Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள் – Eeladhesam.com

வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு  மாகாணம்!

புரெவி புயலையடுத்து வடக்கில் பெய்து வரும் கன மழை காரணமாக வடக்கின் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மராட்சியில் நேற்று 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவானதால், மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள் திடீரென வெள்ளத்தில் மூழ்கின.

2008ஆம் ஆண்டு நிஷா புயலால் ஏற்பட்ட வெள்ள நிலமைப்போன்று யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, கடந்த வாரம் புரேவி புயலால் இடம்பெயர்ந்து நலன்புரி முகாங்களில் தங்கியிருந்த மக்கள் வீடு திரும்பிய நிலையில், மீளவும் நலன்புரி நிலையங்களுக்குத் திரும்புவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இதேநேரம், சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்திலும் பெய்து வரும் கனத்த மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக பாரதிபுரம் பகுதி வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது.

மேலும் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

கனகாம்பிகை குளம் வான்பாய்வதால் அதிக நீர் வெளியாகிறது. இதனால் கனகாம்பிகைக்குளம், இரத்தினபுரம், ஆனந்தபுரம் இழக்கு, உரையால் புரம் பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள் | ilakkiyainfo   வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள் – Eeladhesam.com

வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள் - TamilWil - Tamil News  Website

http://athavannews.com/வெள்ளக்காடாக-மாறியுள்ள-வ/

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணம்!
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு

 
1-40.jpg
 21 Views

கிளிநொச்சி மாவட்டத்தில் 1 846 குடும்பங்களைச் சேர்ந்த 5 439 பேர்  தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் வெள்ளிட்ட  புள்ளி விபரங்களின் அடிப்படையில் மூன்று வீடுகள் முழுமையாகவும், 273 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.

அதேவேளை, இரண்டு பாதுகாப்பு அமைவிடங்களில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 650 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 38 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 676 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 654 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் மூன்று வீடுகள் முழுையாகவும், 194 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அத்துடன், இரணைதீவில் அனர்த்தத்தினால் சிக்கியுள்ள 88 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் தொடர்ந்தும் இரண்டு பாதுகாப்பு அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 293 குடும்பங்களைச் சேர்ந்த 963 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், பாதிக்கபபட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளை அந்தந்த பிரதேச செயலகங்கள் ஊடாக பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

https://www.ilakku.org/கிளிநொச்சி-மாவட்டத்தில-5/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.