Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தோனேசிய விமானம் 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் காணாமல் போயுள்ளதாக தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசிய விமானம் 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் காணாமல் போயுள்ளதாக தகவல்

 
1-65.jpg
 23 Views

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்தோனேசிய பயணிகள் விமானத்தை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்ததாகவும், தரைக்கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

காணாமல் போன விமானம் ஸ்ரீவிஜயா ஏர் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 -500 என்ற இரகத்தைச் சேர்ந்தது. உள்நாட்டிற்குள்ளேயே ஒரு நகரத்திலிருந்து,   மற்றொரு நகரத்துக்கு இந்த விமானம் பயணம் செய்ததாகவும்  தகவல் தெரியவந்திருக்கிறது.

தற்போது காணாமல் போன பயணிகள் விமானத்தை தேடும் பணியில் அரசும், அதிகாரிகளும் இறங்கியுள்ளனர். அந்த விமானத்தில் 150க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

https://www.ilakku.org/?p=38973

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

182 பயணிகளுடன் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம் மாயம்

182 பயணிகளுடன் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம் மாயம்

 

ஜகார்தா

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 182 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்துடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்குப் புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமனவிமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரிலிருந்து மறைந்துள்ளது. போயிங் 737 ரக விமானம், 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/09163844/Indonesia-Sriwijaya-Air-plane-disappears-from-radar.vpf

இந்தோனேசியா: புறப்பட்ட சில நிமிடங்களில் தொடர்பு துண்டிப்பு - 60 பயணிகளுடன் மாயமான விமானம்!

இந்தோனேசிய விமானம்

இந்தோனேசிய விமானம்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து (Jakarta) புறப்பட்ட ஸ்ரீவிஜயா (SJ182) விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.

ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, எஸ்.ஜே .182 (SJ 182) விமானம் ரேடார் (Radar) சிக்னலிலிருந்து மாயமாகியிருக்கிறது.

இந்தோனேசிய விமானம்
 
இந்தோனேசிய விமானம்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து (Jakarta) புறப்பட்ட ஸ்ரீவிஜயா (SJ182) விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரேடாருடனான தொடர்பை இழந்திருக்கிறது. விமானத்துக்கும் தரைக் கட்டுப்பாடு நிலையத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.

 

ஸ்ரீவிஜயா ஏர் நிறுவன விமானம் ஜகார்த்தாவின் சோகர்னோ-ஹட்டா (Soekarno-Hatta) விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. உள்நாட்டு விமான சேவையை வழங்கிவரும் அந்த நிறுவனத்தின் விமானம், மேற்கு காளிமந்தனின் (West Kalimantan) மாகாணத் தலைநகரான போன்டியனாக் (Pontianak) நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட நான்கு நிமிடங்களில் நடுவானில் திடீரென விமானம் மாயமாகியிருக்கிறது.

மாயமான விமானத்தில், ஐந்து சிறுவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை உட்பட 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக இந்தோனேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போயிங் 737-500 ரக விமானமான எஸ்.ஜே.182 விமானம், ஒரு நிமிடத்துக்குள் 10,000 அடிக்கு மேல் தன் உயரத்தை இழந்து கீழ் நோக்கி இறங்கியிருக்கிறது என்று விமான கண்காணிப்பு வலைதளமான ஃபிளைட்ரேடார் 24 (FlightRadar24) தெரிவித்திருக்கிறது. மாயமான விமானத்தைத் தேடும் பணியில் இந்தோனேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட பல்வேறு ஏஜென்சிகளும் ஈடுபட்டன.

 

https://www.vikatan.com/news/accident/indonesian-sriwijaya-air-plane-loses-contact

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி நிமிடம்: பயணிகள் விமானம் கடலில் மோதியது! 60 வினாடிகளில் ...

ஸ்ரீவிஜயா விமானம் எஸ்.ஜே.182 கடலில் மூழ்கியதாக தகவல்? 

 

ஸ்ரீவிஜயா விமானம் எஸ்.ஜே.182, ஒரு நிமிடத்திற்குள் 10,000 அடியிலிருந்து விழுந்து ஜாவா கடலில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘இந்தோனேசியாவில் போயிங் 737-500 காணாமல் போனதை அறிந்தோம். நாங்கள் இதுதொடர்பான தகவல்களை தொடர்ந்து திரட்டி வருகிறோம். விரைவில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என கூறினார்.

ஜகார்த்தாவின் வடக்கே கடலில் மிதக்கும் குப்பைகள் என்ன என்பதைக் காட்டும் படம் வெளிவந்துள்ளது. இது விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இந்தோனேசியாவின் பொண்டியானாக் செல்லும் வழியில் இருந்த விமானத்தில் இருந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

விமானியுடன் தொடர்பு இழந்த பின்னர் தேடல் மற்றும் மீட்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எயார்நவ் ராடார்பாக்ஸ் தரவுகளின்படி, கடைசி தொடர்பு இன்று காலை 07:40 மணிக்கு 10,900 அடியிலிருந்து 7,650 அடியாக குறைந்தது.
இந்த விமானம் 2012இல் ஸ்ரீவிஜயா எயார் விமான நிறுவனத்தில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/ஜகார்த்தா-விமான-நிலையத்த/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்தோனேசியாவில் விமானம் மாயமான விவகாரம்: 2 இடத்தில் இருந்து கிடைத்த சிக்னல்கள்

இந்தோனேசியாவில் விமானம் மாயமான விவகாரம்:  2 இடத்தில் இருந்து கிடைத்த சிக்னல்கள்
 
இந்தோனேசியாவில் காணாமல் போன விமானத்தின் சிக்னல்கள், ஒரு மீட்டர் நீள விமான துண்டு பொருட்கள், சக்கரம் மற்றும் மனித உடல் பாகங்கள் கிடைத்து உள்ளன.
பதிவு: ஜனவரி 10,  2021 13:55 PM
ஜகார்த்தா
 
இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்கு புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது.
 
ஆனால், கிளம்பிய 4 நிமிடங்களிலேயே 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த விமானம் ரேடாரிலிருந்து மறைந்துள்ளது.
 
 
விமானத்தில் 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேர் இருந்தனர்.  அவர்கள் அனைவரும் இந்தோனேசியா நாட்டை சேர்ந்தவர்கள் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.
 
இதனையடுத்து, விமானம் தொடர்பை இழந்த கடல் பகுதியில் இந்தோனேசியா அவசர மற்றும் மீட்பு சேவையினர் கப்பலில் தேடுதல் பணியை தொடங்கினர். ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். மீட்புக்குழுவினர் விமான பாகங்களை கண்டுபிடித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது.  மேலும், விமானத்தில் பயணித்தவர்களை ஜகார்த்தா விரிகுடாவில் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக மீட்பு அதிகாரிகள்  தெரிவித்தனர்.
 
கடந்த 2018ம் ஆண்டு 189 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் சென்ற போயிங் 737 மேக்ஸ் விமானம் விபத்தில் சிக்கியதற்கு பின் பெரிய அளவில் நடந்த முதல் விமான விபத்து இதுவாகும்.
 
விமான தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் பேகஸ் புருஹிட்டோ கூறும்பொழுது, 2 இடங்களில் இருந்து சிக்னல்கள் கிடைத்து உள்ளன என கூறியுள்ளார்.
 
இதேபோன்று விமானத்தின் உடைந்த பாகங்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு மீட்டர் நீளம் கொண்ட துண்டு பொருட்கள், சக்கரம் ஒன்று மற்றும் மனித உடல் பாகங்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.  உடல் பாகங்களை அடையாளம் காண போலீஸ் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.