் இருந்து தமது தேவைகளின் நிமித்தம் கொழும்புக்கு வரும் தமிழ் மக்களுக்கு எதிரானது என்பது தெளிவானது.

இதனால் வடக்கில் இருந்து வந்த தமிழ் மக்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஏ-9 பாதை முகமாலையில் மூடப்பட்டிருப்பதனால் அவர்கள் உடனடியாக தமது இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாது.

வானூர்தி மூலம் அல்லது கப்பலின் மூலம் திரும்புவது என்றாலும் பயணச்சீட்டுக்களை பெறுவதற்கு நீண்டகாலம் எடுக்கும். எனவே அரசு தனது முடிவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

செய்தி மூலம்: புதினம், நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு நகரில் இருந்து தமிழர்களை வெளியேற்றும் இலங்கை ராணுவம்

கொழும்பு, ஜுன். 1-

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணு வத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி பொது மக்கள் குடியிருப்புகள் மீதும் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.இருதரப்புக்கும் இடையே 2002-ம் ஆண்டு கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. பெயரளவிலேயே ஒப்பந்தம் உள்ளது.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டு விடும் என்று பாதுகாப்புத்துறை மந்திரி ரம்புக்வெல் மிரட்டல் விடுத்து இருக்கிறார்.

விடுதலைப்புலிகளுடன் பெரிய அளவில் ராணுவம் தாக்குதலுக்கு தயாராகி வருவதையே இது காட்டுகிறது.

இதன் ஒரு பகுதியாக கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

கொழும்பு நகரில் உள்ள லாட்ஜுகளில் போலீசார் சோதனை போட்டு தங்கி இருக்கும் தமிழர்களை வெளி யேற்றி வருகிறார்கள.

தமிழர்கள் வெளியேற விடுக்கப்பட்டுள்ள கெடு இன்றுடன் முடிகிறது. தமிழர்களுக்கு தங்க இடம் கொடுக்கக்கூடாது என்றும் லாட்ஜ் உரிமையாளர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் கொழும்பு நகருக்கு மருத்துவம், வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக வந்த தமிழர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்ககள்.

கொழும்பில் கடை வைத்திருக்கும் தமிழர்களும் அங்கு வேலை செய்பவர்களும் விரட்டு அடிக்கப்படுகிறார்கள்.

மாலைமலர்

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்

கொழும்பு நகரில் இருந்து தமிழர்களை வெளியேற்றும் இலங்கை ராணுவம்

மகிந்துவின் மந்திக்கூட்டம் கொழும்பில் தங்குவதற்கு இடப்பற்றாக்குறை போல இருக்கின்றது. இதன் காரணத்தாலேயே தமிழர் கொழும்பில் இருந்து அப்புறப்படுத்தப் படுகின்றனர். இனி மாத்தறை, குருநாகல், கேகாலை பகுதிகளில் இருந்து மகிந்து, ஜே.வீ.பீ சிங்களக் காடையர்களை கொழும்பில் இலகுவாக குடியேற்றவும் கையில் கத்திகளையும், வாளுகளையும் கொடுத்து தேவைக்கேற்றபடி நகர்த்தவும் முடியும்.

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.