Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்றங்கே ஒரு நாடிருந்ததே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்றங்கே ஒரு நாடிருந்ததே
அந் நாட்டில் ஆறிருந்ததே
ஆறு நிறைய மீனிருந்ததே
மீனும் முழுகிடக் குளிரிருந்ததே
அன்னமிட வயலிருந்ததே
வயல் முழுவதும் கதிருந்ததே
கதிர் கொத்திடக் கிளி வந்ததே
கிளிகள் பாடும் பாட்டிருந்ததே
அந் நாட்டில் நிழல் இருந்ததே
மண்வழியில் மரம் இருந்ததே
மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே
நல்ல மழை பெய்திருந்ததே
நரகத் தீ சூடில்லையே
தீவட்டிக் கொள்ளை இல்லையே
தின்றது எதுவும் நஞ்சில்லையே

அன்றங்கே ஒரு நாடிருந்ததே

அந் நாட்டில் ஆறிருந்ததே

ஆறு நிறைய மீனிருந்ததே

மீனும் முழுகிடக் குளிரிருந்ததே

அன்னமிட வயலிருந்ததே

வயல் முழுவதும் கதிருந்ததே

கதிர் கொத்திடக் கிளி வந்ததே

கிளிகள் பாடும் பாட்டிருந்ததே

அந் நாட்டில் நிழல் இருந்ததே

மண்வழியில் மரம் இருந்ததே

மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே

நல்ல மழை பெய்திருந்ததே

நரகத் தீ சூடில்லையே

தீவட்டிக் கொள்ளை இல்லையே

தின்றது எதுவும் நஞ்சில்லையே

ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே
ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே
நாடெங்கும் மதில்கள் இல்லையே

ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே
ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே


நடைவெளி இடைவெளி நூறிருந்ததே
நாலுமணிப் பூவிருந்ததே
நல்லோர் சொல்லுக்கு விலையிருந்ததே
அன்றும் பல மதம் இருந்ததே
அதையும் தாண்டி அன்பிருந்ததே

அன்றும் பல மதம் இருந்ததே
அதையும் தாண்டி அன்பிருந்ததே


உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன்
என்றதொரு சண்டை இல்லையே

உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன்
என்றதொரு சண்டை இல்லையே


அந் நாட்டைக் கண்டவர் உண்டோ
எங்கே போனது தெளிவுண்டோ
அந் நாடு இறந்து போனதோ
அது வெறும் ஒரு கனவானதோ

அந் நாட்டைக் கண்டவர் உண்டோ
எங்கே போனது தெளிவுண்டோ

அந் நாடு இறந்து போனதோ
அது வெறும் ஒரு கனவானதோ


அந் நாடு இறந்து போனதோ
அது வெறும் ஒரு கனவானதோ
அன்றங்கே ஒரு நாடிருந்ததே

அந் நாட்டில் ஆறிருந்ததே
ஆறு நிறைய மீனிருந்ததே
மீனும் முழுகிடக் குளிரிருந்ததே

அன்னமிட வயலிருந்ததே
வயல் முழுவதும் கதிருந்ததே
கதிர் கொத்திடக் கிளி வந்ததே
கிளிகள் பாடும் பாட்டிருந்ததே
கிளிகள் பாடும் பாட்டிருந்ததே

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளியில் பூமி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது நம்ம பூமி

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கின் உண்மை முகமும் பூமித்தாயின் பூரிப்பும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரத்தை நடு பூமியை காப்பாற்று

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பூமி அழுகின்றேன் 

நான் பூமி அழுகின்றேன் உனக்குத் தெரியுதா மனிதா
நான் நாளும் அழிகின்றேன் உனக்கு புரியுதா மனிதா
நான் பிறக்கையிலே நீ இருக்கலயே 
நீ இருக்கையிலே நான் சிறக்கலயே 
ஆசை மனிதனே சொல்!
ஓசை மனிதனே சொல்!
ஆசை மனிதனே சொல்! 
ஓசை மனிதனே சொல்! 

களைப்பாற நீர் தந்தேன் 
நீ கல் மண் தோண்டி வலி தந்தாய்
இளைப்பாற நிழல் தந்தேன் 
நீ மரங்களை வெட்டி வலி தந்தாய் 

அள்ள அள்ள குறையாமலிருக்க 
நான் அமுதசுரபியும் அல்ல 
கொல்ல கொல்ல சாகாமல் இருக்க
நான் மாயசக்தியும் அல்ல
ஆசை மனிதனே சொல்! 
ஓசை மனிதனே சொல்! 
ஆசை மனிதனே சொல்! 
ஓசை மனிதனே சொல்! (நான் பூமி அழுகின்றேன் உனக்குத் தெரியுதா மனிதா)

பனிப்பாறை உடைகிறது 
கடல் மேல் வந்து எனை வதைக்கிறது
வாகனங்கள் பறக்கிறது 
அதன் மாசு புகை 
எனை சிதைக்கிறது 

ஏசி சுக போகம் எனக்கு அது சோகம் 
வெப்பமயமாச்சு....அந்தோ 
உச்சி மீது ஓசோனின் ஓட்டை 
நீண்டு பெருசாச்சு........ஐயோ 
ஆசை மனிதனே சொல்!
ஓசை மனிதனே சொல்! 
ஆசை மனிதனே சொல்!
ஓசை மனிதனே சொல்! (நான் பூமி அழுகின்றேன் உனக்குத் தெரியுதா மனிதா)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோறு போடும் சாமி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருவி மகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு-2
மழைத்துளியாலே பசுமையை வரைந்தார்
இயற்கையின் வடிவில் இமைகளை திறந்தார்

வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன் சுய நலத்தாலே எல்லாமே கெடுத்தான்

காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு

1.காற்றைத்தென்றலாக்கி என் பாட்டை பாட வைத்தார்
மூச்சுடன் காற்றை சேர்த்து முடிச்சொன்று போட்டார்-2
ஆற்று நீரை அள்ளி கொடுத்தார்
கழிவு நீரால் மனிதன் கெடுத்தான்-2

வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன் சுய நலத்தாலே எல்லாமே கெடுத்தான்-2

காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு

2.ஆவியான தேவன் அசைவாடி வந்த உலகம்
இயேசு சிந்திய இரத்தம் சுத்தமாகும் வையம்-2
வார்த்தையாகி வாழ்வை தந்தார்
மனிதன் வாழ்வில் புதுமை தந்தார்-2

வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன் சுய நலத்தாலே எல்லாமே கெடுத்தான்-2

காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு-2
மழைத்துளியாலே பசுமையை வரைந்தார்
இயற்கையின் வடிவில் இமைகளை திறந்தார்

வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன் சுயநலமின்றி சுகமாய் வாழலாம்-2

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல நடிகர்கள் சேர்ந்து பாடிய பாடல் - கடைசி மரமும் 

இயற்கை விரும்பும் இதயங்களுக்கு,
மிகுந்த முயற்சிகளுக்குப் பிறகு நமது " கடைசி மரமும் வெட்டுண்டு" உங்கள் பார்வைக்கு. தங்களின் ஆதரவு இப்பாடலுக்கு இருக்குமானால் இது இன்னும் சில உயரங்களைத் தொட்டு நிறைய மக்களைச் சென்று சேரும் என நம்பிக்கை. தங்கள் கருத்துக்களைத் தவறாமல் தடம் பதியுங்கள். வாழ்த்துங்கள் - வசை பொழியுங்கள் வரவேற்கிறேன். தங்களுக்கு வழிவிட்டு....

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெகிழு பைக்கு

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.