Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை: 3 கி.மீட்டர் பைக் சேஸிங்; செல்போன் திருடனைப் பிடித்த போலீஸ் எஸ்.ஐ! - என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

செல்போன்கள்

சென்னையில் செல்போனைப் பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிய இளைஞர்களை, சினிமா படக் காட்சியைப் போல விரட்டிச் சென்று எஸ்.ஐ பிடித்தார்.

சென்னை மணலி புதுநகர் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்தவர் ரவி (56). இவர் நேற்று காலை மாதவரம் மேம்பாலம் அருகில் பைக்கில் சென்றார். அப்போது பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், ரவியின் செல்போனை மின்னல் வேகத்தில் பறித்துக் கொண்டு தலைமறைவாகினர். செல்போனைப் பறித்துக் கொண்டு இளைஞர்கள் செல்வதை அதிர்ச்சியோடு பார்த்தபடி, `திருடன்... திருடன்’ என்று ரவி சத்தம் போட்டார்.

திருட்டு பைக்
 
திருட்டு பைக்

அதைக் கேட்ட அவ்வழியாக பைக்கில் வந்த மாதவரம் காவல் நிலைய எஸ்.ஐ ஆண்டலின் ரமேஷ், செல்போனைப் பறித்து விட்டு சென்ற இளைஞர்களை பைக்கில் விரட்டினார். சாஸ்திரி நகர் மெயின் ரோட்டில் செல்போன் திருடர்களை மடக்கினார். அப்போது பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார். ஆனால், பைக்கை ஓட்டிய இளைஞர், எஸ்.ஐ-யிடம் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அந்த இளைஞரைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் விசாரித்த போது வியாசர்பாடி சர்மா நகரைச் சேர்ந்த அருண்ராஜ் (20) எனத் தெரிந்தது.

 
 

அவர் அளித்த தகவலின்படி தப்பி ஓடியவர் நவீன்குமார் (23), மார்த்தூர் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தது. இதையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 செல்போன்கள், ஒரு பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அருண்ராஜ், அவரின் கூட்டாளி நவீன்குமார் ஆகியோருடன் சேர்ந்து ராயபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (19) என்பவரும் செல்போன் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

சிசிடிவி காட்சி
 
சிசிடிவி காட்சி

கைதான அருண்ராஜ், நவீன்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து 27-ம் தேதி காலையில் வடக்க்கு கடற்கரை காவல்நிலைய எல்லைப் பகுதியிலும் ராயபுரம் காவல் எல்லைப் பகுதியிலும் மாதவரம் பகுதியில் 2 இடங்களிலும் என 4 பேர்களிடம் தொடர்ந்து ஒரே நாளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். அருண்ராஜ் மீது வழிப்பறி, செல்போன் பறிப்பு உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. செல்போனைப் பறித்து விட்டு தப்பிய அருண்ராஜை துணிச்சலாகப் போராடி பிடித்த எஸ்.ஐ- ஆண்டலின் ரமேஷின் சிசிடிவி வீடியோ வைரலாகப் பரவியது. அதைப்பார்த்த சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதைப்பதிவு செய்து எஸ்.ஐ-க்கு பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவரை நேரில் அழைத்து வாழ்த்துக்களையும் கமிஷனர் தெரிவித்தார்.

 

எஸ்.ஐ - ஆண்டலின் ரமேஷிடம் பேசினோம். ``சம்பவத்தன்று நான் பைக்கில் மாதவரம் காவல் நிலையப் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். அப்போது அவ்வழியாக வேகமாக பைக்கில் இரண்டு இளைஞர்கள் சென்றனர். அதைப்பார்த்ததும் எனக்கு சந்தேகம் வந்தது. இந்தச் சமயத்தில் ஒருவர், `செல்போனை திருடிக் கொண்டு செல்கிறார்கள்’ என்று கூறியபடி இளைஞர்களை விரட்டிக் கொண்டு வந்தார். உடனே, நான் அந்த இளைஞர்களை பைக்கில் விரட்டினேன். 3 கி.மீட்டர் தூரம் அந்த பைக்கை விரட்டிப் பிடித்தேன்.

எஸ். ஐ - ரமேஷைப் பாராட்டும் கமிஷனர்
 
எஸ். ஐ - ரமேஷைப் பாராட்டும் கமிஷனர்

அதை சிசிடிவியில் பார்த்திருப்பீர்கள். பைக்கை ஓட்டியவர் மட்டுமே என்னிடம் சிக்கினார். இன்னொருவன் தப்பிவிட்டார். செல்போன் திருடப்படுவது சாதாரண விஷயமல்ல. செல்போனுக்குள் தனிப்பட்ட தகவல்கள் இருக்கும். செல்போன் திருடன் சிக்கியதும் அவரிடம் விசாரித்தபோதுதான் செல்போன் திருட்டுக் கும்பல் குறித்த முழு தகவல்கள் தெரியவந்தது. என்னிடம் சிக்கிய செல்போன் திருடன் அருண்ராஜ், அந்தப் பகுதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீஸ் டீம் அந்த லாட்ஜுக்குச் சென்றது. அப்போது தப்பி ஓடிய அருண்ராஜின் கூட்டாளி நவீன்குமார் அங்கு வந்தார். அப்போது அவரையும் பிடித்தோம்.

நவீன்குமார், கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களின் கூட்டாளி விக்னேஷையும் கைது செய்திருக்கிறோம். சிசிடிவி கேமரா மூலம் தங்களைப் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக லாட்ஜில் அறை எடுத்து தங்கி வந்திருக்கின்றனர். திருடிய செல்போன்களை நண்பர்களிடமே விற்று வந்திருக்கின்றனர். அவர்கள் ஓட்டிவந்த பைக்கும் பூக்கடை பகுதியில் திருடப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

https://www.vikatan.com/news/crime/chennai-police-si-chased-cellphone-thief-for-3-km-and-secured

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.