Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு களத்தில் அதிகரிக்கும் குழப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு களத்தில் அதிகரிக்கும் குழப்பம்

-கபில்

கொரோனா பீதிக்கு மத்தியில் தமிழ் அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை  தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

இந்த முறை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நேரமோ- தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரமோ- அல்லது எல்லா வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்த நேரமோ- தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்திலேயே பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில்  வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.

கொரோனா தொற்று பீதி மீண்டும் ஏற்பட்டுள்ளதால், தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படுமா - இல்லையா என்று தெரியாமல் வேட்பாளர்கள் திணறுகிறார்கள்.

1988 North Eastern Provincial Council election - Wikipedia

பெருமளவு காசைக் கொட்டி பிரசாரம் செய்யும் அவர்கள், இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் ஒருமுறை பிரசாரத்துக்குத் தயாராக முடியாது.

எனவே, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு விடக் கூடாது என்று பிரார்த்தனை செய்தபடி பிரசாரம் செய்யும் வேட்பாளர்கள் தான், அதிகம்.

வடக்கு, கிழக்கு தேர்தல் களத்தில் அதிகளவு கட்சிகளும், சுயேட்சைகளும் களமிறக்கப்பட்டுள்ளதால்,  தடுக்கி விழுந்த இடமெல்லாம் வேட்பாளர்களாகத் தான் நிற்கிறார்கள்.

வீடுகளைத் தேடி துண்டுப் பிரசுரங்களும், அட்டைகளும், மாதிரி வாக்குச் சீட்டுகளும், விநியோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Sri Lankan police tear down 'illegal election propaganda' | Tamil ...

சுவரொட்டிகளை ஒட்டக் கூடாது என்ற விதிமுறை இருந்தாலும் அதனை எந்தக் கட்சியும் எந்த வேட்பாளரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.

2004 பொதுத் தேர்தலில் கள்ளவாக்குப் போட்டதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியதைத் தூக்கிப் பிடித்து, பெருங்குற்றமிழைத்து விட்டார் என்று முறைப்பாடு செய்பவர்களும் சரி, அறிக்கை வெளியிடுபவர்களும் சரி-  தாங்கள் தேர்தல் சட்டங்களை மதித்து செயற்படுகின்றனரா என்ற கேள்வி உள்ளது.

தேர்தல் சட்டத்தின்படி சுவரொட்டிகளை ஒட்டவோ, வீதிகளில் பெயர்கள், சின்னங்கள், இலக்கங்களை வரையவோ கூடாது.

அதனை எந்தக் கட்சி தவிர்த்திருக்கிறது? எந்த வேட்பாளர் இதனைப் பின்பற்றுகிறார்?

வடக்கில் மூலை முடுக்கெங்கும் சுவரொட்டிகள் நிறைந்து கிடக்கின்றன. பிரதான வீதிகளில் தான் குறைவாக இருக்கின்றன.

பிரதான வீதிகளில் ஒட்டப்படும் சுவரொட்டிகளைத் தான்  பொலிசார் அகற்றுகின்றனரே தவிர, உள் வீதிகள், ஒழுங்கைகளுக்குள் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அவர்கள் கண்டு கொள்வதில்லை.

முன்னாள் நீதியரசரின் சுவரொட்டிகளும் , சட்டத்தரணிகளின் சுவரொட்டிகளும் கூட சுவர்களில் காணப்படும் போது,  ஏனைய வேட்பாளர்கள் தேர்தல் சட்டத்தை எந்தளவுக்கு மதிப்பார்கள் என்று கூறித் தெரிய வேண்டியதில்லை.

வடக்கு தேர்தல் களத்தில் இம்முறை அதிகளவு கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும்  போட்டியில் குதித்திருப்பதற்குக் காரணம், ஆசனங்களைப் பெறுவதல்ல.

வாக்குகளைப் பிரிப்பதற்காகவே பல கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

குறிப்பாக அரச தரப்பின் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஐதேகவை கைவிடுகிறது தமிழ் தேசிய ...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியை உடைக்கும் இலக்குடன் களமிறங்கப்பட்டுள்ள கட்சிகளே அதிகம்.

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கின்ற ஆதிக்கத்தை உடைப்பதற்கு அரச தரப்பு மாத்திரம் கங்கணம் கட்டியிருக்கவில்லை.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் போட்டி கட்சிகளும் கூட கூட்டமைப்பை உடைத்து சிதைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன.

வடக்கைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அதிகபட்ச ஆதரவும் ஆசனங்களும் கிடைத்து வந்தது வரலாறு.

அந்த ஆசனங்களைத் தம் வசப்படுத்துவதற்காக பல்வேறு கட்சிகளும் முயற்சிகின்றன.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் போட்டி ஒருபுறத்தில் இருக்க, பேரினவாதக் கட்சிகளும் அதற்குத் துணைபோகும் வகையில் செயற்படும் தமிழ்க் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும், கூட அதே இலக்குடன் தான் செயற்படுகின்றன.

அதிகளவு கட்சிகள், குழுக்கள் போட்டியிடும் போது, கூட்டமைப்பின் வாக்குகள் குறையும். அது ஒரு இலக்கு, குறைந்த வாக்குகளுடன் தாங்கள்  ஆசனத்தை பெற்றுக் கொள்வது இன்னொரு இலக்கு.

கொரோனா தொற்று அச்சுறுத்தலும், நாடாளுமன்ற அரசியலின் மீதும் கட்சிகளின் மீதும் தமிழ் மக்களுக்கு தோன்றியிருக்கின்ற வெறுப்பும், வாக்காளர்களை ஆர்வமற்ற நிலைக்குத் தள்ளியிருக்கின்றன.

தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வமின்றி வடக்கில் உள்ள, வாக்காளர்கள், குறிப்பாக முதியவர்கள் இருக்கிறார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரியவே கூறியிருக்கிறார்.

இராணுவ நெருக்குவாரங்களும், கொரோனா அச்சுறுத்தலும், வடக்கில் வாக்களிப்பு வீதத்தை குறைத்து விடலாம் என்ற அச்சம் காணப்படுகிறது.

வாக்களிப்பு வீதம் குறையும் போது குறைந்த வாக்கு வங்கியைக் கொண்ட கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு கிடைக்கலாம்.

அதனைத் தான் அரச தரப்பு இலக்கு வைத்து செயற்படுகிறதோ என்ற கருத்தும் உள்ளது.

விரைவில் தேர்தலை நடத்த தயார் ...

ஆனால் வழக்கமாக 80 வீத வாக்களிப்பு இருக்கும் நிலையில், இம்முறை வாக்களிப்பு 75 வீதமாக குறைந்தால் கூட அது தமது தோல்வியாகும் என்று  தேர்தல்கள் ஆணைக்குழு  தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியிருக்கிறார்.

அந்த தோல்வி தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கான தோல்வியாகவும் கூட மாறக் கூடும்.

ஏனென்றால் குறைந்த வாக்குகளைப் பெறக் கூடிய நிலையில் உள்ள பேரினவாதக் கட்சிகள், வடக்கில் வலுப்பெறும் நிலை ஏற்பட்டு விடும்.

இதனை தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளோ, வாக்குகளை பிரிக்கும் எண்ணத்தில் களமிறங்கியுள்ள கட்சிகளோ புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

அவர்கள் தமக்குள் குடுமிப் பிடிக் சண்டையிலேயே காலத்தைக் கடத்துகிறார்கள்.

மட்டக்களப்பில் கூட தமிழர் தரப்புக்கு 4 ஆசனங்களைப் பெறக் கூடிய வாய்ப்பு இருந்தும், 3 ஆசனங்கள் தான் கிடைக்கிறது.

எனவே தான், 4 ஆவது ஆசனத்தையும் கைப்பற்றும் வகையில் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற கருத்தை இரா.சம்பந்தன் அண்மையில் ஒரு கூட்டத்தில் கூறியிருக்கிறார்.

ஆனால், வடக்கின் நிலை அதைவிட மோசமானதாக இருக்கக் கூடும்.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் மீதுள்ள ஏமாற்றம், பேரினவாதக் கட்சிகள் மீதுள்ள வெறுப்பு போன்றவற்றினால்,  தமிழ்த் தேசிய வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்துக்கு வராமலேயே இருந்து விடக் கூடும்.

இவ்வாறான சூழல் வடக்கின் அரசியல் நிலையை எங்கு கொண்டு செல்லப் போகிறது என்ற கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது.

எதுஎவ்வாறாயினும் இன்னும் மூன்று வாரங்களில் தமிழ் மக்களின் உண்மையான அரசியல் பிரதிநிதிகள் யார் என்பது தெரிய வந்துவிடும்.

இந்த தேர்தல் யாருக்கு பாடம் கற்பிக்கப் போகிறது? யாரை வெற்றியாளராக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

https://www.virakesari.lk/article/86362

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.