Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டத்திற்கு வடக்கு மீனவர்கள் ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில், இந்திய இழுவைப் படகினால், பாதிக்கப்பட்ட மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு, வடமாகாண மீனவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

spacer.png

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை மற்றும் இந்திய அரசிடம் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தினரால், இன்று கோரிக்கைககள் அடங்கிய மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த மகஜர்களை, யாழிலுள்ள இந்திய துணைத்தூதுவர் அலுவலகத்திலும், யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபரிடமும் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தினர் இன்று வழங்கி வைத்தனர்.

முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டத்திற்கு வடக்கு மீனவர்கள் ஆதரவு  | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்களுக்காக முடங்கியது முல்லைத்தீவு..!

இன்று முல்லைத்தீவில் மீனவர்களால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

spacer.png

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, முல்லைத்தீவு மீனவர்களால் இன்றைய தினம் (15.12.2020) குறித்த போராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

spacer.png

குறித்த போராட்டத்திற்கு ஆதரவளித்து முல்லைத்தீவு - வர்த்தகசங்கத்திற்குட்பட்ட கடைகள், மற்றும் சந்தைத் தொகுதி என்பன மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மீனவர்களுக்காக முடங்கியது முல்லைத்தீவு..! | Virakesari.lk

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாவது  நாளாகவும் தொடர்கின்ற முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம்..!

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் 15-12-2020 அன்று ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று (19.12.2020)  ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
 

spacer.png

அண்மைய நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் இழுவை படகுகளின் அத்துமீறிய செயல் காரணமாக தொடர்ச்சியாக தமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாகவும் இந்திய இலங்கை அரசாங்கம் உரிய வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி எல்லை  மீறி தமது பகுதிகளில் வருகின்ற மீன்பிடி படகுகளை கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி தமக்கு வாழ்வாதார தொழிலை நிம்மதியாக செய்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தருமாறு கோரி, தொடர் கவனயீர்ப்பு போராட்டம்  ஆரம்பித்த நிலையில் இன்று  ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

spacer.png
எல்லை தாண்டி வருகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினர் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் உரிய வகையில் எல்லைதாண்டி வந்தவர்களை கட்டுப்படுத்தினால் எமது வாழ்வாதாரத் தொழிலை சிறந்த முறையில் செய்து கொண்டு இருக்க முடியும் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

spacer.png

இதேவேளை  மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் சென்று மீனவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

spacer.png

 

https://www.virakesari.lk/article/96861

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.