Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை!

 

spacer.png

கறுப்பர் கூட்டம் சர்ச்சையை அடிப்படையாக வைத்து பாஜக சார்பில் வேல் யாத்திரை நாளை திருத்தணியில் தொடங்கி, டிசம்பர் 6 திருச்செந்தூரில் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வேல் யாத்திரையால் வன்முறை ஏற்படும் வாய்ப்புள்ளதால் அதனை தடை செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி பத்திரிக்கையாளர் பாலமுருகன், செந்தில்குமார் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கொரோனா பரவல் காரணமாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தாலும் வேல் யாத்திரையை தடை செய்ய கோரிக்கை வைத்தனர்.

 

இது அவசர வழக்காக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று (நவம்பர் 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “பாஜக தமிழகம் முழுவதும் நடத்தத் திட்டமிட்டுள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய மனுவை நிராகரித்து தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அனுமதி மறுப்புக்கான உத்தரவு, பாஜக அலுவலகத்தில் அக்கட்சி நிர்வாகிகளிடம் இன்று வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். கொரோனா பரவல் காரணமாக யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர் காரணத்தையும் குறிப்பிட்டார்.

எனினும் பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தமிழக அரசே கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்று கூறியுள்ளதால் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார். கொரோனா 2 ஆம் மற்றும் 3 ஆம் அலை பரவலுக்கு வாய்ப்பிருப்பதால் வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை என்று தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

தமிழக அரசின் வாதத்தை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, வேல் யாத்திரைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. யாத்திரைக்கு அனுமதி மறுத்த அரசின் முடிவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தமிழக பாஜகவுக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.

 

https://minnambalam.com/politics/2020/11/05/14/tn-Govt-has-decided-to-reject-permission-for-Vetri-Vel-Yatra

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை- ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை- ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

 

சென்னை:

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். நவம்பர் 6-ந்தேதி திருத்தணியில் தொடங்கும் வேல் யாத்திரை, டிசம்பர் 6-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது.

 
இந்நிலையில், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வேல் யாத்திரை நிறைவடைய இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், தமிழக டிஜிபி, பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரைக்கு தடை கோரிய வழக்கு விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரிய வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதம் செய்தார்.

இந்நிலையில் நாளை தொடங்க உள்ள பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு தகவல் தெரிவித்தது. மேலும் கொரோனாவுக்கான 2, 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் வேல் யாத்திரையை தடுப்பது சரியல்ல என பாரதிய ஜனதா தரப்பில் வாதிடப்பட்டது.

‘கொரோனா தொற்று குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. வேல் யாத்திரையின்போது குறிப்பிட்ட எந்த பகுதியிலும் தங்கப்போவதில்லை. குறிப்பிட்டு எந்த பகுதியையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கவில்லை’ என்றும் பாரதிய ஜனதா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/05113157/2039430/Vel-Yatra-not-allowed-TN-Government-information-to.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

வேல் யாத்திரையை பா.ஜ.க. கைவிட வேண்டும்: சட்டத்தை மீறினால் நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

வேல் யாத்திரையை பா.ஜ.க. கைவிட வேண்டும் என்றும், சட்டத்தை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பா.ஜ.க நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இன்று 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கும் வேல் யாத்திரை, டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், தமிழக டி.ஜி.பி, பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். 

 

இந்நிலையில் நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது, பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரையை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக, ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்தது. தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், வேல் யாத்திரை விவகாரத்தில் அரசு முடிவு செய்யலாம் என்றும், மாநில அரசு இரு விண்ணப்பங்கள் மீதும் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.  மேலும் யாத்திரைக்கு அனுமதி கோரிய மனு மீதும், தடை கோரிய மனு மீதும் அரசு உத்தரவு பிறப்பித்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். இதனைத்தொடர்ந்து தடை கோரிய இரு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன. 

 இந்நிலையில் வேல் யாத்திரையை பா.ஜ.க. கைவிட வேண்டும் என்றும், சட்டத்தை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, 

பா.ஜ.க.வின் வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கொரோனா அதிகமாக பரவும். 2-வது அலை, 3-வது அலை, ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை. பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழக்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே வேல் யாத்திரையை பா.ஜ.க. கைவிடுவது நல்லது. சட்டத்தை மீறினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

http://www.thinaboomi.com/2020/11/05/132597.html

  • கருத்துக்கள உறவுகள்

அனுமதித்தால் யாத்திரை, இல்லையெனில் போராட்டம்- எச்.ராஜா

அனுமதித்தால் யாத்திரை, இல்லையெனில் போராட்டம்- எச்.ராஜா

 

சென்னை:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பா.ஜ.க. சார்பில் இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை முருகபெருமானின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க.வினர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

 
இந்த நிலையில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசு சார்பில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. இதனால் திருத்தணியில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

இதையடுத்து வேல் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவல் துறை அனுமதித்தால் பாஜக வேல் யாத்திரையை நடத்தும். இல்லையெனில் போராட்டம் நடத்தும்.

இந்துக்களை இகழ்வாக பேசும் மு.க.ஸ்டாலின் போன்றவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவே வேல் யாத்திரை.

இவ்வாறு அவர் கூறினார்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/06092252/2039639/Police-if-allow-Vel-Yatra-otherwise-struggle-says.vpf

 

வேல் யாத்திரை- பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக கைது

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பா.ஜ.க. சார்பில் இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை முருகபெருமானின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க.வினர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

 
இந்த நிலையில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசு சார்பில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. இதனால் திருத்தணியில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

இந்நிலையில் வேல் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த 6 பாஜக நிர்வாகிகளை இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் ராஜ்குமார், பாஸ்கரய்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாஜக வேல் யாத்திரை தொடங்க உள்ள திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாஜகவின் வேல் யாத்திரையை தடுக்க திருத்தணியில் 6 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூரை சேர்ந்த 1010 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவில் முன்பு தடுப்புகளை அமைத்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/06075634/2039623/Vel-Yatra-BJP-executives-arrested-precaution.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைது இல்லை: திருத்தணி செல்ல முருகனுக்கு அனுமதி!

spacer.png

 

பாஜகவின் வேல் யாத்திரை திருத்தணி வரை செல்ல காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக பாஜகவின் சார்பில் நடைபெற இருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசுக்கு தடை விதித்த நிலையில், தடையை மீறி சென்னை கோயம்பேட்டிலுள்ள பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் இல்லத்தில் இருந்து வேல் யாத்திரை புறப்பட்டது. கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை என்பதால், முருகக் கடவுள் கொடுத்த பர்மிஷனில் திருத்தணிக்கு புறப்படுகிறோம் என்ற எல்.முருகன், காவி சட்டை, பச்சை வேட்டி அணிந்து கையில் வேலை வைத்துக்கொண்டு திறந்த வாகனத்தில் சென்றார்.

அவருடன் ஒரே வாகனத்தில் பாஜக தேசியச் செயலாளர் சி.டி.ரவி, ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் சென்றனர். பாஜக தலைவர்களின் கார்கள் அணிவகுத்துச் சென்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரவாயல், பூந்தமல்லி வழியாக திருத்தணி நோக்கி சென்ற முருகனின் யாத்திரை வாகனத்தை நாசரேத் அருகே காவல் துறையினர் வழிமறித்தனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய முருகன், தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும் என்றார்.

 

அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, அங்கு அதிகளவில் காவல் துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும், தடை விதிக்காத காவல் துறை, முருகனுடன் 5 வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதியளித்தது. மற்ற வாகனங்களில் வந்தவர்கள் திருத்தணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

தொடர்ந்து, எல்.முருகன் உள்ளிட்ட ஒருசிலரது வாகனங்கள் மட்டும் திருத்தணியை நோக்கி சென்றுள்ளது.

முன்னதாக விழுப்புரத்தில் யாத்திரை நடத்தக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியன், பொருளாளர் சுகுமார் உள்ளிட்ட 11 பேரை காவல் துறை கைது செய்தனர்.
 

 

https://minnambalam.com/politics/2020/11/06/17/vel-yathirai-thiruththani-started

  • கருத்துக்கள உறவுகள்

தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்கிய பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கைது

      by : Varothayan

http://athavannews.com/wp-content/uploads/2020/11/Vel-Yatra-L-Murugan-720x450.jpg

திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்கிய பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டார்.

தமிழக பா.ஜ.க. சார்பில் இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பா.ஜ.க.வினரின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசும் இதற்கு அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் திருத்தணியில் தடையை மீறி தொடங்கிய பா.ஜ.க.வின் வேல் யாத்திரையை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். வேல் யாத்திரையை தொடங்கிய மாநில தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டார். அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்து பேருந்தில் பொலிஸார் அழைத்து சென்றனர்.

http://athavannews.com/தடையை-மீறி-வேல்-யாத்திரை/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2ஆவது நாளாக யாத்திரை: எல்.முருகன் மீண்டும் கைது!

 

spacer.png

யாத்திரை நடத்த முயன்ற எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக அரசின் தடையை மீறி திருத்தணியில் நேற்று முன் தினம் வேல் யாத்திரை தொடங்க முயன்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். யாத்திரைக்கு அனுமதி கேட்டு பாஜக தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், தடையை மீறி தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை தொடரும் என எல்.முருகன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை பாஜக சார்பில் யாத்திரையை நடத்தவும், அதனை திருவொற்றியூரில் தொடங்கி கோயம்பேட்டில் முடிக்கவும் பாஜக தலைவர்கள் முடிவுசெய்தனர். அதன்படி, இரண்டாவது நாளான இன்று (நவம்பர் 😎 சென்னை கோயம்பேட்டிலுள்ள தனது இல்லத்திலிருந்து வேல் யாத்திரைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வாகனத்தில் எல்.முருகன் கிளம்பினார். அவருடன் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும் சென்றனர்.

 

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை தொடங்கியது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசிய முருகன், “எத்தனை தடைகள் வந்ததாலும் வேல் யாத்திரை வெற்றி அடையும். அனைத்து ஊர்களிலும் உள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று யாத்திரை நிறைவடையும்” என்று கூறினார்

.

மேலும், தமிழகத்தில் வரும் தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக இருக்கப்போகிறது என்றும், அடுத்து அமைய உள்ள ஆட்சியை தீர்மானிக்கப் போவது பாஜகதான் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து யாத்திரையை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் எல்.முருகன் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்தனர். அவர்களை திருமண மண்டபம் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்கவைத்துள்ளனர்.

https://minnambalam.com/politics/2020/11/08/32/2-nd-day-vel-yathra-l-murugan-again-arrested

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.