Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர் நாள் நினைவு கூருவது குறித்து கலந்துரையாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் நினைவு கூருவது குறித்து கலந்துரையாடல்

PHOTO-2020-11-21-16-44-47-696x338.jpg
 26 Views

தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் – மாவீரர் துயிலும் இல்லங்கள் சார்ந்த நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு   வடமாகாணசபை அவைத்தலைவர் சிவிகே சிவஞானம் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது.

PHOTO-2020-11-21-16-44-46.jpg

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சார்பில் சிவிகே சிவஞானம், உதயன் பத்திரிகை குழும தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர் சி வி விக்கினேஸ்வரனின் பிரதிநிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டு குழு சார்பாக மாணிக்கவாசகர் இளம்பிறையன், கருணாகரன் குணாளன், தனூபன் வடமராட்சி மாவீரர் துயிலுமில்லம் சார்பாக வேந்தன் ( ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் ) உட்பட பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர் .

PHOTO-2020-11-21-16-44-46-1.jpg

இந்த கூட்டத்தில், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் எதிர்வரும் 24 ம் திகதியன்று தாயக மக்களை தெளிவுபடுத்துவது தொடர்பாக வெளியிடப்படவுள்ள அறிக்கைகள் தொடர்பாகவும், ஊடகங்கள் ஊடாக மக்களின் அச்சத்தினை போக்கி தெளிவுபடுத்துவது தொடர்பாகவும், குறிப்பாக நவம்பர் 27 ம் திகதி அனைத்து இல்லங்களின் வாசல்களிலும் தீப ஒளியை ஏற்றுமாறு தாயக மக்களிடம் வேண்டுகோள் விடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ilakku.org/மாவீரர்-நாள்-நினைவு-கூரு-2/

 

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்கள் நாள் நினைவு கூரலுக்கான மாற்றுவழி குறித்து செவ்வாயன்று தீர்மானம்

(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியப் பரப்பில் ஒருங்கிணைந்துள்ள அரசியல் கட்சிகள் மாவீரர்கள் நாள் நினைவு கூரலுக்கான மாற்றுவழி குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று தீர்மானம் எடுக்கவுள்ளன.

தமிழ்த் தேசியப் பரப்பில் ஒருங்கிணைந்துள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வடக்கில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களின் பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை யாழில் உள்ள வடமாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அக்கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் கமலாகரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோரும் வடக்கில் மாவீரர் துயிலுமில்லங்களை பராமரிப்பவர்களில் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவீரர் துயிலுமில்லங்களில் துப்புரவுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் முதலில் அவதானம் செலுத்தினோம். 

இதன்போது படையினர், பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் கூட்டிணைந்து மேற்கொண்ட நெருக்கடிகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தோம்.

அத்துடன் அனைத்து துயிலுமில்லங்களுக்கு முன்னாலும் புலனாய்வாளர்களின் நடமாட்டம் மற்றும் தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்மை தொடர்பிலும் துயிலுமில்ல பராமரிப்பாளர்கள் எமது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்

இந்நிலையில் மாவீரர் நாள் நினைவுகூரலை முழுமையாக தடைசெய்வதற்கான நீதிமன்ற உத்தரவுகளை பொலிஸார் பெற்றுவருவது தொடர்பில் கவனம் செலுத்தினோம்.

குறிப்பாக வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களில் நீதிமன்றங்கள் நினைவு கூரலுக்கான தடைகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளன.

இதேவேளை மல்லாகம் நீதிமன்றம் சட்டத்திற்கு விரோதமான செயற்பாடுகள் இடம்பெற்றால் கைது செய்யுமாறு பணித்துள்ளது. இதனைவிடவும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று நாளை திங்கட்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது. 

அதேபோன்று கோப்பாய், யாழ்.பொலிஸார் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெற்று தீர்ப்பளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவே இவ்விதமான அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்றே மாவீரர் நாளை நினைவு கூருவதற்கான மாற்றுவழி தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு முடிவெடுத்துள்ளோம்.

மேலும் மரணித்தவர்களை நினைவு கூருதல் அடிப்படை உரிமைகள் என்ற வகையில் நாம் இந்த விடயம் தொடர்பில் தீர்மான முடிவொன்றை ஒருங்கிணைந்துள்ள அரசியல் கட்சிகள் ஒன்றுகூடி முடிவெடுக்கவுள்ள என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/94933

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.