Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்கள் சிங்கள மீனவர்களால் தாக்கபட்டனர்

Featured Replies

தமிழக மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள்

குண்டுவீச்சு; ஒருவர் காயம்-படகு சேதம்

ஜூன் 17, 2007

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரு மீனவர் படுகாயமடைந்தார். ஒரு விசைப் படகு சேதமடைந்தது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக நிலவி வந்தது. இந்த நிலையில் இந்தியாவின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து சமீப காலமாக இந்த தாக்குதல் குறைந்துள்ளது.

இந்த நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 784 விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களின் படகுகள் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதில் இருதயராஜ் என்பவருக்குச் சொந்தமான படகு மீது ஐந்து குண்டுகள் வந்து விழுந்து வெடித்தது. இதில் படகு முற்றிலும் சேதமடைந்தது.

அந்தப் படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் குதித்து நீந்தி அருகில் இருந்த படகில் ஏறி உயிர் தப்பினர். இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் தமிழக மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

http://thatstamil.oneindia.in/news/2007/06/17/fisherman.html

இதை நாளை முகர்ஜி சிங்கள மீனவர்கள் அப்பாவிகள் பால்குடியகள் ஒன்றுமறியாத பாப்பாக்கள் இதை விடுதலை புலிகளே செய்திருகின்றனர் நம் காவலில் இருக்கும் விடுதலை புலிகளின் உறுபினர்கள் இதனை மன்னார் கடற்புலிகளின் தளத்துடன் செய்மதி தொலை பேசியுடாக பேசி உறுதிப்படுத்தி உள்ளனர் இதனை மணாளன் தலமையிலான கடற்புலிகளே செய்தது இவ் அறிக்கையை நாளை நான் முதல்வருக்கு அனுப்புவேன் அவர் நாளை சட்டமன்றத்தில் விடுதலைபுலிகள் தமிழக மீனவர்களை தாக்கியதாக அறிவிபார்.மேலதிக மர்ம கதையை இன்று றோ அதிகாரிகளுடனும் மலையாளி நாராயணனிஉடனும் கலந்து இறுதி முடிவெடுக்கப்படும் தற்போது இவ் திரக்கதையின் கதை விவாதம் நடை பெறுகின்றது விரைவில் நாராயனன் முழு திரிகதையையும் தயாரித்து இயக்கி வெளியிடுவார் இந்த முரை சிறுவர்கல் இல்லாமல் பார்த்து கொன்டுள்லோம் நிச்சயம் இக்கதை வெற்றி பெறும் என சொல்லி இருகிறார் முகர்ஜி

தங்கட மீனவருக்கு பாதுகாப்பு கொடுக்கத் தெரியலை சிங்களவனுக்கு உதவுறாங்களாம்..

போங்கடா..

தமிழகத்தில எல்லோருக்கும் சிவாஜி காய்ச்சல் பிடித்திரக்கு அதனால இதையெல்லாம் கண்டுக்கமாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Mon Jun 18 8:03:13 EEST 2007

கச்சதீவுக் கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் குண்டு வீசித் தாக்குதல் மூவர் படுகாயம்; படகு மூழ்கியது; 12 பேர் பிடிக்கப்பட்டனர்

கச்சதீவுக்கு அருகே உள்ள கடற்பரப் பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதில் மூவர் படு காயமடைந்துள்ளதுடன் அவர்களின் படகு ஒன்றும் மூழ்கடிக்கப்பட்டதாகவும்

மேலும் 12 தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள் ளனர் என்றும் தமிழக நாளிதழ்கள் நேற்று மாலை செய்தி வெளியிட்டன. இதனால் தமிழக கரையோரக் கிராமங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தனுஷ் கோடிக்கும் கச்சதீவுக்கும் இடைப் பட்ட கடற்பிரதேசத்தில் நேற்றுக்காலை தமிழக மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை சில படகுகளில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் "டைன மெட்' வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர் என்று தமிழகச் செய்திகள் தெரிவித்தன.

அப்போது அவர்கள் வீசிய குண்டு தமி ழக மீனவர் இருதயராஜ் என்பவர் ஓட்டிச் சென்ற படகில் வீழ்ந்து வெடித்தது. அந் தப்படகு சுக்குநூறாகி கடலில் மூழ்கியது.

இச்சம்பவத்தில் மூன்று தமிழக மீன வர்கள் படுகாயமடைந்தனர். படகில் இருந்து நான்கு மீனவர்கள் கடலில் குதித்து மற்றைய மீனவர்களின் படகுகளில் ஏறி ராமேஸ்வரம் நோக்கிச் சென்றனர் என்று கடலில் குதித்தவர்களில் ஒருவரான பால முருகன் என்பவர் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்திய இலங்கை மீனவர் கள் டைனமெட் வெடிகுண்டுகள் மற்றும் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை வைத் திருந்தனர் என்றும் அவர் கூறினார்.

தப்பிவந்த மீனவர்களைத் தவிர மேலும் 3 படகுகளில் இருந்த 12 தமிழக மீனவர் களை இலங்கை மீனவர்கள் பிடித்து வைத் திருக்கின்றனர் எனவும் தப்பிவந்தவர் குறிப்பிட்டார்.

பிரச்சினைகள் எதுவும் இன்றி இலங்கை மீனவர்கள் இவ்வாறு தாக்குதல் நடத்தி யமை ஏன் என்று தெரியவில்லை என்றும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத் தப்பட்டு வருவதாகவும் இந்திய மீன் வளத் துறை உதவி இயக்குநர் வேல்பாண்டியன் நேற்று மாலை தெரிவித்தார்.

இப்படி தமிழக நாளேடுகள் தமது செய்தியில் மேலும் தெரிவித்திருக்கின் றன.

எனினும் இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படைத் தகவல்கள் எவையும் நேற்றிரவுவரை வெளியாகியிருக்கவில்லை. (சி)

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.