Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களின் உடல்கள் தகனம்: மாலைதீவின் பதில் கவலையளிக்கிறது – ஐ.நா. நிபுணர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாலைதீவில் உடல்களை அடக்கம் செய்வது இலங்கையில் முஸ்லீம்கள்  புறக்கணிக்கப்படும் நிலையை ஏற்படுத்தும்- ஐநா நிபுணர்!! – Athirady News

முஸ்லிம்களின் உடல்கள் தகனம்: மாலைதீவின் பதில் கவலையளிக்கிறது – ஐ.நா. நிபுணர்

கொரோனாவினால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வது இலங்கையில் முஸ்லிம் சமூகம் மேலும் விலக்கிவைக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என மத நம்பிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் அஹ்மெட் சஹீட் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு மாலைதீவின் பதில் ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது என ஐ.நா நிபுணர் தெரிவித்துள்ளார்.

இந்த வேண்டுகோள் முஸ்லிம் சமூகத்திடமிருந்தோ அல்லது அவர்களின் சம்மதத்துடனோ வெளியாகவில்லைபோல தோன்றுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கையில் முஸ்லிம் சமூகம் மேலும் ஒதுக்கிவைக்கப்படும் நிலை உருவாகலாம் என குறிப்பிட்டுள்ள அவர், உலக சுகாதார ஸ்தாபனம் தனது வழிகாட்டுதல்களில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம் என தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/முஸ்லிம்களின்-உடல்கள்-தக/

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாஸா அடக்கம் குறித்த சர்ச்சை – ஹக்கீமின் மின்னஞ்சலுக்கு ஐ.நா. அறிக்கையாளர் பாராட்டு

 
0000.0-696x348.png
 15 Views

இலங்கையிலேயே வாழ்ந்து, மரணிக்கும் கொவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்களின் ஜனாஸாக்களை இங்கேயே நல்லடக்கம் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிய மின்னஞ்சல் குறித்து அவருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சமய சுதந்திரம் மற்றும் நம்பிக்கை தொடர்பான விசேட அறிக்கையாளர் அஹ்மத் ஷஹீட் நன்றி தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நன்றி தெரிவித்து பிரஸ்தாப ஐ.நா விசேட அறிக்கையாளர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில், மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கான அந்த மின்னஞ்சலை பொதுத் வெளியில் பகிர்ந்ததையும் வரவேற்றுள்ளார்.

இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள விசேட அறிக்கையாளர் அஹ்மத் ஷஹீட், இவ்வாறாக சடலங்களை பலவந்தமாக எரியூட்டுவதைக் கண்டித்து தாமும் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலேயே இலங்கை அரசா ங்கத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தாம் சென்ற ஆண்டு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது இங்கிருந்த நிலைமைகள் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தில் தாம் அதிக கரிசனை கொண்டிருப்பதாகவும் அவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் மேலும் தெரிவித்துள்ளார்.

rauff-hakeem-600-300x150.pngமாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம் பதவியிலிருந்த காலத்தின் பிற்பகுதியில் 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் முஹம்மத் நஷீட் ஜனாதிபதியாக இருந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரையிலும், தாம் அந்நாட்டின் வெளிநாட்டமைச்சராக கடமையாற்றிய போது, முன்னாள் அமைச்சரான ஹக்கீமை பல தடவைகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதையும் அஹ்மத் ஷஹீட் நினைவூட்டியுள்ளார்.

இவ்வாறிருக்க, இலங்கையில் கொவிட் – 19 காரணமாக உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை மாலைதீவிற்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்வதற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுவடைந்து வருகின்றது.

கொவிட் – 19 தொற்றினால் வெளிநாட்டில் மரணிப்பவர்களின் உடல்களை மாலைதீவில் நல்லடக்கம் செய்யவிருப்பதை தாம் ஆதரிக்க முடியாது என முப்பதாண்டு காலமாக அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த மஹ்மூன் அப்துல் கையூம் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் கொவிட் – 19 இனால் இறப்பவர்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் அடக்கம் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹீம் சொஹ்லிக்கு வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து, வெளிநாட்டு அமைச்சர் அப்துல்லாஹ் ஷஹீட் அதற்கு சாதகமாக இணக்கம் தெரிவித்து பதிலளித்திருந்த நிலையிலேயே ரவூப் ஹக்கீம் இலங்கையிலுள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஒமர் அப்துல் ரஸ்ஸாக்கிற்கு அதனோடு சம்பந்தப்பட்ட மின்னஞ்சலை அனுப்பி வைத்திருந்தார்.

அதில் மாலைதீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துவிட்டு, கொவிட் – 19 தொற்றினால் மரணிப்பவர்களை எரிப்பது மட்டுமே இலங்கை அரசாங்கத்தின் ஒரே கொள்கை என்பதால் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன் பின்னணியில், கடந்த செவ்வாய்கிழமை நடந்த அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவருக்கு அதுபற்றி தெரியாது என்றும், அது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை என்றும் தெளிவில்லாத விதத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

 

https://www.ilakku.org/?p=37457

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மக்களின் சடலங்களைக் கட்டாயத் தகனம் செய்வது பேரினவாத ஒடுக்கு முறையே – பொ. ஐங்கரநேசன் கண்டனம்

1-112.jpg
முஸ்லீம் மக்களின் சடலங்களைக் கட்டாயத் தகனம் செய்வது பேரினவாத ஒடுக்கு முறையே தவிர் சுகாதார நடைமுறை அல்ல என பொ. ஐங்கரநேசன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றால் மரணம் அடைந்த முஸ்லீம் மக்களினது சடலங்களை அவர்களது மத நம்பிக்கைகளை உதாசீனம் செய்து கட்டாயத் தகனம் செய்வதும், நாட்டுக்கு வெளியே ஆளரவமற்ற தீவொன்றில் அவர்களது சடலங்களைப் புதைப்பது தொடர்பாக ஆராய்வதும் முஸ்லீம் மக்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் பௌத்த, சிங்களப் பேரினவாத ஒடுக்கு முறையே தவிர சுகாதார நடைமுறை அல்ல என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றால் இறந்த முஸ்லீம் மக்களின் சடலங்களைக் கட்டாய எரியூட்டும் இலங்கை அரசாங்கத்தின் நடைமுறை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஒவ்வொரு மதத்தைச் சார்ந்த மக்களும் தாங்கள் கடைப்பிடிக்கும் மதநம்பிக்கைகளின் அடிப்படையிலேயே தங்களின் இறுதிக் கிரியைகள் செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பர். அந்த வகையில் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்ட இஸ்லாம் மார்க்கத்தை கடைப்பிடிக்கும் மக்கள் தங்களின் சடலங்கள் புதைக்கப்படுவதையே மரபாகக் கொண்டுள்ளனர்.

இஸ்லாம் மதத்தவர்கள் வால் எலும்பு என்று அழைக்கப்படும் முள்ளந்தண்டின் கடைசி எலும்பான குயிலலகு எலும்பில் இருந்தே உயிர்த்தெழல் நிகழ்வதாக நம்புகின்றனர். எரித்தால் வாலெலும்பு உடனடியாகவே சாம்பலாகி விடும் என்பதாலேயே அவர்கள் சடலத்தைப் புதைத்து வருகின்றனர்.

இந்து மதத்தவர்கள் மறு பிறப்பில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளார்கள். பௌத்தர்களும் மறுபிறப்பில் நம்பிக்கை வைத்துள்ளார்கள். கிறிஸ்தவர்கள் இறப்பின் பின்னர் நியாயத் தீர்ப்பின் அடிப்படையிலேயே சொர்க்கமும் நரகமும் தீர்மானிக்கப்படுவதாக நம்புகிறார்கள்.

உணர்வுபூர்வமான இந்நம்பிக்கைகளை எவரும் கேள்விக்கு உட்படுத்துவதில்லை, பண்பாடு சார்ந்த இவ்விடயங்களை அறிவியல் ரீதியாக எவரும் ஆராய்வதில்லை. இவற்றைப் போன்றதே இஸ்லாமியர்களினது உயிர்த்தெழுதல் நம்பிக்கையுமாகும்.
முஸ்லீம் மக்களது சடலங்களை எரியூட்டுவதற்குச் சமூகத்தின் சகல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளபோதும் அரசாங்கம் தனது முடிவை மாற்றுவதாக இல்லை.

மாறாக, மாலைதீவில் மனிதக் குடியிருப்புகள் அற்ற தீவொன்றில் புதைப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவும் பௌத்த, சிங்கள பேரினவாதத்தின் ஒரு வெளிப்பாடே ஆகும். இலங்கைக் குடிமக்களாகத் தங்களை உணரும் முஸ்லீம் மக்களை இலங்கைக்கு வெளியே அடக்கம் செய்வது என்பது அவர்களை இலங்கையில் வேரிழக்கச் செய்யும் முயற்சியின் ஒரு கட்டமே ஆகும்.

உலக சுகாதார நிறுவனம் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் சடலங்களைக் கையாள்வது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் புதைப்பதை தடைசெய்வதாகக் குறிப்பிடவில்லை. எரிப்பதோ புதைப்பதோ எதுவாயினும் மக்களின் நம்பிக்கைகள் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றே குறிப்பிட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசாங்கம் புதைத்தால் வைரசுக்கள் நீரால் பரவலடையும் என்று அறிவியலுக்கு ஒவ்வாத காரணத்தைக் காட்டி முஸ்லீம்களின் சடல விவகாரத்தைக் கையாண்டு வருகிறது.

கொரோனாவைச் சாட்டாக வைத்து முஸ்லீம் மக்கள் மீது அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த ஒடுக்குமுறையைக் உடனடியாகவே கைவிட்டு சடலங்களை அவர்களின் விருப்பப்படியே புதைப்பதற்கு ஆவன செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=37469

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.