Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணத்தை வென்று மீண்ட மாமனிதர் மறைந்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தை வென்று மீண்ட மாமனிதர் மறைந்தார்

pulavards5.jpg

பெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பாசறை என்னும் உலைக்களத்தில் நேர்த்தியாக வடித்தெடுக்கப்பட்ட கூர்வாள் புலவர் கலியபெருமாள் ஆவார். அதன் பின்னர் மார்க்ஸ், லெனின், மாவோ ஆகியோரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு உழைப்பாளி வர்க்கத்திற்காக அயர்வின்றிப் போராடிய போராளியாகத் திகழ்ந்தார்.

தமிழக வரலாற்றில் அடித்தட்டு மக்களின் புரட்சிக்கான அத்திவாரத்தை அமைத்த பெருமைக்குரியவர் அவர். விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பினால் கொழுத்த நிலப்பிரபுக்களின் கொட்டத்தை ஒடுக்க விவசாயிகளைத் திரட்டிப் பெரும் போராட்டத்தை நடத்தினார். புரட்சிகர தோழர்களுடன் வயலில் இறங்கி அறுவடை செய்து தானியங்களைக் கைப்பற்றி ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் துணிகரமான செயலை முதன்முதலாக முன்னின்று நடத்தியவர் அவரே.

அவருக்கு எதிராக நிலப்பிரப்புக்களின் குண்டர் படையும் ஆட்சியாளரின் காவல் படையும் அணிவகுத்தன. தமிழக வரலாற்றில் அவரைப் பிடிப்பதற்காக நடத்தப்பட்ட மனித வேட்டையைப் போல ஒரு வேட்டை இதற்கு முன்னாலோ பின்னாலோ நடைபெற்றதில்லை. இந்தக் கொடிய அடக்குமுறைகளுக்கு நடுவேதான். சினவேங்கையாக அவர் சீறியெழுந்து போராடினார். இதன் விளைவாக அவர் மட்டும் அல்ல, அவருடைய குடும்பம் முழுவதுமே சொல்லொண்ணாத சித்திரவதைகளுக்கும் சீரழிவுக்கும் ஆளாயிற்று. புலவருக்கும் அவரது மூத்த மகன் வள்ளுவனுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

புலவரின் புதல்வர்களான வள்ளுவனும், சோழ நம்பியாரும் தங்கள் வாழ்வின் வசந்த காலத்தில் அடியெடுத்து வைத்தபோது கொடுஞ்சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்தார்கள். புலவரின் துணைவியார் வாலாம்பாள் அம்மையாரோ வெடிகுண்டு வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்தார். புலவரின் மைத்துனியாக இருந்த ஒரே காரணத்திற்காக. அனந்த நாயகி அம்மையாரும் காவலர்களின் சித்திரவதைகளுக்கு தப்பவில்லை. இறுதியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாடினார். புலவரின் புதல்விகளான தமிழரசி, கண்ணகி, அஞ்சுகம் ஆகியோரும் வள்ளுவனுக்கு மனைவியாக வாய்த்த அகிலாவும் ஆதரிப்பாரின்றி சொல்லொண்ணாத துயரங்களுக்கு ஆளாகி பெற்றோர்களைச் சந்திக்க சிறைசிறையாய் அலைந்த கொடுமை நெஞ்சம் பதற வைக்கும் கொடுமையாகும். புலவரின் உறவினர்களாகப் பிறந்த ஒரே பாவத்திற்காக இராசமாணிக்கம், ஆறுமுகம், மாசிலாமணி ஆகியோரும் ஆயுள் தண்டனைகளைப் பெற்றனர். தமிழக வரலாற்றில் புலவரும் அவரது குடும்பத்தினரும் செய்த தியாகத்திற்கு ஈடான தியாகத்தை வேறு யாரும் செய்ததில்லை என்றுதான் கூறவேண்டும்.

நெடிய மதில்களும் பூட்டிய இரும்புக் கதவுகளும் நிறைந்த சிறையில் அவர் ஒருபோதும் அடங்கியிருக்கவில்லை. ஆணவம் மிக்க அதிகாரிகளின் அடக்கு முறைகளை எதிர்த்து இடைவிடாமல் சிறைக்குள் போராடினார். அதனால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக நேர்ந்த போதிலும் அவர் சித்தம் கலங்கவில்லை. உறுதியாக நின்று இடைவிடாது போராடினார்.

சென்னைச் சிறையில் அவர் இருந்தபோது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களும் சிலமாதங்கள் அந்தச் சிறையில் இருந்தார். உண்மையான புரட்சியாளர்களான அவர்கள் இருவரும் விரைவில் மிக நெருங்கிப் பழகி மாறாத நட்புணர்வு கொண்டனர். பிற்காலத்தில் பிரபாகரன் அவர்கள் என்னிடம் புலவரைப் பற்றிக் கூறும்போது "நான் பார்த்த தமிழ்நாட்டுத் தலைவர்களில் உறுதியும் எதிர்நேர்ந்த கலங்காத உள்ளமும் நிறைந்தவர் புலவர் கலியபெருமாள் ஆவார். அவர் உண்மையான மக்கள் தொண்டர்" என வாயாரப் புகழ்ந்துரைத்தது இன்னமும் என் செவிகளில் ரீங்காரம் செய்துகொண்டிருக்கிறது.மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்குமரத்தின் நிழலில் அவர் வாடியபோது அவருக்காக வெளியே மாபெரும் மக்கள் இயக்கம் கிளர்ந்தெழுந்ததன் விளைவாக அவரது தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டு சிறிது காலத்தில் சுதந்திரக் காற்றை சுவாசித்தார். வெளியே வந்தும் சும்மாயிருக்கவில்லை. வழக்குகளும், காவலர்களின் கழுகு கண்களும் அவரைச் சுற்றிச் சுழன்றுக்கொண்டிருந்த வேளையிலும் தொடர்ந்து மக்கள் பணியினைச் செய்துகொண்டிருந்தார்.

முதுமையும் இயலாமையும், நோயும் அவரை வாட்டிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் கொஞ்சமும் கலங்காது அவர் ஆற்றிவந்த தன்னலமற்ற தொண்டினை நினைக்கும்தோறும் நெஞ்சம் நெக்குருகுகிறது. தியாகச் சுடராக ஒளிர்ந்த அவரின் அருமை பெருமைகளை உணரவேண்டிய அளவுக்கு தமிழர்கள் உணரவில்லை என்பதை மிக்க துயரத்துடன் பதிவு செய்கிறேன். அவரது வாழ்வு தியாக வாழ்வாகும். மக்களின் நலன் ஒன்றே அவரது குறிக்கோளாக அமைந்திருந்தது. பொதுத்தொண்டாற்ற வருகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஏதேதோ செய்து தங்கள் சொந்த வாழ்வை வளமாக்கிக் கொண்டவர்கள் நடுவில் அவர் ஒரு அபூர்வப் பிறவியாகத் திகழ்ந்தார். அவர் நினைத்திருந்தால், அல்லது சற்று விட்டுக்கொடுத்திருந்தால் அவரது குடும்பத்தினரும் பல தலைமுறைகளுக்கு வளமான வாழ்வைப் பெற்றிருப்பார்கள். அடக்குமுறைகள், சிறைவாசங்கள், அடுக்கடுக்கான வழக்குகள் ஆகியவற்றின் விளைவாக சீரழிக்கப்பட்ட அவரது குடும்பம் இன்றும் வறுமையில் வாடுகிறது. ஆனாலும் அதைப்பற்றி அவர் ஒருபோதும் கவலைப்படாமல் இலட்சியப்பூர்வமான வாழ்க்கை வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

எதிர்காலத் தமிழகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் புலவர் கலியபெருமாளின் தியாக வாழ்க்கை வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழும். தமிழ்த்தேசியப் பூங்காவில் பூத்த அபூர்வ மலர் அவர். வாடா மலரான அந்த மலரும் அதன் மணமும் இன்னும் பல தலைமுறைகளுக்கு தமிழர் சமுதாயத்திற்கு மெருகூட்டும்.

பிறவிப் போராளி

- உணர்ச்சிப் பாவலர் காசி. ஆனந்தன்

நெடும்புகழ் வீரம் கொண்ட தமிழ்நிலம்

நெருப்பெழ நின்றநாள் கண்டோம்!

கடும்புயல் அடித்தது! கலியபெருமாள்

களம் ஆட மண்மிசை வந்தான்!

கொடும்பகை நடுங்க வெடித்தது புரட்சி!

கொதித்தது கொதித்தது நாடு!

சுடும்படை நடுவே துணிவோடு சுழலும்

தோள்மலை வீரர் பிறந்தார்!

பிணைத்த விலங்குகள் அறவே தமிழ்மறம்

பெருக்கினான் கலிய பெருமாள்!

தனைத்தன் குடும்பத்தை களம் தந்தான்!

தடி அடி தழும்புகள் ஏற்றான்!

சுணைத்த தமிழன்! பன்னீராண்டுகள்

சூழ்சிறை மதிலிடை வாழ்ந்தான்

அணைத்த தூக்குத் தண்டனை நொறுக்கினான்!

ஆற்றலன்! தலைவனாய் நிமிர்ந்தான்!

உற்றதாய் மண்மிசை ஒடுக்குமுறைகள்

உடைந்து துகள்பட வந்தான்!

கற்றவன் புலவன் கலிய பெருமாள்

கண்துயிலாத போராளி!

நற்றமிழ்த் தேசியம் நாட்டில் இருத்தினான்!

நாற்றிசை பாசறை கண்டான்!

கொற்றம் பிறக்கப் பிறந்தவன் கொள்கை

கூவடா! கூவு நீ சங்கே!

-தென்செய்தி

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.