Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாராயணனின் நாவசைப்பும் தென்னிலங்கை சலசலப்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாராயணனின் நாவசைப்பும் தென்னிலங்கை சலசலப்பும்

[04 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

ஆயுத உதவிகள் உட்பட தேவைகளுக்காக இலங்கை அரசாங்கம் இந்தியாவையே நாடி வரவேண்டுமெனவும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் செல்லக்கூடாது என்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கடந்தவாரம் சென்னையில் வைத்து தெரிவித்த கருத்து தென்னிலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறைமை, சுயாதிபத்தியம் உள்ள நாடொன்று தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உலகின் எந்தவொரு நாட்டையும் அணுகமுடியும். அவ்வாறான நிலைமையில் சர்வாதிகாரப் போக்குடன் எங்களிடம் தான் ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்று இந்தியா எப்படிக் கூற முடியும் என்று அரசாங்கத்திலுள்ள முக்கியமான கட்சிகளான ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஜாதிகஹெல உறுமயவும் கடுமையான விசனத்தை தெரிவித்துள்ள அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியோ சர்வதேச அரசியலை மதிநுட்பத்துடன் கையாளாததால் ஏற்பட்டதன் விளைவே இதுவென அரசாங்கத்தை சாடியுள்ளது.

`இந்தியா எமது நெருங்கியநாடு, ஆகவே இந்த அந்தஸ்தை நாம் பேணிக்காப்பாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். ஆனால், ஆயுதத்தேவை எழும்போது எமது நாட்டின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு இதர நாடுகளை அணுக வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது என்று அரசாங்கத்தின் மூத்த அமைச்சரும் ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான டி.எம்.ஜயரட்ண தனது அதிருப்தியை நாசுக்காக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேவேளை, கடும்போக்கு சிங்கள தேசிய வாதக்கட்சியான ஹெலஉறுமயவின் உதய கம்மன்பில, எந்தவொரு நாட்டுடனும் தொடர்புகளை வைத்துக் கொள்ளும் உரிமை இலங்கைக்கு உண்டு என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டுமென கடுந்தொனியில் கூறியுள்ளார்.

ஆங்கிலப் பத்திரிகைகளும் நாராயணன் தெரிவித்த கருத்து தொடர்பாக `அடக்குமுறைத் தாராளவாதம்' என்று மகுடமிட்டும் இலங்கைக்கு பகைவர்கள் தேவை இல்லை, `நண்பர்களிடமிருந்து கடவுள் காக்கட்டும்,' `பகைவர்களிடமிருந்து காப்பாற்ற முடியும்' என்றெல்லாம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன.

தெற்காசியாவில் சனத்தொகை, பரப்பளவில் பெரியதும் உலகின் இரண்டாவது பெரிய ஜனநாயக நாடாக கருதப்படுவதுமான இந்தியா எப்போதுமே தனது அண்டை நாடுகளுடனான உறவை பூகோள அரசியல் நலன்களுக்கப்பால் இறுக்கமாக வைத்திருப்பதில்லையென்பதை விளங்கிக்கொள்வதற்கு அரசியல் விஞ்ஞானத்தில் விற்பன்னராக இருக்க வேண்டிய அவசியமில்லை.

1983 இல் இலங்கையில் இனக்கலவரம் வெடித்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும் உடைமைகள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் பேரழிவுகள் ஏற்பட்டபோது அச்சமயம் பாரதத்தின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி நேரடியாகத் தலையிட்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுத்தார்.

தமிழகத்திற்கு இலட்சக்கணக்கில் தமிழ் அகதிகள் சென்றதும் தமிழ் மக்கள் மீதான பேரினவாதிகளின் அடக்குமுறையால் ஏற்பட்ட அனுதாபமும் இந்தியாவின் நேரடித் தலையீட்டுக்கு வழிவகுத்தது ஒருபுறமிருக்க, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அண்டை நாடான இந்தியாவை அலட்சியப்படுத்திவிட்டு அமெரிக்காவுடன் உறவுகளை இறுக்கமாக்க காய்நகர்த்தியதே டில்லியின் நேரடித் தலையீட்டுக்கு வழிவகுத்தது. இதன் பின்னர் 1987 இல் இலங்கை - இந்திய உடன்படிக்கை சைச்சாத்திடப்பட்டமை, இந்தியப்படை வருகை, மாகாணசபை முறைமை அறிமுகம், அமைதிப்படை வாபஸ்பெற்றமை, இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிடாத போக்கை கடைப்பிடிக்கின்றமையெல்லாம் தொடர்நிகழ்வுகள்.

எது எப்படியாயினும் இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் ஆசீர்வாதமின்றி தீர்வு காணமுடியாதென்பது யதார்த்தபூர்வமான விடயமாகும். இதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முதல் சகல தலைவர்களுமே எந்த விதமான தயக்கமும் இல்லாமல் கூறிவருகின்றனர்.

பூகோள அமைப்புரீதியாக சின்னஞ்சிறு தீவு நாடான இலங்கை மிகப் பக்கத்திலுள்ள பெரிய நாடும் கலை, கலாசாரம், மதம் உட்பட சகல வழிகளிலுமே அறுத்துவிடமுடியாத பிணைப்புகளை கொண்டதுமான இந்தியாவிடமிருந்து தளைகளை இலகுவாக அறுத்துவிட முடியாது.

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்திற்கு (சார்க்) வலுவூட்டவேண்டும் என்றும் தெற்காசிய நாடுகள் கூட்டுக் குடும்பமாக செயற்பட்டால் உலகில் பலம் வாய்ந்த சக்தியாக சவால்களை முறியடிக்க முடியுமெனவும் இலங்கை உட்பட பிராந்தியத்திலுள்ள நாடுகளின் தலைவர்களும் புத்திஜீவிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கூட்டுக்குடும்பத்தில் எப்போதுமே மூத்த பிள்ளையின் தீர்மானம், அறிவுரைக்கமையவே ஏனைய குடும்ப உறுப்பினர்கள் கருமமாற்றுவர். தறுதலைப்பிள்ளையானாலும் தலைப்பிள்ளை யென்ற மரியாதை மூத்தபிள்ளைக்கு அளிக்கப்படுவது கீழைத்தேய பாரம்பரியம்.

இதன் பிரகாரம், பிராந்தியத்தில் பெரியண்ணனாக விளங்கும் இந்தியா `பிராந்தியத்தில் பெரிய நாடான எங்களிடமே இலங்கை தேவைகளை நிறைவேற்ற முதலில் நாடி வரவேண்டும்' என்று கூறியிருப்பதை ஆக்கபூர்வமானதாக எடுத்துக்கொண்டால் என்ன? என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். அதுவும் பாதுகாப்புத் தேவைகளுக்காக நாங்கள் உபகரணங்களைத் தருவோம், அழிவுக்கான ஆயுதங்களை தரமாட்டோம், என்றே இந்தியா கூறியுள்ளதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இந்தியாவுடன் எப்போதுமே நல்லுறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் கூட்டமைப்பு எம்.பி.யும் சிரேஷ்ட தமிழ் தலைவருமான இரா.சம்பந்தன் கூறியுள்ளதையும் கருத்திற் கெடுக்க வேண்டியது சாலச்சிறந்ததாகும்.

`ஆயுத கொள்வனவு விவகாரத்தை ஒரு புறம் விட்டு விட்டு இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதே தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உதவும்' என்று மூத்த அரசியல்வாதியான சம்பந்தன் கூறியிருக்கிறார்.

இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை சகல இனங்களுக்கும் ஏற்புடையதான சகல சமூகங்களினதும் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடியதான தீர்வைக் காணுங்கள் என்றே இந்தியா தொடர்ந்தும் கூறிவருகிறது. இந்நிலையில் அந்த நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் கூறிய கருத்துக்காக (அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிக்கை வெளியிடவில்லை) ஆக்ரோஷமாக அறிக்கைகள் விடுவதும் கடந்தகால சம்பவங்களை கிண்டிக்கிளறி அலசுவதும் வெறுப்புணர்வை வளர்க்கவே உதவும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

http://www.thinakkural.com/news/2007/6/4/e...l_page28367.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.