Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுவீடன், டென்மார்க்கில் பரவும் வைரஸை ஒத்ததே இலங்கையில் பரவுகிறது; பயங்கரமானது: ஆய்வில் தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தற்போது கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் வகையைச் சேர்ந்தது என சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டொக்டர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்தார்.

இந்த நுண்ணுயிர் முன்னர் பரவியதைவிட வித்தியாசமான வைரசாக உள்ளது. இது ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக செயலாளர் கூறினார்.

இந்த வைரஸ் கந்தக்காட்டில் பரவிய வைரஸ் வகை அல்ல என்பதை பல்கலைக்கழக ஆய்வு அறிக்கையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்ததாக செயலாளர் நேற்று தெரிவித்தார்.

இந்த வைரஸ் வீரியத்தைக் கொண்டது. இது தீவிரமாக மற்றவர்களுக்கு பரவக்கூடிய ஆற்றலைக் கொண்டது. இதனால்தான் குறுகிய கால்திற்குள் பெரும் எண்ணிக்கையிலானோர் வைரஸ் தொற்றுக்குள்ளாகினர் என்றும் அவர் தெரிவித்தார்.

நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் (Department of Immunology and Molecular Medicine and Allergy> Immunology and Cell Biology Unit of University) பிரிவைச் சேர்ந்த, பேராசிரியர் நீலிகா மலவிகே தலைமையில், வைத்தியர் சந்திம ஜீவந்தர, வைத்தியர் டெஸ்னி ஜயதிலக, வைத்தியர் தினுக ஆரியரத்ன, லக்சிறி கோமஸ், தியனாத் ரணசிங்க ஆகியோரினால் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஸ்ரீ ஜயவர்தனபுர பலலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மருத்துவம் தொடர்பான ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சந்தீம ஜிவன்தர இது தொடர்பாக தெரிவிக்கையில், மினுவங்கொடை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட 16 வைரசு மாதிரிகளில் 13 வைரஸ் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அவை அனைத்தும் வெவ் வேறு இடங்களில் பெறப்பட்டாலும் இவை அனைத்தும் ஒரே மாதிரியானவை. B1 42 சார்ஸ் வகைக்கு உட்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவை. B 1, 6 1 4 G வைரஸ் இனத்தைச் சேர்ந்தவை என எண்ணுகின்றோம். இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் என நம்புகின்றோம்.

B 1, B 2, B 4 ஆகியவற்றில் B 1 னே ( பீ ஒன்றே) ஆரம்பத்தில் ஜரோப்பிய நாடுகளில் அதிகாமாக பரவியுள்ளது. இந்த வைரஸ் தற்பொழுது டென்மார்க்கிலும் சுவிடனிலும் காணப்படுகின்றது. மற்றவர்களுக்கு தொற்றக்கூடிய வாயப்புகள் அதிகம். இது தொடர்பில் எமக்கு சரியான தெளிவு இன்னும் இல்லை.

பல்வேறு மட்டத்தில் இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த தொற்று ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் என்று கூறமுடியாது இருப்பினும் விசேடமாக வேறு நோய் உள்ளவர்களை இந்த வைரஸ் வெகுவாக பாதிக்கக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் மார்ச் மாதம் தொடக்கம் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வைரஸ்கள் காணப்பட்டன. இவை அனைத்திலும் பார்க்க இது வேறுபட்டது. இதற்கு முன்னர் இலங்கையில் இந்த புதிய வைரஸ் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆய்வு முடிவுகள்

புதிய வைரஸ் வேகமாக பரவக்கூடியது.

ஒருதுளி உமிழ்நீரில் மில்லியன் கணக்கான துணிக்கைகள் வெளியேறும்.

கடந்த மார்ச் மாதம் முதல் பரவிய, கடற்படை மற்றும் கந்தக்காடு முகாமில் பரவிய வைரஸை விட இந்த வைரஸ் பரவும் வேகம் அதிகமானது.

இது சார்ஸ் வகையை சேர்ந்த B1 42 வைரஸ் ஆகும்.

இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடியது.

உடலில் ஏற்படும் வைரஸின் கொள்ளளவு மிகவும் அதிகம்.

முன்னதாக (முன்னைய வைரஸில்) ஒருவர் (தொற்றுடையவர்) வெளியேற்றும் உமிழ்நீரில் ஒரு துளியில் ஒரு லட்சம் வைரஸ் துணிக்கைகள் இருக்குமாயின், இந்தமுறை (புதிய வைரஸில்) அது மில்லியன், பில்லியன் கணக்காக அதிகரிக்கிறது.

எங்களுக்கு அருகில் நோயாளர் ஒருவர் இருப்பாராயின் அவரிடம் இருந்து வெளியேறும் வைரஸின் கொள்ளளவு எந்தளவு இருக்கும் என்பதை இதனூடாக அறிந்து கொள்ள முடியும்.

நீங்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு அதிகளவில் இருக்கின்றது. எனவே, நீங்கள் தொற்றுக்கு உள்ளாகாமல் இருப்பதும், நீங்கள் வைரஸ் தொற்றுடைய ஒருவராயின், மற்றவருக்கு தொற்றை ஏற்படுத்தாமல் இருப்பதும் உங்களின் பொறுப்பாகும்.

நடமாட்டங்களை கட்டுப்படுத்தினால் இந்த இரண்டையும் செய்ய முடியும்.

வைரஸினால் வேகமாக செயற்பட முடியும்.

நீங்களும் வேகமாக பயணித்தால் அதன் வேகம் இரண்டு, மூன்று மடங்காக அதிகரிக்கும். சில சந்தர்ப்பங்களில் நாடு முழுவதும் பரவக்கூடிய நிலை உள்ளது. எனவே அத்தியாவசியமான கடமைகளுக்கு மாத்திரம் உங்களது பயணங்களை மட்டுப்படுத்துங்கள்.

அநாவசியமான பயணங்களைத் தவிர்த்து இந்த நாட்களில் வீட்டிலேயே இருங்கள். இதனூடாக நீங்கள் பாதுகாக்கப்படுவதுடன், உங்களது நண்பர்களும், நாட்டு மக்களும் பாதுகாக்கப்படுவர்.

வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும் இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடிய தன்மை உள்ளது. அவர்களைப் பாதுகாக்க வேண்டும். நாட்பட்ட நோய்த்தாக்கம் உள்ளவர்களையும் இந்த வைரஸ் விரைவில் தாக்கும்.

பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட ஒருவர் அதன் பெறுபேறு வரும்வரையில் வீட்டிலேயே இருக்க வேண்டும். வீட்டினை விட்டு வெளியே செல்லக்கூடாது.

நோய் அறிகுறிகள் அல்லது ஏதாவது பிரச்சினைகள் இருக்குமாயின், 0117 966 366 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும்.

https://www.pagetamil.com/154241/

அப்பத்தா  சொன்னது போல் திறப்பு ஓட்டைக்கும் பன்சு வைத்து பல நாட்கள் தண்ணியை குடித்தே உயிர் வாழ்ந்த கதை உண்மையாகும் போல் உள்ளது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.