Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 ஆவது திருத்தச்சட்டம்: உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு அதிக நீதியரசர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20 ஆவது திருத்தச்சட்டம்: உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு அதிக நீதியரசர்கள்

 

nimal-.jpg

அரசியலமைப்பு திருத்தத்தில் உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிக நீதியரசர்களை நியமிப்பதற்கான திட்டங்களும் இருக்கும் என்று அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஹலி-எல பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த நடவடிக்கையின் நோக்கம் தாமதப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்ற வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமைச்சரவை உபகுழு,19 ஆவது திருத்தம் குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் அமைச்சரவைக்கு அறிக்கை அளிக்கும், எந்த பிரிவுகளை வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது திருத்த வேண்டும் என்பது குறித்து அமைச்சரவைக்கு அறிக்கையளிக்கும் என்றும் கூறினார்.

நீதிச் சேவை ஆணைக்குழு மற்றும் வாக்காளர்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான விடயங்களும் இந்த திட்டங்களில் அடங்கும் என்று அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்தார்.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் முடிவுகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும் என்று நீதித்துறை துறையில் உள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் இந்த விவகாரம் கவனத்தில் கொள்ளப்படும் அதேநேரம் பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதிகளை வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பதற்காக, புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுவதும் அரசியலமைப்பு திருத்தத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

   by : Jeyachandran Vithushan

http://athavannews.com/20-ஆவது-திருத்தச்சட்டம்-உய/

  • கருத்துக்கள உறவுகள்

20 ஆவது திருத்தச் சட்டம் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு; முக்கிய அம்சங்கள் என்ன?

20th.jpg

 

20 ஆவது திருத்தச் சட்டத்துக்கான வரைவு, அரசாங்க சட்ட வரைவாளரால் வரையப்பட்டு, சட்டமா அதிபரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமா அதிபருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இந்த வரைவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மூத்த அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சட்டமா அதிபரின் கருத்து மற்றும் ஒப்புதல் கிடைத்த பின்னர், இந்த சட்ட வரைவு தேவையான மாற்றங்கள் செய்யப்படுவதற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது,

அதன் பின்னர் இந்த திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

20 ஆவது திருத்தச் சட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுக்கு துணைப் பிரதமர் அல்லது மூத்த அமைச்சுப் பதவியை வழங்கும் வகையில் யோசனை முன்வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த போதும், அவ்வாறான உள்ளடக்கங்கள் ஏதும் வரைவில் இடம்பெறவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை 19 ஆவது திருத்தச்சட்டத்தில் மூலம் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கு இருந்த தடை நீக்கப்படுவதாக இந்த திருத்த வரைவில் குறிப்பிடப்பட்டள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.ilakku.org/20-ஆவது-திருத்தச்-சட்டம்-சட/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.