Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் குழு மோதல் – பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபை இன்று கூடவுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் குழு மோதல் – பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபை இன்று கூடவுள்ளது

யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்குமிடையில் கடந்த மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கென வணிக முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், ஓய்வு நிலைப் பேராசிரியருமான எம். நடராஜசுந்தரம் பேரவையினால் நியமிக்கப்பட்டிருந்தார்.அவர் கடந்த 21 ஆம் திகதி முதல் தனது விசாரணைகளை நடாத்தி, சம்பவம் தொடர்பில் 130 பக்கங்களைக் கொண்ட விரிவான விசாரணை அறிக்கையைச் சமர்பித்திருந்தார்.இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைககளை மேற்கொண்ட தனிநபர் ஆயத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபை இன்று கூடவுள்ளது.

இந்நிலையில் அந்த அறிக்கையில் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், முன்மொழியப்பட்டுள்ள தண்டனைகள் இன்று இடம்பெறவுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபை கூட்டத்தில் ஆராயப்பட்டு, ஒழுக்காற்று சபையின் சிபார்சுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரவைக்குச் சமர்பிக்கப்படவுள்ளன.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-பல்கலைக்கழக-கலைப்ப-2/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைப்பீட மோதல் சம்பவம் தண்டனைகள் பரிந்துரை; 4 பேருக்கு 6 மாதங்கள் தடை! 3 பேருக்கு 1 வருடத் தடை

November 18, 2020

jaffna-uni-300x175.jpg

 

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8 ஆம் திகதி மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தின் சிபார்சுக்கமைய, சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரை செய்துள்ளது.

இதனடிப்படையில், நேரடியாகக் குற்றங்களில் ஈடுபட்ட, பல்கலைக்கழகத்தின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மூன்றாம் வருட மாணவர்களுக்கு அவர்கள் செய்த குற்றங்களின் தன்மைக்கேற்ப பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 946 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் அடிப்படையில் விசாரணை அதிகாரியினால் வகைப்படுத்தப்பட்ட தண்டனைகள் சிபார்சு செய்யப்பட்டிருந்தன. அவரது முன்மொழிவுகளைப் பேரவைக்குச் சிபார்சு செய்வதென இன்று புதன்கிழமை இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்றாம் வருட மாணவர்கள் 3 பேருக்கு ஒரு வருட காலத்துக்குப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும், 4 பேருக்கு ஆறு மாத காலத்துக்குப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும் விதிக்கப்படுவதோடு, தண்டனைக்குரிய 7 பேருக்கும் வழங்கப்படும் அத்தனை நிதியுதவிகளும் நிறுத்தப்படல் வேண்டும், கல்வி கற்கும் காலத்தினுள் விடுதிகளில் தங்குவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் பதவிகள் எவையும் வழங்கப்படகூடாது போன்ற தண்டனைகள் விசாரணை அதிகாரியினால் சிபார்சு செய்யப்பட்டிருந்ததன. எனினும் இவற்றில் மாணவர்களுக்கான நிதியுதவிகளை நிறுத்துவதை தவிர ஏனைய சிபார்சுகளைப் பேரவைக்குப் பரிந்துரைப்பதற்கு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை முடிவு செய்துள்ளது.

இந்த 7 பேர் தவிர, கடந்த மாதம் 10 ஆம் திகதி முதல் உள்நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்ட ஏனைய 14 பேருக்கும் அவர்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் உள் நுழைவுத் தடை விலக்கப்படவேண்டும் என்பதுடன், துணைவேந்தரினால் சம்பவம் தொடர்பில் எச்சரிக்கை வழங்கப்பட வேண்டும் என்றும், கல்வி கற்கும் காலத்தினுள் விடுதிகளில் தங்குவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் பதவிகள் எவையும் வழங்கப்படகூடாது போன்ற தண்டனைகளும் சிபார்சு செய்யப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதன. பேரவையின் இறுதித் தீர்மபனத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கான தண்டனைகள் துணைவேந்தரினால் அறிவிக்கப்படும்.

கடந்த மாதம் 8 ஆம் திகதி இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணtர்களுக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் மோதலாக உருவெடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கலைப்பீடச் சபையினால் அடையாளப்படுத்தப்பட்ட 21 மூன்றாம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பேராசிரியர் எம். நடராஜசுந்தரத்தை விசாரணை அதிகாரியாகக் கொண்ட தனிநபர் ஆயம் ஒன்று பேரவையினால் நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டாம் வருட, மூன்றாம் வருட மாணவர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் கண்ட அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் விசாரணை செய்யப்பட்டு கடந்த 11 ஆம் திகதி 130 பக்கங்களைக் கொண்ட முழுமையான அறிக்கை துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

 

https://thinakkural.lk/article/90487

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலை கலைப்பீட மோதல் – மாணவர்களுக்கான தண்டணைகளை உறுதிப்படுத்தியது பேரவை

November 28, 2020

jaffna-uni-300x175.jpg

 

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால் முன்மொழியப்பட்டு, பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட படி சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கான தண்டனைகளை பல்கலைக்கழகப் பேரவை இறுதி செய்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று 28 ஆம் திகதி, சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் வணிக முகாமைத்துவ பீடாதிபதியும், ஓய்வு நிலைப் பேராசிரியருமான மா. நடராஜசுந்தரத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 130 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கையில் முன்மொழியப்பட்ட தண்டணைகளின் அடிப்படையில் பல்கலைக்கழக ஒழுக்காற்றுச் சபையினால் பேரவைக்கு முன்மொழியப்பட்ட தண்டணைகளை அதன் தலைவரான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தெரிவு உறுப்பினர் கே.ருஷாங்கன் சமர்ப்பித்தார். மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பேரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

நேரடியாகக் குற்றங்களில் ஈடுபட்ட – பல்கலைக்கழகத்தின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மூன்றாம் வருட மாணவர்களுக்கு, அவர்கள் செய்த குற்றங்களின் தன்மைக்கேற்ப பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 946 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் அடிப்படையில் விசாரணை அதிகாரியினால் வகைப்படுத்தப்பட்ட தண்டனைகள் சிபார்சு செய்யப்பட்டிருந்தன. அதன் படி அடுத்து வரும் நாள்களில் மாணவர் ஒவ்வொருவருக்குமான தண்டணைகள் துணைவேந்தரினால் அறிவிக்கப்படும் என்று தெரியவருகிறது.

நேற்றைய பேரவைக் கூட்டத் தீர்மானத்தின் படி, முன்றாம் வருட மாணவர்கள் 3 பேருக்கு ஒரு கல்வி ஆண்டு காலம் (இரண்டு அரையாண்டுகள்) பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும், 4 பேருக்கு நடப்பு அரையாண்டு காலத்துக்குள் (அடுத்த வருடம் பெப்ருவரி மாதம் வரை) பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனைக்குரிய இந்த 7 பேருக்கும் கல்வி கற்கும் காலத்தினுள் விடுதிகளில் தங்குவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் பதவிகள் எவையும் வழங்கப்படகூடாது. கற்கை நெறியின் நிறைவில் வகுப்புச் சித்திகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படக் கூடாது, மற்றும் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தினுள் அவர்கள் வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் போது, தற்போது இழைத்துள்ள குற்றங்கள் கணக்கிலெடுக்கப்பட வேண்டும் போன்ற தண்டனைகள் விசாரணை அதிகாரியினால் முன்மொழியப்பட்டு, ஒழுக்காற்றுச் சபையினால் பேரவைக்கு சிபார்சு செய்யயப்பட்டன. மேலும், தற்போது தண்டணை அறிவிக்கப்பட்ட மாணவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் இதே வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் மாணவர் பதிவு இரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும் ஒழுக்காற்றுச் சபையினால் பேரவைக்கு சிபார்சு செய்யயப்பட்டது. அவை அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பவத்தை அடுத்து, கலைப்பீடச் சபையினால் அடையாளங்காணப்பட்டு உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேரில் 12 பேருக்கு விதிக்கப்பட்ட உள்நுழைவுத் தடை உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட்டாலும், அவர்களுக்கும் எதிர்காலத்தில் மாணவர் மாணவர் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் பதவிகள் எவையும் வழங்கப்படகூடாது என்றும் இத்தகைய சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்பதற்கான எச்சரிக்கைக் கடிதம் ஒவ்வொருவருக்கும் துணைவேந்தரால் வழங்கப்பட வேண்டும் என்றும், இவர்களை விட மீதி இரண்டு பேர் குற்றச் செயல்களுடன் தொடர்புபடாதவர்கள் என்பது அறியப்பட்டதன் காரணமாக அவர்கள் இருவரும் தண்டணைகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளனர் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்துடன் தொடர்புபட்ட 6 இரண்டாம் வருட மாணவர்களுக்கு இத்தகைய சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கைக் கடிதம் துணைவேந்தரால் வழங்கப்பட வேண்டும் என்றும் நேற்றைய பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

https://thinakkural.lk/article/93578

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.