Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலைக்கழகத்தில் மின்கல தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறந்துவைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழ்.பல்கலைக்கழகத்தில் மின்கல தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறந்துவைப்பு

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உலக வங்கியின் அனுசரணையுடன் புத்தாக்க மின்கல (பற்றரி) தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இரண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

யாழ்.பல்கலைக்கழக பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் துறைகள் இணைந்து முன்னெடுக்கும் மின்கல ஆராய்ச்சிக்கென நவீனமயப்படுத்தப்பட்ட ஆய்வுகூடங்களின் திறப்புவிழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா இந்த ஆய்வுகூடங்களைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன், ஏகெட் திட்டத்தின் நிதிப் பணிப்பாளர் க.கனகரட்ணம், பௌதிகவியல் துறைத் தலைவர் கலாநிதி தி.பத்மதாஸ், இரசாயனவியல் துறைத் தலைவர் கலாநிதி பி.ஐங்கரன், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கு அமைய மிகவும் எளிமையாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

அரிசோனா அரச பல்கலைக்கழகம்-அமெரிக்கா, சால்மேர்ஸ் தொழிநுட்பப் பல்கலைக்கழகம்-சுவீடன், தேசிய விஞ்ஞான நிறுவனம்-கண்டி, விஞ்ஞான பீடம் யாழ். பல்கலைக்கழகம் என்பவற்றின் கூட்டு ஆராய்ச் சித்திட்டமாக எளிதில் கிடைக்கக்கூடிய சோடியம் மற்றும் மக்னீசியத்தினைப் பயன்படுத்தி புத்தாக்கமாக பல சவால்களை எதிர்கொண்டு மேம்பாடான உற்பத்திச் செலவு குறைந்த எளிதில் கிடைக்கக்கூடிய மின்கலங்களின் தொழில்நுட்பமானது வடிவமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://athavannews.com/யாழ்-பல்கலைக்கழகத்தில்-ம/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழகக் கலைப் பீடத்தில் புதிதாகத் தகவல் தொழில் நுட்பத் துறை அமைக்க அனுமதி!

 
IMG-3276-696x431.jpg
 27 Views
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தகவல் தொழில்நுட்பத் துறையை அமைப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
அதனடிப்படையில் கலைப்பீடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையினை அமைப்பதற்கான பூர்வாங்கவேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2021 ம் ஆண்டு முதல் கலைப்பீட மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் கற்கைகளைத்  தொடரமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும்,  கலைப்பீட மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை அதிகரிக்கும் நோக்குடன் – கலைப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புச் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் செயற்திட்டம் ஒன்றினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது. இக்கருத்திட்டத்தின் பிரதான நோக்கம் கலைப்பீட மாணவர்களது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவு மற்றும் அது தொடர்பான திறன்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் வேலைவாய்ப்புச் சந்தர்ப்பத்தை இலகுவில் பெறக்கூடிய வேலைப் படையாக மாற்றுதல் மற்றும் அவர்களே மற்றைய நபர்களிற்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பிரிவினராகவும் மாற்றுதலாகும்.

அதற்கமைய, தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா, கலைப்பீடதிபதி கலாநிதி க .சுதாகர், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. ரகுராம்,  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். கபிலன் ஆகியோர்  கலைப்பீட மாணவர்களுக்கெனத் தனியான தகவல் தொழில் நுட்பத் துறை ஒன்றை ஆரம்பிப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து, நடைமுறை உலகுக்கேற்றவகையில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில்,  இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள கலைப்பீடங்களில் தகவல் தொழில்நுட்ப துறையினை உருவாக்கும் கருத்திட்ட செயல்முறையினை 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பித்தது.

இக்கருத்திட்டத்தின் பிரகாரம் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையினை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில் நுட்பத் துறைக்குரிய கட்டிடம் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டிருப்பதுடன், ஏனைய உதவிகளையும், வழிகாட்டல்களையும் துணைவேந்தர் வழங்கி வருகிறார்.

தகவல் தொழில்நுட்பத்துறை ஆரம்பிக்கப்பட்டவுடன் மாணவர்கள் தமது பட்டக்கல்வியை கற்கும் அதே காலப்பகுதியில் தகவல் தொழில்நுட்பத்தில் சாதாரண சான்றிதழையும், டிப்ளோமா சான்றிதழையும் பெற்றுக் கொள்ள முடியும். கொழும்பு பல்கலைக்கழக கணனித்துறை தயாரித்த பாடத்திட்டத்துக் கமைவாக பாடநெறிகள் நடாத்தப்படும் என்று துணைவேந்தர் ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகக்-கலைப/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.