Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாக்கிஸ்தானை சேர்ந்த பெண் மனித உரிமை செயற்பாட்டாளர் கனடாவில் சடலமாக மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தானை சேர்ந்த பெண் மனித உரிமை செயற்பாட்டாளர் கனடாவில் சடலமாக மீட்பு

பாக்கிஸ்தானை சேர்ந்த பெண் மனிதஉரிமை செயற்பாட்டாளர் ஒருவர் கனடாவில்   சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கரிமா பலோச் என்ற 37வயது பெண் மனித உரிமை செயற்பாட்டாளரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

pak-humari1.jpg
பாக்கிஸ்தான் அரசாங்கத்தையும் இராணுவத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்த கரிமா பலோச் ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயிருந்த நிலையில் கனடா பொலிஸார் அவர் குறித்த விபரம் தெரிந்தவர்கள் தங்களை தொடர்புகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரணம் குறித்து தங்களிற்கு எந்த சந்தேகமும் இல்லை என கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது சகோதரியின் மரணம் தனது குடும்பத்திற்கு மாத்திரம் இழப்பில்லை பலூச் தேசிய அமைப்பிற்கும் இழப்பு என உயிரிழந்த மனித உரிமை செயற்பாட்டாளரின் சகோதரி தெரிவித்துள்ளார்.

pak-hu-ri-3-300x169.jpg
மனித உரிமைகள் குறித்த பிரச்சாரத்திற்காக பலூச்சை 2016இல் பிபிசி உத்வேகம் அளிக்கும் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் ஒருவராக பிபிசி தெரிவு செய்திருந்தது.
பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை  தொடர்ந்து 2015இல் பாக்கிஸ்தானிலிருந்து வெளியேறிய அவர் பலூச்சிஸ்தான் மக்களின் உரிமைகளிற்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார்.
இதன்காரணமாக அவர் கொலை மிரட்டல்களை எதிர்கொண்டார்.

 
  • கருத்துக்கள உறவுகள்

Ep4PJfhXcAUohH_?format=jpg&name=large

 

132746861_10164882300880012_849877120859

 

கனேடிய ஊடகங்கள்  மெளனம் சாதிப்பதன் மர்மம் என்ன??

 

  • கருத்துக்கள உறவுகள்

பலுசிஸ்தானின் பெண் ஆர்வலர் கனடாவில் மர்மமான முறையில் மரணம்!

    by : Anojkiyan

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/karima-mehrab-720x450.jpg

பாகிஸ்தானின் தென்மேற்கே அமைந்த பெரிய மாகாணமான இயற்கை வளங்கள் நிறைந்த பலுசிஸ்தான் மாகாண பெண் ஆர்வலரான கரீமா பலுச் என்ற பெண், கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

உயிருக்கு அஞ்சி கனடாவில் அகதியாக வசித்து வந்த கரீமாவை கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து காணவில்லை. அவர் இருப்பிடம் பற்றி அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கும்படி ரொறன்ரோ பொலிஸார் கேட்டு கொண்டனர்.

இந்தநிலையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தநிலையில், கரீமா பலுச் கண்டெடுக்கப்பட்டுள்ளார். திடீரென அவர் உயிரிழந்தது தீவிர கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என பலுசிஸ்தான் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்துக்கு எதிராக பேசி அங்கிருந்து தப்பி அகதியாக வசிக்கும் நபர் இறப்பது இது முதல் முறையல்ல. கடந்த மே மாதம் பலுச் பத்திரிகையாளர் சாஜித் உசைன் சுவீடன் நாட்டில் இறந்து கிடந்துள்ளார். அவர் கடந்த மார்ச் 2ஆம் திகதியில் இருந்தே உப்சாலா நகரில் இருந்து காணவில்லை.

தொடர்ந்து பலுசிஸ்தான் ஆர்வலர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது கவலை கொள்ள செய்கிறது என பலுசிஸ்தான் போஸ்ட் தெரிவித்துள்ளது.

பலுசிஸ்தான் மாகாண மக்கள் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டும் என போராடி வருகின்றனர். இங்கு வாழும் ஒரு பகுதி மக்கள் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டும் என போராடி வருகின்றனர்.

பாகிஸ்தான் இராணுவம் இங்கு வசிக்கும் மக்களை கடத்தி, கொலை செய்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது.

இதனால், கடந்த 15 ஆண்டுகளாக நீடிக்கும் ராணுவ அடக்குமுறைக்கு எதிராக பலுசிஸ்தானில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். இதில் கரீமா பலுச் முக்கியமானவர்.

சுவிஸ்லாந்தில் நடந்த ஐ.நா. கூட்டத்தொடரில் கூட இராணுவ அடக்குமுறை விவகாரம் பற்றி எடுத்து பேசினார். கடந்த 2016ஆம் ஆண்டு உலகின் 100 செல்வாக்கான பெண்கள் பற்றிய பி.பி.சி.யின் பட்டியலில் கரீமா இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பலுசிஸ்தானின் பெண் ஆர்வலர் கனடாவில் மர்மமான முறையில் மரணம்! | Athavan News

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.