Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப் போர் காலத்தில் மக்கள் இழந்த நகைகள், சொத்துக்களை மீள பெற்றுக் கொடுப்போம்..! எமக்கு ஆணை வழங்கினால் அது நடக்கும்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போர் காலத்தில் மக்கள் இழந்த நகைகள், சொத்துக்களை மீள பெற்றுக் கொடுப்போம்..! எமக்கு ஆணை வழங்கினால் அது நடக்கும்.!

vvvvvvvvvena_1080.jpg

தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பேசுவது தமிழ்தேசியம் என்ற போதும் அவர்கள் நரி தந்திரமிக்கவர்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளரும், தொழிலதிபருமான விண்ணன் கூறியிருக்கின்றார்.

யாழ்.ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச விசாரணை என பேசி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் இனத்திற்கு துரோகம் இழைத்துள்ளனர். 2001 ஆம் ஆண்டிலிருந்து தமது நரித் தந்திரம் மிக்க செயற்பாடுகளினால் தமிழ் தேசிய போராட்டத்தையும் தமிழ் மக்களையும் காட்டிக் கொடுத்து உள்ளனர்.

அது மட்டுமல்லாது சர்வதேச விசாரணையை கோரி காலங்கடத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கை அரசாங்கத்துடன் பேசியும் தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்.

நமது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பாக முதன்மை வேட்பாளர் அங்கஜன் ராமநாதனும் அவர் தலைமையிலான  நானும் பாராளுமன்றம் சென்றால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அரசாங்கத்துடன் பேசி குறுகிய காலத்திலேயே தீர்த்து வைப்போம் .

மேலும் பல துன்பங்களின் மத்தியில்  சேமித்த மக்களுடைய நகைகள் போரில் காணாமல் போனது. அந்த நகைகள்  மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும் இதனை அரசாங்கத்துடன் ஆணித்தரமாகப் பேசி அந்த மக்களுடைய நகைகளை மீண்டும் ஒப்படைப்பதற்கு அல்லது அவற்றுக்கு ஈடாக பணத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம்.

மேலும் யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தபோது இடம்பெற்ற கொலைகளை அக்கால கட்டத்தில் இருந்த அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவரைக் காட்டிலும் பல விஷ கிருமிகள் யாழ்பாணத்தில் இருந்து உள்ளனர்.

ராணுவக் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்தபோதும் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்.

https://jaffnazone.com/news/19605

டிஸ்கி :

காரியகாரர்.. பவுன் விற்கும் விலைய பார்த்து அடி போடுறார்.. உண்மையிலே விண்ணனா ..? நகையை விட காணாமல் போனவர்களை பற்றி மூச்சு இல்லை..😢

இவர் ஒரு விண்ணன். அங்கஜன் இவரைவிட ஒரு விண்ணன் . எல்லாருமே விண்ணனாகத்தான் இருக்கிறார்கள். ஆளாளுக்கு நல்லகவே அளந்து விடுகிறார்கள். பாவம் மக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.