Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு இறுதி செய்துள்ள புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு வரைபு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.ராம்)

 

சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வை மையமாகக் கொண்ட புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு வரைபினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி செய்துள்ளது.

“இலங்கையின் புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த வரைவில், இலங்கை ஐக்கிய நாடாக நிலையான அமைதி மற்றும் செழிப்பை நோக்கி முன்னேற வேண்டுமனால் புதிய அரசியலமைப்பு அவசியம் என்று முதலாவது வரியிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் மக்களும் இலங்கை நாட்டுப் பிரஜைகள் என்ற அடிப்படையில் பல்லின, மொழி, மதங்களைக் கொண்ட ஐக்கியமான பிரிக்கப்படாத பிரிக்க முடியாதவொன்றாக இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாடும் வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பானது, நாட்டில் வசிக்கும் வெவ்வேறு பட்ட மக்களுக்கு இடையிலான சமூக ஒப்பந்தத்தினை பிரதிபலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைவிடவும், சமத்துவம், சமஷ்டி, பிரிவினைவாதம் ஏற்பட்டமைக்கான சூழல் மற்றும் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்தல் ஆகிய நான்கு தலைப்புக்களின் கீழாக சுதந்திர இலங்கைளின் பின்னரான நிலைமைகள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து அதிகாரப்பகிர்வு சம்பந்தமான விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த துணைத்தலைப்பின் கீழ் 1983இற்குப் பின்னர் இலங்கையை ஆட்சி செய்த சிங்களத் தலைவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக தமிழ்த் தலைவர்களுக்கும், இந்தியாவுக்கும், சார்வதேச நாடுகளுக்கும் வழங்கிய வாக்குறுதிகள் திகதி வாரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேடமாக, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா.செயலாளர் பான் கீ மூன்,இந்தியப் பிரதமர்களான மன்மோகன் சிங், நரேந்திரமோடி உள்ளிட்டவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் உட்பட அவர் பல்வேறு சந்தப்பங்களில் அளித்த வாக்குறுதிகளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது கடந்த அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் உள்ளிட்டவையும் சுட்டுரைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று முற்பகல் 10.30 இற்கு கொழும்பில் உள்ள கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் இல்லத்தில் புதிய அரசியலமைப்புக்காக முன்மொழிவுகளடங்கிய வரைவு பற்றிய கலந்துரையாடல் ஆரம்பமாகியிருந்தது.

மாவை.சேனாதிராஜா, சிறிதரன், சுமந்திரன்,சாணக்கியன், கலையரசன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் சுரேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயப்பரப்புக்கள் ஒவ்வொன்றாக ஆராயப்பட்டு இறுதி செய்யப்பட்டது. இவற்றில் இறுதி செய்யப்பட்ட வரைவினை கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பங்காளிக்கட்சிகளின் தலைவர் ஆகியோரின் கையொப்பத்துடன் சமர்ப்பிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டம் தொடர்பாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதை அடிப்படையாக வைத்து நீண்டகாலமாக கோரப்பட்டு வந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வினை மையப்படுத்திய அரசியலமைப்பு வரைவொன்று இறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை ஆட்சியாளர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அதிகாரப்பகிர்வு, தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய வாக்குறுதிகள் மற்றும் ஒப்பந்தங்கள் ஆணைக்குழுக்களின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள், சர்வதேச தலைவர்களுக்கும் நாடுகளுக்கும் வழங்கிய உறுதிமொழிகள் ஏற்கனவே சட்ட ஏற்பாட்டில் உள்ள விடங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியதாக எமது வரைவு இறுதியாகியுள்ளது.அதனை நாம் அடுத்தவாரமளவில் அனுப்பி வைப்பதற்கு எதிர்பார்ப்பதாக கூறினார்.

கூட்டமைப்பு இறுதி செய்துள்ள புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு வரைபு | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.