Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு கிழக்கு மக்கள் உட்பட உலகத் தமிழ் மக்கள் அனைவரும் பிரிவினையே விருப்புகிறார்கள் : கலாநிதி ஜெஹான் பெரேரா.

Featured Replies

வடக்கு கிழக்கு மக்கள் உட்பட உலகத் தமிழ் மக்கள் அனைவரும் பிரிவினையே விருப்புகிறார்கள் : கலாநிதி ஜெஹான் பெரேரா.

சிங்கள ஆட்சியாளர்களால் தமக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லையென்ற எண்ணம் வடகிழக்கு உட்பட வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதோடு "பிரிவினையே" இதற்கு தீர்வென்ற முடிவிற்கு வந்துள்ளனர் எனத்தெரிவிக்கும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா இந்த நிலையில் கொழும்பில் தங்கியுள்ள தமிழர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

இது மேலும், அவர்களை பிரிவினையென்ற தீர்மானத்திற்குள் தள்ளிவிடுமென்றும் தெரிவித்தார். கொழும்பு ஹோர்ட்டன் பிளேஸிலுள்ள சுமித்ரையோ மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய சமாதானப் பேரவையின் சமகால அரசியல் நிலைமைகளில் சிவில் சமூகத்தின் பொறுப்புக்கள் என்ற தலையங்கத்திலான ஒருநாள் செயலமர்வின் போதே கலாநிதி ஜெஹான் பெரேரா இதனைத் தெரிவித்தார்.

இன்றைய அரசாங்கம் யுத்த முனைப்புடனேயே செயற்படுகிறது. அதன் மூலமே தீர்வுகாண முடியுமென்றும், அது தொடர்பாக சிங்களமக்கள் மத்தியில் தோற்றப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளை அழிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் வடக்கு, கிழக்கு உட்பட வெளிநாடுகளில் வாழும் 8 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் பிரிவினையே தங்களுக்கு தீர்வென்ற முடிவினை எடுத்துள்ளனர். எனவே, புலிகள் தோல்வியுற்றாலும் மக்கள் மத்தியிலான முடிவுமாறாது.

இதுபோன்றதொரு நிலையில் கொழும்பில் லொட்ஜுகளில் தங்கியுள்ள தமிழ் மக்களை வெளியேறச் சொல்வதென்பது "பிரிவினை" என்ற முடிவுக்கு செல்வதற்கே அது வழிவகுக்கும். பிரிவினை வேண்டுமென்ற தமிழ் மக்களின் மனநிலையை சர்வகட்சி மாநாடு மூலமே தீர்க்க முடியும். அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் யோசனைகள் சிறந்தவை.

கிழக்கு மாகாணத்தில் தொப்பிகலையை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. விரைவில் இங்கு மாகாணசபை தேர்தலொன்றை நடத்தி தனக்கு சார்பான குழுவை அதிகாரத்தில் அமர்த்தும். அதேநேரம், வடக்கில் புலிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் அதிகரிக்கும்.

அதுவும் வெற்றிபெறுமானால் பொதுத் தேர்தலொன்றுக்கு செல்லும். இதன்மூலம் பெரு வெற்றியை பெற முடியும் என்பதே அரசாங்கம் வகுக்கும் வியூகமாகும். ஆனால், வடக்கில் புலிகளை பலவீனப்படுத்துவதென்பது கடினமான காரியம். ஏனென்றால் கிழக்கிலிருந்து வெளியேறிய புலிகள் வடக்கிற்கு சென்றுள்ளனர் எனவே ஆட்பலம் அதிகரித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலைதோன்றி யுத்தம் தொடரப்படுமானால் 2001 இல் ஏற்பட்டது போல் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்குவதோடு பொருளாதார பின்னடைவையும் உருவாக்கும்.

அரசாங்கம் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை பாதுகாத்துக் கொள்வதற்காக ஜே.வி.பி.யையும், ஹெல உறுமயவையும் ஆதரித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அரசாங்கத்தின் சில செயற்பாடுகளை ஜே.வி.பி. எதிர்த்த போதும் புலிகளுக்கு அடிபணியாத அரசின் போக்கை ஆதரிக்கின்றது. இந்தச் சூழ்நிலையிலேயே தமிழர்கள் விரும்பும் தீர்மானத்தை எடுக்க முடியாது அரசு தத்தளிக்கிறது. எனவே, இராணுவத் தீர்விலேயே முனைப்புக் காட்டி ஜே.வி.பி.யினதும், ஹெல உறுமயவினதும், சிங்கள மக்களினதும் ஆதரவை தக்கவைக்க முனைகிறது.

வடகிழக்கு இணைந்த அதிகாரப் பரவலாக்கலையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஒரு பாரிய பகுதியை ஒன்றிணைப்பது சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் பிரிந்துவிடுமென்பது தான். தமிழ் மக்கள் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கலை எதிர்க்கின்றனர். காரணம், மத்திய அரசாங்கம் தான் நினைக்கும் பட்சத்தில் கைப்பற்ற முடியும்.

ஆனால், சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கத்தை தன்னிச்சையாக மத்திய அரசு கைப்பற்ற முடியாது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பாதுகாத்துக்கொள்வதற்காக அரசாங்கம் யுத்தத்தில் அக்கறை செலுத்துகிறது என்றும் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

-Sankathi-

Edited by யாழ்வினோ

இனி, விட்டுக் கொடுப்புகளும் சமரசங்களும் தற்காலிகமானவை!

புரிதலுடனான பிரிவென்பதே நிரந்த சமாதானத்தை தரும்!

வணக்கம் சாணக்கியன் நீண்ட இடைவெளியின் பின்பு

உந்த சிங்கவருக்கு பொறுமை இருக்கிறம் தெளிவு இருக்கிறம் எண்டு சொன்னால் விளங்காது கண்டியளோ போடா மோட்டு சிங்களவனே எண்டு பிடரில இரண்டு முன்று போட்டு சொன்னால் தான் புரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.