Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாம் யாரிடம் ஆயுதங்களை வாங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்தியாவுக்கு கிடையாது: ஹெல உறுமய உறுமல்!

Featured Replies

நாம் யாரிடம் ஆயுதங்களை வாங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்தியாவுக்கு கிடையாது: ஹெல உறுமய

[சனிக்கிழமை, 2 யூன் 2007, 07:20 ஈழம்] [க.திருக்குமார்]

சிறிலங்கா ஒரு இறைமையுள்ள நாடு. எனவே அது எங்கே ஆயுதங்களை வாங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்தியாவுக்கு கிடையாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் உதய ஹம்மன்பில்ல தெரிவித்துள்ளார்.

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் சிறிலங்கா அரசு ஆயுதங்களை கொள்வனவு செய்யக்கூடாது எனவும், இந்தியாவிடமே கொள்வனவு செய்யவேண்டும் எனவும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே ஹெல உறுமய இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், எம்.கே.நாராயணனையும் கடுமையாக சாடியுள்ளது.

இது தொடர்பில் ஹம்மன்பில்ல மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்தியா போன்ற ஒரு நாடு இப்படியான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கும் என்பதை நாம் நம்பவில்லை. அப்படியான அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால் அது சிறிலங்காவின் இறைமையில் இந்தியாவின் நேரடியான தலையீடாகவே இருக்கும்.

நாம் ஒரு சுதந்திர நாடாக இருப்பதால் எமக்கு தேவையான ஆயுதங்களை எங்கும் கொள்வனவு செய்யும் உரிமை எமக்கு உண்டு. இனப்பிச்சனைத் தீர்வுக்கு இந்தியாவிடம் இருந்து மட்டுமல்லாது பெரும்பாலான நாடுகளினதும், அரச சார்பற்ற நிறுவனங்களினதும் உதவிகள் எமக்கு தேவை என்றார் அவர்.

செய்தி மூலம்: புதினம், நன்றி!

  • தொடங்கியவர்

அரசு புலிகளையும் தமிழர்களையும் குழப்பிக்கொள்கிறது எந்த நாட்டிடமும் ஆயுதங்களை பெறும் உரிமை அரசுக்குள்ளது

வீரகேசரி நாளேடு

இந்தியா இலங்கைக்கு உதவக்கூடிய சூழலை இலங்கை அரசாங்கம் உருவாக்காமல் உள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களையும் விடுதலைப்புலிகளை குழப்பி கொள்கிறது. தமிழ் மக்களும் விடுதலைப்புலிகளும் பிரித்துப் பார்க்கப்படவேண்டும். சமாதான நல்லிணக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவேண்டும்.

இதற்கு அரசியல்தீர்வுத்திட்டம் அவசியம். மாகாண சபையை விட கூடிய அதிகாரப்பகிர்வு அவசியம் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் ஓய்வுபெற்ற இணைச் செயலாளர் நந்தகொட தெரிவித்தார். எந்த நாட்டிடமும் ஆயுதங்களை கொள்வனவு செய்யும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது. இலங்கை இறையாண்மையுள்ள நாடு. நாட்டை பாதுகாக்க எவரிடமும் ஆயுதங்களை கொள்வனவு செய்யலாம். எங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் வரும்பொழுது அமெரிக்காவிலிருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்கின்ற உரிமையிருக்கிறது என்றும் அவர் கூறினார். பி.பி.சி.க்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அதில் மேலும் தெரிவித்ததாவது:

முன்னர் யாழ்ப்பாணத்தில் சிக்கிக்கொண்ட படையினரை மீட்பதற்கு இந்தியா கப்பல்களை வழங்க முன்வந்தபோதும் நாங்கள் சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் உதவிகளை பெற்றோம். அன்று பாகிஸ்தான் உதவியிருக்காவிட்டால் இந்த நாடு பிளவு பட்டிருக்கும். எந்த நாட்டிடமும் ஆயுதங்களை கொள்வனவு செய்யும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது. ஆனால், நாங்கள் சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் கொண்டுள்ள உறவு இந்தியாவை பாதிக்கக்கூடாது. இந்தியா இரத்த உறவு கொண்டுள்ள நாடு. இந்தியா தற்காப்பு ஆயுதம் பற்றி பேசுகிறது. துப்பாக்கியும் தற்காப்பு ஆயுதம்தான். இந்தியாவால் வெளிப்படையாக ஆயுதங்களை தரமுடியாது. காரணம் தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பும். பிராந்தியத்தில் இந்தியா வல்லரசு என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால், இலங்கையில் மோதல்கள் அதிகரிக்கின்ற நிலையில் இந்தியா அதனை பார்த்துக்கொண்டிருக்கிறது. இங்கு கடற்புலிகள் பிரச்சினை உள்ளது. ஆனால் இந்தியா கூட்டுரோந்து முயற்சியை மறுத்துள்ளது. 1971ஆம் ஆண்டு பிரச்சினை தொடங்கிய காலத்திலிருந்து சீனாவும் பாகிஸ்தானும் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அந்நாடுகள் ஆயுதங்களை வழங்கினாலும் பணத்திற்காக அழுத்தம் கொடுப்பதில்லை. எமது பிரச்சினைகளில் தலையிடுவதும் இல்லை.

செய்தி மூலம்: வீரகேசரி, நன்றி!

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

எமது ஆயுதக்கொள்வனவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் ஜெயரட்ன

[சனிக்கிழமை, 2 யூன் 2007, 07:41 ஈழம்] [அ.அருணாசலம்]

இந்திய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகரான எம்.கே.நாராயணனின் கருத்து சிறிலங்காவின் அரசியல் கட்சிகள் தொடக்கம் படை அதிகாரிகள் வரை கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்கு ஆயுதம் வாங்க வேண்டும் என்ற முடிவை எமது அரசே எடுக்கும் இந்தியா அல்ல என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரும், சுதந்திரக்கட்சியின் வலிமையான உறுப்பினருமான டி.எம்.ஜெயரட்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தனது தேவைகளை நிறைவு செய்யக்கூடிய சரியான ஆயுதங்களையே நாம் கொள்வனவு செய்ய வேண்டும். எனவே யார் அதனை சிறிலங்காவுக்கு வழங்குவார்கள் என்பதனையே அரசு பார்க்கவேண்டும்.

இந்தியா எமது நெருங்கிய நண்பன். எனவே எமக்கு இடையிலான உறவுகளை தக்கவைப்பது முக்கியமானது. ஆனால் எமக்கு தேவையான ஆயுதங்களை எமது படையினரின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய நாடுகளிடம் இருந்தே நாம் பெறுவோம். அதற்கான முடிவை சிறிலங்கா அரசே எடுக்கும் என்றார் அவர்.

செய்தி மூலம்: புதினம், நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.