Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் பெண்ணுக்கு கொரோனா: 60 பேருக்கு சுயதனிமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பெண்ணுக்கு கொரோனா: 60 பேருக்கு சுயதனிமை

கம்பஹா, திவுவுலுப்பிட்டியவில் 39 வயதான பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பெண், கொழும்பு  ஐடிஎச் க்கு மாற்றப்பட்டுள்ளார் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

காய்ச்சல் காரணமாக அந்தப் பெண், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்தே, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, அந்த வைத்தியசாலையைச் சேர்ந்த பணியாளர்கள் 15 பேர் மற்றும் அப்பெண் கடமையாற்றிய  நிறுவனத்தைச் சேர்ந்த 45 பேர் அடங்களாக 60 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலங்கையில்-பெண்ணுக்கு-கொரோனா-60-பேருக்கு-சுயதனிமை/150-256223

 

கம்பஹாவில் ஊரடங்கு

கம்பஹா, திவுலப்பிட்டிய, மினுவங்கொடை உள்ளிட்ட சில கிராம சேவகர் பிரிவுகளுக்கு ஊரடங்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம்மற அறிவித்தல் வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்தே, இவ்வாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

http://www.tamilmirror.lk/செய்திகள்/கம்பஹாவில்-ஊரடங்கு/175-256224

 

கொரோனா தொற்றாளர் பணிபுரிந்த ஆடைத் தொழிற்சாலைக்குப் பூட்டு

 

புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட திவுலப்பிட்டிய பிரதேசத்தைச்  சேர்ந்த பெண் பணிபுரிந்த ஆடைத்தொழிற்சாலையில், 400 பேர் வரை சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொழிற்சாலை, மினுவாங்கொட- யக்காதுவ பிரதேசத்தில் உள்ள முன்னணி ஆடைத்தொழிற்சாலை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கொரோனா தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பெண்ணுடன் ஒன்றாக பயணித்த, 40 பேர், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பெண்ணின் கணவர், அவரின் பிள்ளைகள் நால்வர் மற்றும் பெண்ணின் தந்தை ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவரது ஒரு குழந்தை மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவர் பணிபுரிந்த ஆடைத்தொழிற்சாலை  தற்போது சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கொரோனா-தொற்றாளர்-பணிபுரிந்த-ஆடைத்-தொழிற்சாலைக்குப்-பூட்டு/175-256225

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுடன் பணிபுரிந்த பெண்கள் இருவர் உட்பட 20 பேர் யாழில் தனிமைப்படுத்தப்பட்டனர்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் ஒருவர் கடந்த 30ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.இந்நிலையில் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுடன் பணிபுரிந்த புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை அவர் கடந்த 4 நாட்களில் பழகியவர்கள் தொடர்பாக தகவல் பெறப்பட்டு அவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய குறித்த இருவரும் பேருந்திலேயே புங்குடுதீவுக்கு சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் மற்றுமொரு பெண் இன்று ஞாயிற்றுக்கிழமையே வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து, அவரது குடும்பமும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் இருவருடனும் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இன்று மாலை பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-தொற்றுக/

  • கருத்துக்கள உறவுகள்

UPDATE ;- மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்து செல்லப்படவுள்ள புங்குடுதீவு பெண்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும்  புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு தொற்று  இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்  வைத்தியர்  த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பெண் பணியாளருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றுமுன்தினமிரவு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பணி புரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஆடைத் தொழிற்சாலையில் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் ஒருவர் கடந்த 30ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.

அவர் கடந்த 4 நாட்களில் பழகியவர்கள் தொடர்பில் தகவல் பெறப்பட்டு அவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் மற்றைய பெண்  ஞாயிற்றுக்கிழமையே வீடு திரும்பியுள்ளார். அவரது குடும்பமும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். 

நேற்றைய தினம் வீடு திரும்பிய பெண்ணுக்கே கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

 இதேவேளை கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார் என  வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/91393

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.