Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈஸ்டர் பயங்கரவாத எச்சரிக்கை கடிதம் 268 பிரபுக்களுக்கு அனுப்பப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் பயங்கரவாத எச்சரிக்கை கடிதம் 268 பிரபுக்களுக்கு அனுப்பப்பட்டது

694940094001_6028494038001_6028496823001-vs.jpg?189db0&189db0

 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான தகவல் 268 பிரமுகர்களின் பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவ்வாறு கிடைக்கப்பெற்ற கடிதங்கள் குறித்து தாக்குதலின் பின்னர் வெளிக்கொணர வேண்டாம் அறிவிக்கப்பட்டதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அப்போது பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட பிரியலால் தசநாயக்க நேற்றைய (14) தினம் சாட்சி வழங்கிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவு, நீதிமன்ற பாதுகாப்ப பிரிவு, தூதுவர்களுக்கான பாதுகாப்பு பிரிவு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பிரிவு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவு ஆகியன கடந்த 2018ம் ஆண்டு தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்டதாக காணப்பட்டதாகவும் சாட்சியத்தின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட ஆணைக்குழு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறவுள்ளதாக உங்களுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றதா என வினவிய போது சாட்சியாளர்,

“கடந்த 2019, ஏப்ரல் மாதம் 10ம் திகதி அரச புலனாய்வு துறையின் பிரதானியால் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதமம் ஒன்று அவரால் தனக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் தனக்கு கீழ் செயற்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்ததுடன், அது தொடர்பில் பல பேசசுவார்த்தைகளும் நடத்தினேன்” என்றும் கூறினார்.

மீண்டும் குறுக்கிட்ட ஆணைக்குழு தூதுவர்களுக்கான பாதுகாப்பு பிரிவு உங்களின் அதிகாரத்திற்குட்பட்டதால் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு பாதுகாப்பினை வழங்கினீர்களா என வினவியது. இதற்கு பதிலளித்த அவர்,

“தூதுவர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் ஊடாக அப்போது வழங்கப்பட்டிருந்த பாதுப்பிற்கு மேலதிகமாக உத்தியோகப்பூர்வ வாகனத்துடன், பரிசோதகர் ஒருவர் உள்ளிட்ட ஐவரை இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தின் அக மற்றும் புறப்பாதுகாப்பிற்கு அனுப்பி வைத்ததோடு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதான சாலையில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் உங்களின் நேரடி அதிகாரத்துடனும் கையொப்பத்துடன் நியமிக்கப்பட்ட பணிப்பாளர்கள் ஐவருக்கும் அனுப்பி வைத்த கடிதங்கள் தாக்குதலின் பின்னர் ஊடகங்களுக்கு பகிரப்பட்டதா எனவும் ஆணைக்குழு கேள்வி எழுப்பியது. அதற்கு,

“ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் நானும் அந்த கடிதத்தினை பார்வையுற்றேன். ஆனாலும் அந்த கடிதம் எவ்வாறு ஊடகங்களுக்கு சென்றடைந்தது என்பது தொடரபில் நான அறியேன்.

எனினும் எனக்கு கீழ் செயற்பட்ட அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் கித்சிரிறி அபோன்ச மூலம் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் 268 பேரின் பாதுகாப்பு பிரதானிகளுக்கு முன்னெச்சரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. இதன்போது குறித்த கடிதங்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம்.” – என்றார்.

https://newuthayan.com/ஈஸ்டர்-பயங்கரவாத-எச்சரிக/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.