Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பு வரைபு உருவாக்கம்- தமிழ் கட்சிகளால் ஐவர் கொண்ட குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசியலமைப்பு வரைபு உருவாக்கம்- தமிழ் கட்சிகளால் ஐவர் கொண்ட குழு

  • December 1, 20207:51 pm

புதிய அரசியலமைப்பு வரைபை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழு, தமிழ் தேசியக் கட்சிகளால் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பிற்கான சிபாரிசுகளை இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி அரசாங்கம் கேட்டுள்ளது. இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் கட்சிகள் விவாதித்தன.

இதன்போது, தமிழ் தேசியக் கட்சிகள் சார்பில் சிபாரிசு வரைவொன்றை சமர்ப்பிப்பதென முடிவாகியுள்ளது.

இதேவேளை, கார்த்திகை தீபத் திருநாளில் வடக்கு மாகாணத்தில் இராணுவம் அடாவடியில் ஈடுபட்டமை தொடர்பாக கண்டனம் வெளியிட்டு அரசாங்கத்துக்கு கடிதம் எழுதுவதாகவும் தமிழ் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், ஈ.சரவணபவன், புளொட் சார்பில் கஜதீபன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.அருந்தவபாலன், பேராசிரியர் க.சிவநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சி சார்பில் என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பொ.ஐங்கரநேசன், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் சார்பில் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கடந்த அரசில் யாப்பு உருவாக்க முயற்சியின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த வரைபு, கடந்த அரசாங்கத்தில் தமிழ் மக்கள் பேரவை சமர்ப்பித்த வரைவு, அத்துடன், வட மாகாண சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைபு ஆகியவற்றின் உள்ளடங்கங்களிலிருந்து மேம்பட்ட புதிய வரைபை உருவாக்குவதென முடிவானது.

இந்த வரைபை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. மாவை சேனாதிராசா தலைமையில் சீ.வீ.கே.சிவஞானம், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் யாப்பு வரைபை உருவாக்க குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் 10 நாட்களில் இந்தக் குழு வரைபை இறுதி செய்து, தமிழ் தேசியக் கட்சிகளின் தலைமைகளுக்கு சமர்ப்பிப்பதென முடிவாகியுள்ளது. கட்சித் தலைவர்களின் அங்கீகாரத்தின் பின்னர், அந்த வரைபை மாவை சேனாதிராஜா பிரதமரிடம் கையளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சி.வி.விக்னேஸ்வரன் தரப்பில் நிபுணர்களை வைத்து ஒரு யாப்பு வரைபை உருவாக்கி வருவதாக, அவரது பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது. இந்த வரைபையும் உள்ளடக்கியதாக, புதிய வரைபைத் தயாரிப்பதென முடிவாகியுள்ளது.

 

https://www.meenagam.com/புதிய-அரசியலமைப்பு-வரைபு/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழினத்தின் தற்போதைய இழிநிலை : புதிய சட்டவரைபை தயாரிக்க சட்டத்துறையில் அடிப்படை தகுதி அற்றவர்களைக் கொண்ட குழு நியமனம்

 
 
இன்றைய ஊடக அறிக்கைகளின் படி தமிழ்கட்சிகள் ஒன்றிணைந்து 5 பேர் கொண்ட அரசியல் யாப்பு வரைபுக் குழுவை நியமித்து இருப்பதாகவும் அதில் மாவை சேனாதிராஜா தலைமையில் சிவிகே  சிவஞானம், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம் கே சிவாஜிலிங்கம் , பொருளியல் பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் செயற்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கோமாளித்தனம் என்னவென்றால் இவர்களில் ஒருவர் கூட அடிப்படை சட்டஅறிவுடைய சட்டத்தரணியாக கூட இருக்கவில்லை என்பதுடன்  அதன் காரணமாக இத்தகைய குழு அமைக்கப்பட்டது கற்றுஅறிந்தோர் சமூகமாக இருந்த ஈழத்தமிழினத்தில் உள்ள ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய விடயமாக மாறியுள்ளது.
 
புலிகளின் காலத்திலேயே சட்டவரைபை அவர்கள் உருவாக்க முயன்றபோது நேர்மையாக தமது உறுப்பினர்களின் சட்டஅறிவு போதாது என்பதை ஏற்றுக்கொண்டு முன்னாள் சட்டமாஅதிபர் சிவபசுபதி சட்டநிபுணர் விசுவேந்திரன் மேலும் பல கற்றறிந்த பேராசிரியர்களை கொண்ட ஆலோசனைக்குழுவை நியமித்து இருந்தார்கள். ஆனால் இன்று சட்டம் சம்பந்தமான அடிப்படை அறிவற்ற குழு ஓன்று அரசியல் யாப்பு வரைபை தயாரிக்க புறப்பட்டு இருப்பது இந்தியா அல்லது வேறு சக்திகளினால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஒரு அரசியல் யாப்பு வரைபுக்கு உயிர் கொடுக்கும் சூழ்ச்சியோ என்ற நியாயமான சந்தேகம் பலர் மனதிலும் எழுந்துள்ளது.
 
கடந்த காலத்தில் சுகாதாரத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் தமிழர் தேசத்தை பாதிக்கும் பிரச்சினைகளில் முடிவெடுக்கும் போது தொடர்புடைய துறைசார் நிபுணர்களையும் பேராசிரியர்களையும் கொண்ட ஆலோசனைச்சபை அமைத்து அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படவேண்டும் என்று தமிழ் கட்சிகளை கோரியிருந்தேன். ஆனால் தமிழ்கட்சிகளின் தற்போதைய தான்தோன்றித்தனமான செயல்பாடுகள் கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற் கூற்றம் என்று ஒளவையார் மூதுரையில் பாடியிருப்பதை நினைவூட்டுகிறது. இந்த நிலையில் இந்தக் குழுவினரின் செயல்பாடுகளையும் இவர்களால் சமர்ப்பிக்கப்பட உள்ள அரசியல் யாப்பு  வரைபையும் ஈழ தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும் பொறுப்பு வாய்ந்த தமிழ் ஊடகங்கள் இது தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும்  விநயமாக கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

Dr முரளி வல்லிபுரநாதன்

சமுதாய மருத்துவ நிபுணர்

 

https://inioru.com/ஈழத்தமிழினத்தின்-தற்போத/

 

3 hours ago, கிருபன் said:

ஈழத்தமிழினத்தின் தற்போதைய இழிநிலை : புதிய சட்டவரைபை தயாரிக்க சட்டத்துறையில் அடிப்படை தகுதி அற்றவர்களைக் கொண்ட குழு நியமனம்

 

 
இன்றைய ஊடக அறிக்கைகளின் படி தமிழ்கட்சிகள் ஒன்றிணைந்து 5 பேர் கொண்ட அரசியல் யாப்பு வரைபுக் குழுவை நியமித்து இருப்பதாகவும் அதில் மாவை சேனாதிராஜா தலைமையில் சிவிகே  சிவஞானம், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம் கே சிவாஜிலிங்கம் , பொருளியல் பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் செயற்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கோமாளித்தனம் என்னவென்றால் இவர்களில் ஒருவர் கூட அடிப்படை சட்டஅறிவுடைய சட்டத்தரணியாக கூட இருக்கவில்லை என்பதுடன்  அதன் காரணமாக இத்தகைய குழு அமைக்கப்பட்டது கற்றுஅறிந்தோர் சமூகமாக இருந்த ஈழத்தமிழினத்தில் உள்ள ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய விடயமாக மாறியுள்ளது.
 
புலிகளின் காலத்திலேயே சட்டவரைபை அவர்கள் உருவாக்க முயன்றபோது நேர்மையாக தமது உறுப்பினர்களின் சட்டஅறிவு போதாது என்பதை ஏற்றுக்கொண்டு முன்னாள் சட்டமாஅதிபர் சிவபசுபதி சட்டநிபுணர் விசுவேந்திரன் மேலும் பல கற்றறிந்த பேராசிரியர்களை கொண்ட ஆலோசனைக்குழுவை நியமித்து இருந்தார்கள். ஆனால் இன்று சட்டம் சம்பந்தமான அடிப்படை அறிவற்ற குழு ஓன்று அரசியல் யாப்பு வரைபை தயாரிக்க புறப்பட்டு இருப்பது இந்தியா அல்லது வேறு சக்திகளினால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஒரு அரசியல் யாப்பு வரைபுக்கு உயிர் கொடுக்கும் சூழ்ச்சியோ என்ற நியாயமான சந்தேகம் பலர் மனதிலும் எழுந்துள்ளது.
 
கடந்த காலத்தில் சுகாதாரத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் தமிழர் தேசத்தை பாதிக்கும் பிரச்சினைகளில் முடிவெடுக்கும் போது தொடர்புடைய துறைசார் நிபுணர்களையும் பேராசிரியர்களையும் கொண்ட ஆலோசனைச்சபை அமைத்து அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படவேண்டும் என்று தமிழ் கட்சிகளை கோரியிருந்தேன். ஆனால் தமிழ்கட்சிகளின் தற்போதைய தான்தோன்றித்தனமான செயல்பாடுகள் கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற் கூற்றம் என்று ஒளவையார் மூதுரையில் பாடியிருப்பதை நினைவூட்டுகிறது. இந்த நிலையில் இந்தக் குழுவினரின் செயல்பாடுகளையும் இவர்களால் சமர்ப்பிக்கப்பட உள்ள அரசியல் யாப்பு  வரைபையும் ஈழ தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும் பொறுப்பு வாய்ந்த தமிழ் ஊடகங்கள் இது தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும்  விநயமாக கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

Dr முரளி வல்லிபுரநாதன்

சமுதாய மருத்துவ நிபுணர்

 

https://inioru.com/ஈழத்தமிழினத்தின்-தற்போத/

 

இதில் உள்ள இரண்டுபேர் படித்த பண்புள்ளவர்களாக தெரிகிறார்கள். மூன்றாமவர் அப்படி பெரிதாக படிக்கவிடடாலும் சமூகத்தில் ஒரு மதிப்பு இருக்கின்றது. இவர்கள் புத்தியை பாவித்து எதாவது தயாரித்தால் சரிதான். மற்ற இரண்டு பெரும் வீணுக்கு போட்டிருக்கிறார்கள். இதிலுமா இவர்களுக்கு ஆட்களை தேடிப்பிடிப்பதில் பஞ்சம். தமிழனுக்கு வந்த சோதனை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.