Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்புஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்புஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை

 
batti-church-1-696x392.jpg

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை இன்று காலை மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமானது.

கடந்த புதன்கிழமை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாளை விசேட திருப்பலியுடன் வருடாந்த திருவிழா நிறைவுபெறவுள்ளது.

வடக்கில் மடு திருத்தலமும் கிழக்கில் ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா திருத்தலமும் கிறிஸ்தவ மக்களின் பாதயாத்திரைக்கான திருத்தலமாக கொள்ளப்பட்டு வருடாந்தம் இங்கு பாதயாத்திரைகள் மேற்கொள்ளப்பட்டுவருகினறன.

இதனை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் விசேட ஆராதனையுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது.

இந்த ஆராதனையினை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை நடாத்தியதை தொடர்ந்து பாதயாத்திரை ஆரம்பமானது.

செங்கலடியில் இருந்தும் மட்டக்களப்பிலும் இருந்து ஆரம்பமான இந்த பாதயாத்திரையில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

batti-church-2.jpg

மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமான பாதயாத்திரை சேற்றுக்குடா புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு சென்று அங்கு விசேட பூஜையினை தொடர்ந்து வவுணதீவு ஊடாக ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்தினை சென்றடையவுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை (07) காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொடியிறக்கத்துடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.

http://www.ilakku.org/மட்டக்களப்புஆயித்தியமல/

 

 

சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை!

walk-4-1.jpg?189db0&189db0

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை இன்று (05) காலை மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமானது.

கடந்த புதன்கிழமை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில், நாளை விசேட திருப்பலியுடன் வருடாந்த திருவிழா நிறைவுபெறவுள்ளது.

வடக்கில் மடு திருத்தலமும் கிழக்கில் ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா திருத்தலமும் கிறிஸ்தவ மக்களின் பாதயாத்திரைக்கான திருத்தலமாக கொள்ளப்பட்டு, வருடாந்தம் இங்கு பாதயாத்திரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகினறன.

இதனை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் விசேட ஆராதனையுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது.

குறித்த ஆராதனையினை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை நடத்தியதை தொடர்ந்து பாதயாத்திரை ஆரம்பமானது.

செங்கலடியில் இருந்தும் மட்டக்களப்பில் இருந்தும் ஆரம்பமான இந்த பாதயாத்திரையில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பலர் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமான பாதயாத்திரை சேற்றுக்குடா புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு சென்று அங்கு விசேட பூஜையினை தொடர்ந்து வவுணதீவு ஊடாக ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்தினை சென்றடையவுள்ளது.

  • walk-3.jpg?189db0&189db0
  • walk-1.jpg?189db0&189db0

     

https://newuthayan.com/சதாசகாயமாதா-ஆலயத்திற்கா/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.