Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்திதொடக்கம் அதிகாலைவரை…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்திதொடக்கம் அதிகாலைவரை…

From-the-beginning-till-the-early-morning--scaled.jpg

அந்திதொடக்கம் அதிகாலைவரை…

அவனுக்குள் கவலை குடிகொண்டிருந்தது. மருத்துவ வீட்டிலுள்ள போராளிகளுக்குக்கூட பலநாட்களாக உணவுக்கு இறைச்சி வழங்கப்படவில்லை.

எப்படியாவது நாளை அவர்களுக்கு உணவுக்கு இறைச்சி வழங்கவேண்டுமென நினைத்தான். ஆனால் அதற்கேற்ற பொருளாதார நிலை இருக்கவில்லை. என்ன செய்யலாமென சிந்திக்கலானான்.

பக்கத்தூரிலுள்ள குளத்திற்கு காட்டிலிருந்து கட்டாக்காலி குழுவன் காளைகள் வருவதாக ஊரவர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவனுக்குள் நம்பிக்கை பிறந்து கவலை கரைந்துபோனது. பணியாளர்களில் ஒருவரை அழைத்துக்கொண்டு குளக்கட்டு நோக்கிப் பயணித்தான்.

அவர்கள் குளக்கட்டை அண்மித்தபோது அவனுக்குத் தெரிந்த ஊரவர்கள் மான், மரை வேட்டையாடுவதற்காக ‘சொட்கண்ணோடு’ குளக்கட்டு நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவன் அவர்களுக்கு வந்த நோக்கத்தைத் தெரியப்படுத்தினான். அவர்கள் அவனை, தாங்கள் வேட்டையாடுவதற்காக அமைத்திருந்த மறைவிடத்திற்கு கூட்டிச் சென்றார்கள். மறைவிடம் குளக்கட்டுக்கருகில் புதர்நடுவில் இருந்தது.

இருள் திட்டுக்கள் சூழலை முழுமையாக ஆக்கிரமிப்பதில் பெரு வெற்றி கண்டுகொண்டிருந்தன. அவன் அவர்களோடு மறைவிடத்தில் கட்டாக்காலி குழுவன் காளைகளை வேட்டையாடுவதற்காகக் காத்திருந்தான்.

துப்பாக்கியை தயார் நிலையில் வைத்தபடி குளக்கரையையே பார்த்தபடியிருந்தான். அவனோடு இருந்த ஊரவர்கள் சுருட்டுப் புகைத்தபடி இருந்தார்கள். சுருட்டுப்புகை அவனுக்கு ஒவ்வாமையாக இருந்தபோதும் பொறுமையாக இருந்தான்.

மாசிப்பனி மூசிர்பெய்யத் தொடங்கியிருந்தது. சருகுண்ணிகளும் நுளம்புகளும் அவனின் உடலிலிருந்து குருதியைக் குடித்துக்கொண்டிருந்தன. ஆட்காட்டிப் பறவையொன்று கத்தியபடி குளத்துக்குமேலால் பறந்தது. அவன் குளக்கரையை உற்றுநோக்கினான். அசமாத்தம் எதுவுமில்லை. பொழுது நள்ளிரவைத் தாண்டியபோதும் வேட்டை மிருகங்கள் எதுவும் வரவில்லை. ஊரவர்கள் சோர்ந்து போய் உறங்கிவிட்டார்கள்.

அவனுக்கு உறக்கம் வரவில்லை. மருத்துவ வீட்டிலுள்ள போராளிகளே நினைவில் வந்தார்கள். கிழக்கு வெளிக்கும் நேரம் அண்மித்துக்கொண்டிருந்தது. அவனை மீPண்டும் கவலை தொற்றிக்கொண்டது. ஆனால் அவன் சோர்ந்து போகவில்லை.

அந்தக்கணத்தில் குளக்கரைநோக்கி யானைபோன்ற பெரிய உருவமொன்று வருவது அவனின் கண்களில் தெரிந்தது. உற்று நோக்கினான். வருவது யானையில்லை. கட்டாக்காலி குழுவன் காளைதான். துப்பாக்கியை நிலைப்படுத்தினான். குழுவன் காளை குளக்கரையை வந்தடைந்திருந்தது. விசைவில்லை அழுத்தினான்.

குறிபிசகாத சூடு. வெடியோசை மயான அமைதியைக் குலைத்தது. காளை அந்த இடத்திலேயே விழுந்தது. சூட்டுச்சத்தம் கேட்டு ஊரவர்கள் விழித்துக்கொண்டார்கள்.

அவனுக்குள் மகிழ்ச்சி பிறந்தது அவனும் பணியாளரும் ஊரவர்களும் காளையை நோக்கி நடந்தார்கள். பனி கொட்டிக்கொண்டே இருந்தது. கிழக்கு வெளிப்போடு அவர்களின் மனங்களும் வெளித்திருந்தன.

ஆக்கம்: ஆ.ந.பொற்கோ.
நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி, சித்திரை 2004).

 

https://thesakkatru.com/from-the-beginning-till-the-early-morning/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.