Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயக விடுதலையென்ற உயரிய இலட்சியத்திற்காக அயராது உழைத்த இலட்சிய வீரர்கள்

 

 

Ideal-soldiers-who-worked-tirelessly-for-the-lofty-goal-of-homeland-liberation.jpg

 

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்.
04.11.1996

பாரிஸ் நகரில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலகத் தலைமைச் செயலகத்தில் முக்கிய பணியாளர்களாகப் பணிபுரிந்த திரு.கந்தையா பேரின்பநாதன் (நாதன்) திரு. கஜேந்திரன் (கஜன்) ஆகிய எமது உறுப்பினர்கள் இருவர் பகைவனின் சூழ்ச்சியால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை அறிந்து நான் ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைகின்றேன்.

திரு. நாதன் எமது விடுதலை இயக்கத்தின் ஒரு மூத்த உறுப்பினர் நேர்மையும் கண்ணியமும் மிக்கவர். விடுதலை இலட்சியத்தில் அசையாத உறுதி கொண்டவர். நீண்ட காலமாக சர்வதேச நிதி திரட்டும் பெரும் பொறுப்பைச் சுமந்து உலகெங்கும் அலைந்து அயராது உழைத்தவர். கடும் உழைப்பாலும், செயல்திறனாலும் தமிழீழ விடுதலைப் போருக்கு அவர் ஆற்றிய பணி அளப்பரியது.

திரு. கஜன் எமது இயக்கத்தின் பரந்துரை செயற்பாட்டாளராகப் பணி புரிந்தவர். தாயக விடுதலையில் ஆழமான பற்றுடையவர். ஈழமுரசு ஆசிரியராகப் பணியாற்றி எமது இலட்சியப் போருக்கு ஆதரவு திரட்டுவதில் அரும் தொண்டு புரிந்தவர். நிதி சேகரிப்பு, பரந்துரை போன்ற முக்கிய சர்வதேசப் பணிகளில் ஈடுபட்டிருந்த இம் முக்கிய பொறுப்பாளர்கள் கொலையுண்டமை எமது இயக்கத்துக்கு மட்டுமன்றி எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பாரிய இழப்பாகும். பறந்து வளர்ந்து உலகெங்கும் கிளை பரப்பி நிற்கும் எமது விடுதலை இயக்கத்தின் சர்வதேசக் கட்டமைப்பை சீர்குலைத்து அனைத்துலக ரீதியாக எமக்கு அணி திரளும் ஆதரவை முறியடிப்பதற்காக சிங்கள இனவாத அரசு தீவிரமாகத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதானது உலகறிந்த உண்மை. வெளிநாடுகளில் எமது இயக்கத்தை தடைசெய்து, சர்வதேச தமிழ் சமூகத்திடம் இருந்து பெறப்படும் பங்களிப்பை முடக்கி ஈழத்தமிழரின் சுதந்திர இயக்கத்தை நசுக்கிவிட சந்திரிகா (சிங்கள) அரசு பகிரங்கமாகப் பகீரத முயற்சி செய்கின்றது. சிறிலங்கா அரசின் வெளிநாட்டு ராஜதந்திர நடவடிக்கைகள் இந்த நோக்கங்களைக் கொண்டமை என்பது சர்வதேச சமூகத்திற்குத் தெரிந்த விடயம். இந்த இராஜதந்திர முயற்சிகள் பலனளிக்காது போகவே சிறிலங்கா அரசு நாசகார சூழ்ச்சியில் இறங்கியிருக்கின்றது. இந்தச் சூழ்ச்சியின் கோரமான வடிவமாக இந்தக் கொலைகள் நடைபெற்றதென நாம் நம்புகின்றோம்.

தமிழருக்கு எதிரான சிறிலங்கா ஆட்சியாளரின் அரச பயங்கரவாதம் இப்பொழுது கடல் கடந்து சென்று சர்வதேச அரங்கில் மேடை ஏறியிருக்கின்றது. அரூபகரங்க்களால் எமது அன்புக்குரியவர்கள் அநியாயமாக உயிர் நீத்துள்ளனர். இக்கோழைத்தனமான கொடூரமான செயலின் நோக்குதாரிகள் யார் என்பதை சர்வதேச உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் சர்வதேச உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் சர்வதேச சட்டங்களையும் மனித உரிமைகளையும் மீறும் பயங்கரவாதிகள் யார் என்ற உண்மை உலகிற்குப் புலனாகும். எதிரியின் கையாலாகாத்தனத்தின் அதிட்டமான வெளிப்பாடாகவே நாம் இந்தப் படுகொலைகளைக் கருதுகின்றோம். எமது போராட்டத்திற்கு ஆதரவு நல்கும் உலகத் தமிழ் சமூகத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு சவால் இது. எதிரியின் இச் சவாலை துணிவுடன் எதிர்கொண்டு தாயாக விடுதலைக்கு தொடர்ந்தும் உறுதியுடன் பணியாற்றுமாறு உலகத் தமிழர்களை நான் வேண்டுகின்றேன்.

மிகவும் சோதனையான இக்காலகட்டத்தில் நெஞ்சத்தை உலுக்கும் வேதனைகளையும் நாம் சுமந்து நின்று மிகவும் நிதானமாக மிகவும் விழிப்பாக உறுதி தளராது எமது இலட்சியப் பணியைத் தொடர வேண்டும். தாயக விடுதலையென்ற உயரிய இலட்சியத்துக்காக அயராது உழைத்து தமது இன்னுயிரை அர்ப்பணித்த இலட்சிய வீரர்களுக்கு எனது இதய அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறேன்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்.
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

 

https://thesakkatru.com/ideal-soldiers-who-worked-tirelessly-for-the-lofty-goal-of-homeland-liberation/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூரியத் தேவனின் நேரிய கதிர்கள்…

 

Sooriya-Thevanin-Neriya-Kathirkal-1024x8

நாடுகடந்து ஓடிய வேர்கள்
நாடிய விடுதலை தேடிய பேர்கள்
சூரியத் தேவனின் நேரிய கதிர்கள்
பாரிஸ் நகரின் வீரியப் புலிகள்.

தாயகம் தாண்டிய வேகத்தின் தடங்கள்
தாய்மண் வணங்கிடும் காவியத் திடங்கள்
ஓவியமாகிப் பேசிடும் படங்கள்
தீவிரமான போராட்ட வடங்கள்.

பனியின் மழையிலும் பணிகள் தொடர்ந்தவர் – புலி
அணிகள் வென்றிட பணபலம் தந்தவர்
புலிகள் பெருமை போற்றிட நடந்தவர்
தமிழர் மனதில் பதிந்து படர்ந்தவர்.

ஈழமுரசாகி முழங்கிய தோழர்
எரிமலைக் குரலாய் மூசிய வீரர் – எம்
ஜீவகானம் இசைத்திட்ட குயில்கள் – எமக்காய்
ஜீவனைக் கொடுத்த நிதர்சனக் கவிகள்.

கிட்டண்ணா வழிதொடர்ந்த சிட்டுக் குருவிகள் – அவர்
தொட்ட திசைகளிற் பாய்ந்த அருவிகள்.
தட்டித் தட்டிப் புடம் போட்ட தங்கங்கள்
எட்டும் விடியலின் இலட்சிய நாயகர்கள்.

உலகத்தின் நோக்கைத் தமிழர்பாற் திருப்பியவர்
உரிமைப் போரினது நியாயத்தை விளக்கியவர்
தலைவரின் சொல்லுக்கு செயலாய் நின்றவர்
மலைபோன்ற துயரிலும் அசராமல் வென்றவர்.

வசதிகள் துறந்தவர் வாய்ப்புகள் துறந்தவர் – நடு
நிசியிலும் பறந்து நேரங்கள் மறந்தவர்.
சதியினில் விழுந்து வீரச்சாவினை அணைத்தார் – அவர்
பதினெட்டாம் ஆண்டு நினைவிலே நடக்கிறோம்…

தேசம் நகர்ந்தும் தேசத்திற்காய் வாழும்
தேசப் புதல்வரை எம் தேசம் மறக்காது – தமிழத்
தேசம் மலர்கையில் தேசிய வீரரிவர்
தேசக் காவலராய் தேசத்தை ஒளிரச்செய்வர்.

கவியாக்கம்:- கலைமகள்.

https://thesakkatru.com/sooriya-thevanin-neriya-kathirkal/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.