Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலையில்லாமல் வாழும் கோழி விஞ்ஞானிகளையே குழப்பிய வினோத விலங்குகள்

Featured Replies

விஞ்ஞானம் இவளவு வளர்ந்தும்கூட மரணத்தை எம்மால் எதுவுமே செய்யமுடியவில்லை ஆனால் சில பூச்சிகள் விலங்குகளால் சர்வசாதாரணமாக மரணத்தைக்கடந்தும் வாழ்தல் சாத்தியமாகியிருக்கின்றது ஒரு கரப்பான் பூச்சியினால் அணுகுண்டின் கதிர்வீச்சுக்களில் இருந்துகூடத்தன்னை பாதுகாக்கமுடியும் என்று கூறப்படுகின்றது நாம் பார்க்கப்போகும் சில உயிரினங்களால் தலை இல்லாமல் கூட வாழமுடிகின்றது இதுதான் இயற்கையின் அதிசயம் அவ்வாறு எமனுக்கே அல்வா கொடுக்கும் உயிரினங்களைப்பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகின்றோம்

 

கரப்பான் பூச்சி

எம்மால் மிகவும் அருவருப்புடன் பார்க்கப்படும் பூச்சியினம்தான் கரப்பான் பூச்சி ஆனால் அதன் தலையை துண்டாக்கினால் கூட அதனால் உயிர்வாழமுடியும் ஒரு மனிதனின் தலையைத்துண்டாக்கினால் இரத்தம் பீறிடும் ஆனால் கரப்பான் பூச்சியின் தலையைத்துண்டாக்கினால் இரத்தம் வெளியேறாது உடனே உறைந்துவிடும் அதோடு அதன் இரத்தம் வெள்ளை நிறமானது மனிதர்களின் குருதியின் சிவப்பு நிறத்துக்குக்காரணமான ஹீமோக்குளோபின் என்ற பதார்த்தம் கரப்பான் பூச்சிகளில் இருப்பதில்லை

தலை துண்டிக்கப்பட்டாலும் கரப்பான் பூச்சியின் உடல் முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான துளைகளினூடாக கரப்பான் பூச்சியினால் சுவாசிக்கமுடியும் ஆனால் மனிதனின் தலை துண்டிக்கப்பட்டால் மூளையுடனான இணைப்பு துண்டிக்கப்படுவதால் உடல் இயங்காது இறப்பு ஏற்படுகின்றது கரப்பான் பூச்சியின் தலை துண்டிக்கப்படுவதால் அதன் மூளை துண்டாக்கப்படுவது உண்மைதான் இருந்தாலும் சுவாசம் தடைப்படாது ஆனால் கரப்பான் பூச்சியால் உணவை உண்னமுடியாது  ஆனாலும் சில நாட்கள்வரை உயிர்வாழ்ந்தே பின்னர் அது மரணிக்க்கும்

 

தேனீக்கள்

தேனீக்கள் இறந்தாலும் குற்றக்கூடியவை இறந்து பல நாள் ஆன தேனியாக இருந்தாலும் அவற்றின் கொடுக்கில் விஷம் அப்படியேதான் இருக்கும் 

நீங்கள் நினைப்பதுபோல் இறந்த தேனி பறந்து குற்றப்போவதில்லை தேனியின் உடலில் தேனியின் கொடுக்கு தேனியின் மூளையால் கட்டுப்படுத்தப்படுவதில்லை தேனியின் உடலின் பின்புறத்தில் இதற்காக என்றே சிறிய உடற்பாகம் உருவாக்கப்பட்டிருக்கின்றது எதிராளியை கண்டுகொண்டதும் தேனியின் விஷம் உள்ளே இருந்து கொடுக்குடன் வெளியேறும் எதிரியின் தோலில் கொடுக்கு குற்றியதும் அதனூடாக விஷமும் வெளியேறும் தேனி இறந்தாலும் விஷமும் கொடுக்கும் அவளவு இலகுவில் அழிந்துவிடுவதில்லை எனவே இறந்த தேனியை கையில் எடுத்துப்பார்க்கும்போதும் அவதானமாக இருக்கவேண்டும்

 

ஆக்டோபஸ்

ஆசியாவின் சில நாடுகளில் ஆக்டோபஸ் கறி மிகவும் பிரபலம் முக்கியமாக சீனாவில் ஆக்டோபஸ்ஸை உயிரோடு சாப்பிடுவது மிகவும் பிரபலமான விடயமகாக பார்க்கப்படுகின்றது ஆக்டோபஸைப்பிடித்து அதன் 8 கால்களை வெட்டியபின்னரும் அதன் கால்கள் பிளேட்டில் அசைந்துகொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம் இதற்குக்காரணம் ஆக்டோபஸ்ஸிற்கு மட்டுமே இருக்கும் சிறப்பான மூளை நரம்புத்தொகுதிதான் ஆக்டோபஸின் மூளையின் 3/2 பகுதிதான் தலையில் காணப்படுகின்றது ஏனைய பகுதி அதன் கால்களிலேயே காணப்படுகின்றது ஆக்டோபஸின் கால் துண்டானாலும் அது முளைத்துவிடக்கூடியது அதோடு துண்டாக்கப்பட்ட காலைத்தொடும்போது உணர்வு தூண்டப்பட்டு கால் அசைந்துகொண்டுதான் இருக்கும் இதைப்பார்க்கும்போது ஆக்டோபஸ் உயிருடன் இருப்பதைப்போல் தோன்றினாலும் உண்மை அதுவல்ல

ஆக்டோபஸை உயிருடன் சாப்பிடுதல் நிச்சயம் ஆபத்தை விளைவிக்கக்கூடியவிடயம்தான் காரணம் ஆக்டோபஸின் கால்கள் ஒட்டும்தன்மை கொண்டவை தொண்டைக்குள் சென்ற ஆக்டோபஸின் கால்கள் தொண்டையில் சிக்கிக்கொண்டால் வைத்திய உதவிகிடைக்கும் முன்னரே மரணம் சம்பவிக்கலாம்

Salamander பல்லி

வீடுகளில் சத்தமிட்டுக்கொண்டிருக்கும் இந்த உயிரினத்தின் ஆச்சரியமான விடயமே இதன் வால்தான் மனிதர்களுக்கு மாத்திரமல்ல பல்லியின் எதிரிகளுக்கும் இது கிலியை ஏற்படுத்தும் விடயம்தான்,எதிரிகளைக்கண்டதும் பல்லி தன் வாலை துண்டாக்கிவிடும் துண்டாக்கப்பட்ட வால் துடித்துக்கொண்டிருக்கும் பல்லியை தாக்கவரும் பூச்சி விலங்குகள் துடிக்கும் வாலை பார்த்துக்கொண்டிருக்கும்போது பல்லி தப்பி ஓடிவிடும்.ஆனால் துண்டாக்கப்பட்ட வாலுக்காக பல்லி கவலைப்படத்தேவையில்லை காரணம் சில நாட்களிலேயே வால் மீண்டும் முளைத்துவிடும் மீண்டும் பழையவாலைப்போலவே இதுவும் செயற்படும்

தவளை

தவளையின் மூளையை சத்திரசிகிச்சைமூலம் அகற்றினால் கூட தவளை முன்பிருந்ததைப்போலவே சாதாரணமாக இயங்குமென்ற கருத்து பரவலாக இருந்துவந்தது 19 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த டேவிட் ஃபரியரல் என்ற ஆய்வாளர் இது உண்மையா எனக்கண்டறிவதற்காக தவளையின் மூளையை மிகக்கவனமாக சத்திரசிகிச்சைமூலம் அகற்றினார் ஆச்சரியமான விடயம் என்ன தெரியுமா தவளை முன்பு போல சாதாரணமாக பாய்ந்து பாய்ந்து சென்றது தவளையை தலைகீழாக திருப்பிவைத்தபோதுகூட மீண்டும் பழைய நிலைக்கு வந்து மீண்டும் தாவிச்சென்றது

 

ஈக்கள்

ஈக்கள் எவளவு குளிரான வெப்பனிலையில் கூட உயிர்தப்பும் ஆற்றல் கொண்டவை இவ்வாறான காரணங்களால்தான் இவற்றைக்கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கின்றது பெண் ஈக்கள்தான் அசாத்திய ஆற்றலைக்கொண்டுள்ளன,பெண் ஈக்களின் தலையை துண்டாக்கினால்கூட அவை உடனே இறந்துவிடுவதில்லை தலையுள்ள ஈக்களைப்போலவே இவையும் பறக்கும் நடக்கும் இதனால் இவை சில நாட்கள் சாதாரண ஈக்களைப்போலவே வாழ்ந்து இறக்கும்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.