Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமாதானத்துக்கான யுத்தம் என்ற சந்திரிகா வழியில் ராஜபக்­வும்! அவரைப் பேட்டி கண்டு உரையாடிய அல்-ஜெஸீரா செய்தியாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Fri Jun 1 5:42:24 EEST 2007

சமாதானத்துக்கான யுத்தம் என்ற சந்திரிகா வழியில் ராஜபக்­வும்! அவரைப் பேட்டி கண்டு உரையாடிய அல்-ஜெஸீரா செய்தியாளர்

"யுத்தம் மூலம் சமாதானத்தை அடை தல்' என்ற கொள்கைப் போக்கை முன்னைய ஜனாதிபதி சந்திரிகாவின் நிர்வாகம் முன் னெடுத்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் கொள்கைப்போக்கை விளக்குவதற் கும் அந்த வாசகமே போதுமானது.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுடன் நீண்டநேரம் கலந்துரையாடி பேட்டி கண்ட "அல்ஜெஸீரா' செய்தி நிறுவன ஊடகவியலாளர் தெரிவித்திருக்கின்றார்.

ரிமோர் நமிலி என்ற அந்தச் செய்தியா ளர் கடந்த செவ்வாயன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து உரையாடினார். அதன் பின்னர் வரைந்த செய்திக் கட்டுரை யில் அவர் தெரிவித்தவை வருமாறு:

""யுத்த நிறுத்தம் தோற்றுவிட்டது'' என்று இலங்கை ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் சமாதானம் மிகத் தூரத்தில் இல்லை என்று அவர் கருதுகின்றார்.

வழமையாக மிகச் சிக்கலான விடயங் களைக் கொண்டுள்ள இலங்கை அரசி யலை குழப்பமான கட்டமைப்பை இலகு வாக இப்படி வியாக்கியானப்படுத்தலாம்: தமிழ்ப் புலிகளுக்கு எதிரான யுத்தம் தொடங்கி விட்டாலும், இராணுவம் வென்றுவரும் நிலையில், கிளர்ச்சியாளர்களின் தலைவர் பிரபாகரன் அதனை அங்கீகரித்து, தமது ஆக்கிரமிப்பை நிறுத்தக் காலம் செல்லாது. அந்த நிலையில் சமாதான உடன்பாடு குறித் துப் பேசப்படும்.

இலங்கையில் மத அல்லது இனப்பிரச் சினை என்று ஒன்று இல்லை எனவும்

இந்தியாவிடமே சாவி உள்ளது

தனது இராணுவத்தின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில் மேற்குலக சமூகம் முழுத் தவறிழைக்கின் றது எனவும் இலங்கையின் அரசியல் எதிர்காலத்துக்கான சாவி இந்தியாவிடம் உள் ளது எனவும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் தெரிவித்தார்.

தமிழ்ப் புலிகள் குறித்து நாங்கள் இருவரும் அதிகம் உரையாடினோம்.

""பயங்கரவாதிகள் பலவீனமடையும்வரை அவர்கள் பேச்சுக்கு வரமாட்டார்கள்'' என்றார் அவர்.

ஆனால் இதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் நோக்கம் இராணுவத் தீர்வு ஒன்றை எட்டுவது என்ற நிலைப்பாட்டை அவர் அடியோடு நிராகரித்தார்.

ஆனால் அதற்கு மாறாக, அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் இரணுவ நடவடிக்கைகள், அரசியல் இணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான விடயத்தில் அற்ப பகுதிதான் என்றார் அவர்.

அப்படியானால் இது ஆக அரசியல் தந்திரம்தானா? இருக்கலாம்.

அவரது இந்த உத்தியை ""இராணுவ வெற்றியைப் பொறுத்து உடனடிப் பேச்சுக்குத் தயார்'' என்ற நிலைப்பாடாக நாம் விவரிக்கலாமா?

உணர்வுபூர்வமாக அப்படி இல்லை என்று மறுத்தார் அவர்.

ஓர் அரசியல் தீர்வுதான் அவரது பிரதான இலக்கு. ஆனால் அதே நேரம் பிரபாகரன் இராணுவ ரீதியாகப் பலவீனப்படுத்தப்பட வேண்டும். ஆயுதங்களை அவர்கள் ஒப்படைக்காவிட்டாலும், புலிகள் முதலில் யுத்தம் புரிவதை நிறுத்த வேண்டும் என்பதே அவரின் நிலைப்பாடு.

பிரபாகரன் தயார் என்றால் நானும் தயார்

""பிரபாகரன் தயார் என்றால் நானும் தயார்'' என்றார் அவர்.

""இதை நாம் தெளிவாகக் கூறிவிட்டோம். ஆனால் புலிகளின் பயங்கரவாதத்துக்கு மண்டியிட நான் தயாரில்லை. அதை நான் பலதடவைகள் கூறியுள்ளேன்.

""நான் தாக்கப்பட்டால், நான் பதில் தாக்குதல் நடத்துவேன். அதைத் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் செய்து வருகின்றோம்.'' என்றார் ஜனாதிபதி.

புலிகள் தங்கள் நடவடிக்கைகளைக் கொழும்புக்கும் காலிக்கும் கொண்டுவந்து விட்டனர். சரித்திரத்தில் முதல் தடவையாகப் புலிகள் தங்களின் வான் பலத்தை வெளிப்படுத்திக் காட்டியுள்ளனர்.

இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தி அரசியல் தீர்வு காண்பது என்பது சந்தேகத்துக்கு இடமான யதார்த்த நிலையா?

ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு சந்தேகம் ஏதும் இல்லை. ஆம், விரைவில். அதிகமானோர் இதனை உணர்வர் என்கிறார் அவர்.

""நான் இதனை மிகவும் தெளிவாகக் கூறவேண்டும். நாங்கள் கிழக்கை பயங்கரவாதத்திலிருந்து விடுவித்திருக்கிறோம். பேச்சுக்குச் செல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்பதைப் பிரபாகரன் உணர்வதற்கு நீண்டகாலம் பிடிக்காது. நாம் அவரைப் பலவீனப்படுத்தியுள்ளோம். அவர் பலவீனப்பட்டிருக்கும் போதுதான் சமாதானத் பற்றிப் பேசுவார். அவர் பலமடையும் போது அவருக்கு யுத்தமே தேவைப்படும்.'' என்கிறார் ஜனாதிபதி.

ஐரோப்பாவும், அமெரிக்காவும் உதவித் திட்டங்களை வெட்டுவது பற்றிப் பேசியமை குறித்து ஜனாதிபதி கடும் விமர்சனப் போக்கில் உள்ளார் என்பது உண்மை.

ஆழிப்பேரலையால் பாதிப்புற்றோருக்கான மனிதாபிமான உதவிகளை நிறுத்தியமைக்கு ஐரோப்பியத் தலைவர்களை அவர் குற்றம் சுமத்துகின்றார்.

""இங்கிலாந்து, அமெரிக்கா அல்லது வேறு ஒரு நாட்டின் காலனி அல்ல இலங்கை'' என்றார் அவர்.

தமது கொள்கைகளை மோசமாக விமர்சிப்பவர்கள் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகின்றார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்துகிறார்.

மனித உரிமை மீறல்களை மறுத்தார்

ஏழுநூறுக்கு மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படுவது உட்பட குறிப்பாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நான் கேள்வி எழுப்பியபோது அதனை அவர் அடியோடு மறுக்கிறார்.

பதிலாக சுற்றிவளைத்து நீண்ட விளக்கமளித்த அவர், அதற்கான குற்றப் பொறுப்பை புலிகள், பிரிந்து சென்ற கருணா குழு, சர்வதேச சக்திகள், ஏன் கடத்தப்பட்டோர் மீதும் என பெரும்பாலும் எல்லாத் தரப்புகள் மீதும் அவர் சுமத்தினார்.

""கடத்தப்பட்டோர் எனக் கூறப்படுவோரில் பெரும்பாலானோர் இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர். கடத்தப்பட்ட சமயம் முறைப்பாடு செய்வோர், மீண்ட பின்னர் அது பற்றித் தகவல் வெளியிடுவதில்லை.'' என்றார் அவர்.

மனிதாபிமானத் தலையீடு குறித்தும் கொசவோப் பாணியிலான பிரிவினையைத் திணிக்கும் விடயம் குறித்தும் பேசப்படுவது பற்றிக் கேட்டபோது அது அவற்றைக் குழப்பியது:

இலங்கை விவகாரத்தில் சம்பந்தப்படுவதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே நாடு, அயலில் உள்ள பெரிய நாடான இந்தியா தான் என்றார் அவர்.

""இந்திய அரசு அவசியமானது. இந்திய அரசிடமிருந்து மேலும் ஆதரவு தேவைப்படுகின்றது.'' என்றார் அவர்.

தமிழ்ச் சிறுபான்மையினருக்கும் சிங்களப் பெரும்பான்மையினருக்கும் இடையிலான அரசியல் நம்பிக்கையீனமே பிணக்கின் மூலவேர் என்பது பொதுவான கருத்து.

புலிகள் தமிழ்ப் பயங்கரவாத அமைப்பல்ல

ஆனால் அந்த மூலவேர் புதையுண்டு போய்விட்டது என்கிறார் ராஜபக்ஷ. இப்போது பிரச்சினை ஆக பயங்கரவாதத்துக்கும் மறுபுறத்தில் எஞ்சியுள்ள நாட்டுக்கும் தான் என்கின்றார் அவர்.

""தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரபாகரன் பிரதி பலிக்கவில்லை. சிறிய குழு ஒன்றின் நலனைத்தான் அவர் பிரதிபலிக்கின்றார். தமிழ் மக்களின் தேவைப்பாட்டை அல்ல.

""புலிகள் தமிழ்ப் பயங்கரவாத அமைப்பு அல்ல. அந்தக் குழுவில் சிங்களவர்கள், முஸ்லிம்கள் எல்லோரும் இருக்கின்றார்கள்.'' என்கிறார் அவர்.

பிரச்சினைக்கு ராஜபக்ஷவின் தீர்வு வளைந்து கொடுக்காத ஒரே கொள்கையில் தான் தங்கியுள்ளது. அது "வாஷிங்டன் நிபந்தனை' என்றும் அழைக்கப்படக்கூடியது. முதலில் எனது நிலைப்பாட்டை நீ ஏற்றுக்கொள். பின்னர் நாம் பேசலாம்' என்பதே அது.

இப்படி அந்தச் செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

uthayan

சமாதானத்துக்கான யுத்தம் என்ற சந்திரிகா வழியில் ராஜபக்­வும்! அவரைப் பேட்டி கண்டு உரையாடிய அல்-ஜெஸீரா செய்தியாளர்..

அல்-ஜெஸீரா செய்தியாளருக்கு மகிந்துவை சந்தித்தபோது ஒசாமா பின்லாடனை சந்தித்த மனத்திருப்தி ஏற்பட்டிருக்குமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.