Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொரீஷியஸில் விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பல் இரண்டாக பிளவடைந்து பெரும் நாசம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மொரீஷியஸில் விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பல் இரண்டாக பிளவடைந்து பெரும் நாசம்!

மொரீஷியஸ் கடற்கரைப் பகுதியில் விபத்துக்குள்ளாகி, ஆயிரம் டொன் எரிபொருளை கடலில் கசியவிட்ட, ஜப்பானிய கப்பல் இரண்டாக பிளவடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

117929137_644930072817319_89615085777112

சுமார் 4000 டொன் எரிபொருளை ஏற்றுக் கொண்ட பயணித்த எம்.வி.வகாஷியோ என்ற ஜப்பானுக்கு சொந்தமான இந்த கப்பலானது ஜூலை 25 அன்று மொரீஷியஸ் பகுதியில் ஒரு ஒரு பவளப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் நூற்றுக் கணக்கான டொன் எரிபொருட்கள் கடலில் முன்னதாகவே கலந்துவிட்டதாக தெரிவித்த அதிகாரிகள், சனிக்கிழமை கப்பல் இரண்டாக பிளவடைந்து விட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அது மாத்திரமன்றி ஞாயிற்றுக்கிழமை, உத்தியோகபூர்வ தூய்மைப்படுத்தலால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் எம்.வி.வகாஷியோவை இரண்டு துண்டுகளாகக் பிளவடைந்துள்ளதை வெளிக்காட்டியுள்ளது. 

மொரிஷியஸ் கடந்த வாரம் ஒரு சுற்றுச்சூழல் அவசரநிலையை அறிவித்தது, மீதமுள்ள 3,000‍ டொன் எண்ணெயை கப்பலில் இருந்து வெளியேற்றுவதற்காக மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர்.

117865358_644930076150652_35126753508341

இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள மொரீஷியஸ் உலகப் புகழ்பெற்ற பவளப்பாறைகளின் தாயகமாகவும், சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.virakesari.lk/article/88137

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானிய கப்பலில் எண்ணெய் கசிவு : கப்பலின் கப்டனை கைது செய்தது மொரீஷியஸ்

மொரீஷியஸ் கடற்கரை பகுதியில் எண்ணெய் கசிவினால் சுற்றுச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தியதாக தெரிவித்து ஜப்பானிய கப்பலின் கப்டனை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்துள்ளது.

குறித்த கப்பல் விபத்துக்குள்ளாகிய எண்ணெய் கப்பலினால் உலகின் மிக அழகிய கடல் சூழலில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

_114004218_captain.jpg

இந்திய பெருங்கடல் பகுதியிலுள்ள தீவு நாடான மொரீசியஸில் கடந்த மாதம் 25 ஆம் திகதி 4 ஆயிரம் தொன் எரிபொருளுடன் சென்ற ஜப்பான் சரக்கு கப்பல், பவளப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சுமார் ஆயிரம் தொன் எரிபொருள் கடலில் கசிந்துள்ளது.

இந்நிலையில், கப்பல் இரண்டாக உடைந்து எண்ணெய் கசிவு பவளப்பாறைகள், மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களில் பரவியது. இது மொரீஷியஸ் நாட்டின் மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவு என சில விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

117643517_321238182566640_55221297142221

"நாங்கள் இன்று கேப்டனையும் அவரது இரண்டாவது தளபதியையும் கைது செய்தோம். அவர்கள் ஒரு தற்காலிக குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஏனைய குழு உறுப்பினர்களின் விசாரணையுடன் விசாரணை நாளை முதல் தொடர்கிறது" என்று மொரீஷியஸ் பொலிஸ் ஊடக பேச்சாளர் இன்ஸ்பெக்டர் சிவா கூதன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரிலிருந்து பிரேசிலுக்குச் சென்று கொண்டிருந்த இந்தக் கப்பல் ஏன் மொரீஷியஸ் தீவுக்கு மிக அருகில் வந்தது என்பதை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
 

https://www.virakesari.lk/article/88317

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மொரிஷியஸ் தீவுக்கு அருகில் 40 டொல்பின்கள் உயிரிழப்பு.

dholfin.jpg

சிதைவடைந்த ஜப்பானிய கப்பலிருந்து வெளியேறிய எண்ணெய் கசிவானது கடல் நீரை மாசுபடுத்தியுள்ளது.

இதன் காரணமாக கிழக்கு ஆபிரிக்காவின் மொரிஷியஸ் தீவுக்கு அருகில் குறைந்தது 40 டொல்பின்கள் உயிரிழந்து கிடந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

ஜூலை முதல் கடலில் எண்ணெய் கசிந்து வரும் ஜப்பானிய கப்பல் குறித்து விசாரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அதேநேரம் குறித்த கப்பலும் திங்கட்கிழமை அகற்றப்பட்டது.

சுமார் 4000 டொன் எரிபொருளை ஏற்றுக் கொண்ட பயணித்த எம்.வி.வகாஷியோ என்ற ஜப்பானுக்கு சொந்தமான இந்த கப்பலானது ஜூலை 25 அன்று மொரீஷியஸ் பகுதியில் ஒரு ஒரு பவளப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானது.

டொல்பின்கள் ஆபத்தான முறையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து நூற்றுக்கணக்கான மக்கள் மொரீஷியஸின் தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

https://vanakkamlondon.com/world/2020/08/82401/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.