Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவின் கொழும்பு நடவடிக்கையில் கேள்விக்குறியாகிப் போன இளம் பெண்ணின் எதிர்காலம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவின் கொழும்பு நடவடிக்கையில் கேள்விக்குறியாகிப் போன இளம் பெண்ணின் எதிர்காலம்

[வெள்ளிக்கிழமை, 8 யூன் 2007, 10:09 ஈழம்] [ப.தயாளினி]

சிறிலங்காவின் கொழும்பு நகரில் மகிந்த மேற்கொண்ட தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கையினால் திருமணத்துக்கு காத்திருந்த இளம்பெண்ணின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.

யாழ். கரவெட்டியைச் சேர்ந்த சரஸ்வதி அம்மாள் மற்றும் அவரது 23 வயது மகள் தர்சனி செல்வம் ஆகியோர் வெள்ளவத்தை விடுதியில் தங்கியிருந்தனர்.

தனது கணவர் மறைந்ததையடுத்து கரவெட்டியில் உள்ள தங்கள் வீட்டை அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொண்டு கொழும்பில் தங்கியிருந்து, மகள் தர்சனியின் திருமணத்துக்கான ஏற்பாடுகளை சரஸ்வதி அம்மாள் செய்து வந்தார். லண்டனில் உள்ள ஒருவரைத் தேர்வு செய்து திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. எதிர்வரும் புதன்கிழமை திருமணத்தை நடத்துவதற்காக திருமண மண்டபத்தையும் முன்பதிவு செய்துவிட்டு வெள்ளவத்தை விடுதியில் தங்கியிருந்தனர்.

மகிந்தவின் நடவடிக்கையினால் தாயும், மகளும் தற்போது அந்த விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். தனது மகளின் திருமணத்துக்காக தாங்கள் தங்கியிருக்கிறோம் என்றும் அரங்கத்தை முன்பதிவு செய்துள்ளமைக்கான பற்றுச்சீட்டுக்கள் உள்ளிட்டவைகளை எடுத்துக் காண்பித்தும் சிறிலங்கா காவல்துறையினர் அதனைப் பற்றிக் கவலை கொள்ளாமல் வெளியேற்றிவிட்டனர். தாய் மற்றும் மகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

சரஸ்வதி அம்மாளின் யாழ். கரவெட்டியில் உள்ள வீடு தற்போது அடமானம் வைக்கப்பட்டுவிட்டது.

எதிர்வரும் புதன்கிழமையோ திருமணம் நடைபெற வேண்டும்.

மகிந்தவினால் சிங்களவர் பிரதேசத்தில் தங்க முடியாத நிலை.

ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் சிங்களவர் அரசாட்சியில் இத்தகைய அவலத்தைத்தான் காலம் காலமாக எதிர்கொண்டுதான் ஆகவேண்டுமா?

http://www.eelampage.com/?cn=32083

அவ்வளவு பணத்ததைக்கட்டி விடுதிகளில் தங்க பெரும்பான்மையான மக்களுக்கு இப்படி ஒரு வாழ்வாதார காரணங்கள் இருக்கிறது..

கொடூரர்களின் கண் மூடித்தனமான செயல்கள் பிறரை எவ்வளுவ அல்லல் செய்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

302 தமிழர்கள்தான் வெளியேற்றப்பட்டனர்

: சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரட்ண

ஜவெள்ளிக்கிழமைஇ 8 யூன் 2007இ 11:48 ஈழம்ஸ ஜப.தயாளினிஸ

கொழும்பில் உள்ள 20 ஆயிரம் தமிழரில் 302 பேர்தான் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தி பிரிவைச் சேர்ந்தவரும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சருமான ரஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது:

கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றிய நடவடிக்கையானது தவறானது. ஆனால் யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் தவிர்க்க முடியாதவை.

விடுதலைப் புலிகளின் பிரதான இலக்காக கொழும்பு நகரம் உள்ளது. ஆகையால் இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை சரி என கூறவில்லை. உண்மையில் அது தவறு. இவை அனைத்தும் நிறுத்தப்பட வேண்டுமெனில் அமைதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கொழும்பில் விடுதிகளில் தங்கியிருக்கும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் தமிழர்களில் 302 பேர்தான் வவுனியாஇ மட்டக்களப்புக்கு 9 பேரூந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். 7 பேரூந்துகள் வாடகைக்கும் இரண்டு சாதாரண பயணிகள் பேரூந்தும் அவர்களை திருப்பி அனுப்ப பயன்படுத்தப்பட்டன.

சாதாரண மக்களைப் போல் கொரில்லாக்கள் பாடசாலைகளுக்கும்இ கடை வீதிகளுக்கும் செல்கின்றனர். தேயிலைத் தோட்டம் ஒன்றின் கண்காணிப்பாளர் பணியில் இருப்பது போல் நடித்த போதுதான் ஜே.வி.பி.யின் மறைந்த ரோகன விஜவீர கைது செய்யப்பட்டார்.

ஈராக்கின் சதாம் உசேனின் இரு மகன்களைக் கொல்வதற்காக 100-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசியது. வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வெளியேறியுள்ளனர். அந்த வகையில் அவர்களின் மனித உரிமையும் மீறப்பட்டுள்ளதுதான் என்றார் அவர்.

நாடாளுமன்றில் மகிந்தவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பேசியதாவது:

1983 ஆம் ஆண்டு இனப்படுகொலையைவிட மிகக் கொடுமையானது இந்நடவடிக்கை. அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் இந்த நடவடிக்கையை ஆதரிக்கவில்லை. எந்தவித காரணமுமின்றி தமிழர்களை கொழும்பிலிருந்து வெளியேற்றியுள்ளனர். அதேபோல் முஸ்லிம் மற்றும் சிங்களவர்களையும் வெளியேற்றுவீர்களா? ஏன் தமிழர்களை மட்டும் வெளியேற்றினீர்கள்?

சந்தேக நபர்கள் எனக் கருதினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுங்கள். விடுதிகளில் தங்கியிருக்கும் ஏழைகளை ஏன் இலக்கு வைத்து இந்நடவடிக்கை மேற்கொள்கிறீர்கள்? இதே போல் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கியிருப்போர் மீது நடவடிக்கை மேற்கொள்வீர்களா?

மருத்துவ சிகிச்சைகளுக்காகவும் வெளிநாட்டுக்குச் செல்லும் உறவினர்களை அனுப்புவதற்காகவும் வந்தவர்கள்தான் நேற்றை நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்றார் ஹக்கீம்.

ஆக விடுதலைப்போராளிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்ற சிங்கள அரசினது வாசகத்தை தாங்களாகவே பொய் என சொல்லிவிட்டார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.