Jump to content

நினைவுத் தூபி தகர்ப்பு கற்றுத் தந்த பாடங்கள்! – நஜீப் பின் கபூர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுத் தூபி தகர்ப்பு கற்றுத் தந்த பாடங்கள்! – நஜீப் பின் கபூர்

Digital News Team 2021-01-21T07:46:31

நஜீப் பின் கபூர்

அதிரடியாக வருகின்ற புல்டோசர் வாகனம் ஓசைபடாமல் யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நுழைகின்றது. அடுத்த கனமே அங்கு நுழைவாயிலுக்கு அருகில் முள்ளிவாய்க்காலில் இறந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்காக அமைக்கப்பட்ட தூபியை ஐந்து- ஆறு நிமிடங்களில் இருந்த இடமே தெரியாது தகர்த்தெறிகின்றது அந்த புல்டோசர் இயந்திரம். இந்த தகவல்கள் பல்கலைக்கழகத்தில் இருந்தவர்களால் வெளியில் சொல்லப்பட விரைந்து வந்த மாணவர்கள், அயலவர்கள், அரசியல்வாதிகளுக்கு பேரதிர்ச்சி. அங்கு இருந்த நினைவுத் தூபியைக் காணவில்லை.

mullivaikal-destry-300x233.jpg

களத்தில் இருந்த பொலிசாரிடம்  தகர்ப்புக்கு நியாயம் கேட்டனர் மாணவர்கள். துணை வேந்தர் இது மேலிடத்தில் இருந்து தனக்கு வந்த உத்தரவு என்றார். தமது உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அகற்றியது ஏற்றுக்கொள்ள முடியாது என்பது மாணவர்கள் தரப்பு வாதம். அங்கு பெரும் கொந்தளிப்பு நிலை. தெற்கில் பல பல்கலைக்கழகங்களில் இப்படியான நினைவுத் தூபிகள் இருக்க இங்கு மட்டும் என்ன ஒரு நீதி என்று எதிர்ப்புக்கள் வலுக்கின்றது.

இந்த செய்தி காட்டுத் தீ போல பரவி உலகில் எல்லா மூளை முடுக்குகளிலும் வாழ்கின்ற தமிழ் நெஞ்சங்களைக் கொதித்தெழ வைத்தது. கண்டனங்களும் எதிர்ப்புகளும் சர்வதேச மட்டங்களில் நடந்தது. இதற்காக திங்கள் கிழமை வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அறிவிப்புச் செய்யப்பட்டு அது வெற்றிகரமாக அமைந்திருந்தது. வழக்கத்துக்கு மாறாக முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் அனைத்தும் இந்த சம்பவத்துக்கு தமது கவலைகளை வெளியிட்டதுடன் ஹர்த்தாலுக்கு தமது ஆதரவை வழங்குமாறு பகிரங்கமாகக் கேட்டுக் கொண்டனர். தூபியை தகர்ப்பதற்கு அனுமதி கொடுத்த துணைவேந்தரே ஹர்த்தால் தினத்தில் காலையிலே அதே இடத்தில் தூபியை மீள் அமைக்க அடிக்கல் நாட்டியும் இருக்கின்றார். நல்லூர் பிரதேச சபை  இதற்கான அனுமதியை உத்தியோகபூர்வமாக வழங்கி இருக்கின்றது என்பதும் அனைவரும் அறிந்த கதை. இது பற்றி நாம் இங்கு பேசவரவில்லை.

ஆனால், இந்த தூபி தகர்ப்பு தொடர்பிலான பின்னணியையும் அது சொல்ல வருகின்ற செய்தியையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதுகின்றோம். தூபிகள் அல்லது சிலைகள் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு எந்த விதமான சக்திகளும் கிடையாது என்பது கட்டுரையாளனது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் அப்படி  மண்ணாலோ கல்லாலோ சீமெந்து கொண்டோ அல்லது வேறு ஏதாவது மூலப் பொருட்களாலோ வடிவமைக்கப்பட்ட அந்த சிலைகளுக்கு- தூபிகளுக்கு மிகப்பெரிய சக்தி-பலம் மக்கள் உணர்வுகளில் இருந்து பிறப்பெடுக்கின்றது என்பதற்கு முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மிகச் சிறந்த ஒரு உதாரணம் என்பது அது தகர்த்தெறியப்பட்ட போது வெளிப்பட்டது. உலகில் வாழ்கின்ற ஏறக்குறைய 80 மில்லியன் தமிழ் உள்ளங்களை இந்த நிகழ்வு கொதிப்படையச் செய்து விட்டது. அதற்கு அப்பால் சர்வதேசத்தின் பார்வையையும் இந்த சம்பவம் கடந்த வாரம் ஈர்த்திருந்தது.

முறண்பாடான அரசியல் குழுக்கள், அமைப்புக்கள் உலகில் சிதறி வாழ்கின்ற இனத்தை மொழியால் இனத்தால் இந்த முள்ளிவாய்க்கால் தூபி ஒரே நொடியில் ஐக்கியப்படுத்தி விட்டது என்றால் நாம் முன்சொன்ன சக்திகள் அற்ற ஜடப் பொருளான அந்த தூபி உணர்வுகளுடன் இனத்தை எப்படிப் பாசப் பிடிப்பால் கட்டிப் போட முடிந்தது என்பதை கற்பனை செய்யும் போது உடல் புல்லரித்துப் போகின்றது. வழக்கமாக இப்படி சம்பவங்கள் நடக்கிற போது பாதிக்கப்பட்ட இனம் மட்டும்தான் வீதிக்கு வந்து போராடுவது வழக்கம். ஆனால் இந்த முறை அது இனம், மதம் என்ற எல்லைகளைக் கடந்து மனித உணர்வுகளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தகர்க்கப்பட்ட போது இதற்கு தமது கண்டனங்களை வெளியிட்ட முஸ்லிம்கள் இந்த முறை தாமும் அதற்கு முன்மொழியப்பட்ட ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பை வழங்கி இருந்தார்கள். தெற்கில் அரசியல் செய்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட தமது பகிரங்க கண்டனங்களை வெளியிட்டனர்.

116425365_mediaitem116425364-2-300x169.j

இதற்கு பிரதான காரணம் தற்போது முஸ்லிம்களின் கொரோனா மரணங்கள் எரிக்கப்படுவதும் அதற்கு எதிராக தமிழ் அரசியல் தலைவர்கள் வழங்குகின்ற ஒத்துழைப்பு என்பதும் தெரிந்ததே. காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால் தெரியும் என்ற நியதி இது. அது எப்படியாக இருந்தாலும் அவர்கள் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது. பேரின அடக்குமுறைகளின் போது சிறுபான்மை இனங்கள் ஐக்கியப்பட வேண்டியதன் அவசியத்தை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தெளிவாக இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினருக்கு உணர்த்தி இருக்கின்றது.

எனவே நாம் வழக்கமாகச் சொல்லி வருவது போல இந்த நாட்டு சிறுபான்மை சமூகங்கள் உரிமைகளை வென்றெடுத்து இந்த நாட்டில் கௌரவமாக வாழ வேண்டுமாக இருந்தால் தமக்குள் புரிந்துணர்வுகளுடன் சில உடன்பாடுகளை பேச்சுவார்த்தைகளின் மூலம் முதலில் இனம் கண்டு அதற்கான ஒரு பொது வேலைத் திட்டத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது எமது கருத்து. அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாதத்துக்காக இதில் பச்சோந்தித்தனமாக நடந்து கொள்ள நிறையவே வாய்ப்புகளும் இருந்தாலும் சிவில் அமைப்புகளும் சமூகத் தலைமைகள் இது விடயத்தில் காத்திரமான பங்களிப்பை செய்ய முடியும் என்பது எமது எதிர்பார்ப்பு. சிறுபான்மை சமூகங்கள் ஒன்றுபட நல்ல களத்தை இனவாதிகள் அமைத்துத் தந்திருக்கின்றார்கள். பாவித்துக் கொள்ளத் தவறினால் இது பாரிய வரலாற்றுத் தவறாக அமையும்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சிவசங்கர் இங்கு வந்து ஈழத் தமிழர்கள் விடயத்தில் இலங்கை அரசு சில நெகிழ்ச்சிப் போக்கை கையாள வேண்டும் என்று சொல்லிவிட்ட போய் ஓரிரு நாட்களில் இலங்கை அரசு இந்த தூபியைத் தகர்த்தெறிகின்றது என்றால் நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிருங்கள். ஈழத் தமிழர் விவகாரத்தில் எங்களது தீர்மானமும் நடவடிக்கைகளும் இதுதான். அவர்களுக்கு நாம் எதையும் கொடுக்கப் போவதில்லை என்று இந்தியாவின் கன்னத்தில் அறைந்தாற் போல் ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது.

பக்கத்தில் இருக்கின்ற மிகப்பலமான இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் சீனாவின் துணையுடன் இலங்கை பயணிக்க முடிவு செய்து விட்டது என்பது மிகத்தெளிவு. எம்மை சர்வதேசத்தாலும் இந்தியாவாலும் நெருங்க முடியாது என்ற செய்தியை இந்தியாவுக்கு கொடுப்பதற்காக இந்த தூபி தகர்ப்பு விவகாரம் இருக்கலாம். மேலும் கொழும்புத் துறைமுக கிழக்கு இறங்குதுறையை இந்தியா பெற்றுக் கொள்ள எடுத்த முயற்சிகளுக்கு தொழிற்சங்கங்களும் அரசை பதவிக்கு அமர்த்திய கடும்போக்கு பௌத்த குழுக்களும் கடுமையாக எதிர்ப்பதால் இந்தியாவுக்கு அதனை வழங்குவதில் அரசு பின்னடிக்கின்றது என்று இந்தியா எண்ணுகின்றது. சீனாவுடன் ஒரு சமநிலைக்கு இந்தியா அதனை எதிர்பார்க்கின்றது.

இதற்கிடையில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு இறங்கு துறையை அபிவிருத்தி செய்ய இந்தியாவுக்கு கொடுக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி ஜீ.ஆர். உறுதிபடக் கூறி இருக்கின்றார். இப்படி அவர் பேசினாலும் ஒப்பந்தப்படி இலங்கைக்கு 51. இந்தியாவுக்கு 49. விகிதத்தில் இது பகிரப்பட இருக்கின்றது என்பதே யதார்த்தம். உள்நாட்டில் இருக்கின்ற எதிர்ப்பின் காரணமாகத்தான் இந்தியாவுக்கு விற்கவோ  அல்லது குத்தகைக்குக் கொடுக்கவோ மாட்டோம் என்று ஊடகங்களுக்கு கதை விடுகின்றார்கள் அரசியல் தலைவர்கள்.

mullivaikal-jaffna-uni-300x200.jpg

எனவே துறைமுக விடயத்தில் இந்தியாவை இலங்கை முற்று  முழுதாக நிராகரிக்கின்றது என்று நாம் இதனை எடுத்துக் கொள்ளவும் முடியாது. ஜனாதிபதியைப் போன்று பிரதமரும் இதற்குச் சமாந்திரமாக ஏற்கெனவே கருத்துச் சொல்லி இருந்தார். ஆனால் துறைமுக அமைச்சர் ரோஹித்த கொடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார். உண்டு- இல்லை என்ற விளையாட்டாக இது இருக்கின்றது. எனவே ஒரு காலத்தில் கருபியன் கடலில் கியூபா-அமெரிக்க இடையே நடந்த முறுகலைப் போல்தான் இப்போது இந்திய-இலங்கை விவகாரம். என்னதான் இலங்கை சீனாவுடன் உறவாடினாலும் இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இலங்கையால் வாழமுடியாது.

தனக்கு கன்னத்தில்  அறைந்தால் போல் இலங்கை தொடர்ந்தும் நடந்து கொள்வது இந்தியா அதனைப் பெரிய தலைகுனிவாகப் பார்க்கின்றது. நமக்கு இந்தியாவில் இருந்து வருகின்ற செய்திகளின்படி கச்சதீவை இந்தியா மீளப் பெற்றுக் கொள்வதற்கான அதிரடி வியூகங்களில் இறங்கி இலங்கைக்கு ஒரு கடும் எச்சிரிக்கையை மோடி கொடுப்பதற்கும் வாய்ப்புக்கள் உருவாகி இருக்கின்றது. துறைமுக விடயத்தில் இலங்கை மென்போக்குடன் நடந்து கொண்டால் கச்சதீவு விவகாரத்தில் இந்தியா  மௌனிக்கவும் இடமிருக்கின்றது.

இந்திரா-ஸ்ரீமா நட்புறவால் 286 ஏக்கர்கள் விஸ்தீரமான கச்சதீவு நிலப் பரப்பை 1974ல் இந்தியா இலங்கைக்குக் கையளித்தது. 1976ல் அதில் மேலும் சில  திருத்தங்களை இலங்கை தனக்குச் சாதகமாக செய்து கொண்டது. தமிழ் நாடு ரமேஷ்வரத்துக்கு அருகில் உள்ள இந்த நிலப்பரப்பு ராமநாதபுரம் ஜில்லாவுக்கு-மாவட்டத்துக்குச் சொந்தமானது. இப்படி ஒரு பிரதேசத்தை இன்னும் ஒரு நாட்டுக்குக் கையளிப்பதாக இருந்தால் அது லோக்சபாவில்-இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். நாம் அறிந்த வரை இன்னும் அப்படியான ஒரு அனுமதியை லோக்சபா இதற்கு வழங்கவில்லை என்று நினைக்கின்றோம்.

எனவே இதனை இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து இலங்கையை அச்சுறுத்தவோ அல்லது வேறு ஏதும் வழிகளில் தலைவலி கொடுக்கவோ முடியும்.  மோடி அப்படி செய்வதன் மூலம் ஒரே கல்லில் இரு மாம்பழங்களை வீழ்த்துவது போல இலங்கையையும் அச்சுறுத்தி தமிழகத்தில் நடக்க இருக்கின்ற தேர்தலில் தனது கூட்டணிக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதாகவும் அந்த நடவடிக்கை உதவ முடியும் என மோடி நிருவாகத்தின் கணிப்பாக இருக்க முடியும். மேலும் இது காங்கிரஸ் விட்ட தவறு என்று மேடைகளில் பேசவும் செல்வாக்கு கம்மியாக இருக்கும் தமிழ் நாட்டில் மோடியை ஹீரோவாக்கவும் இது உதவக் கூடும். பெப்ரவரியில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகின்றது.

அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறான தூபிகள் எங்கிருந்தாலும் தேடி அழிக்கப்பட வேண்டும் என்று சொல்கின்றார். உதய கம்மன் பில இது முற்றிலும் துணைவேந்தர் சற்குணராசா பார்த்த வேலை என்று சொல்கின்றார். இப்போது தகர்த்தவரும் திருப்பி அமைப்பவரும்  அவரே என்று பேசுகின்றார். கல்வி அமைச்சர் ஜீ.எல். துணை வேந்தர் நடவடிக்கை நியாயமானது என்கின்றார். நாம் அறிந்த வரை இதுவரை பிரதமரோ ஜனாதிபதியோ இது பற்றி எந்தக் கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.தாங்கள் இது விடயத்தில் கருத்துச் சொன்னால் அது மேலும் சிக்கலை  ஏற்படுத்திவிடும் என்று அவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். பல்கலைக்கழக ஆணைக்குழு இது யாழ். பல்கலைக்கழக முதல்வர் பார்த்த வேலை. அதற்கும் எமக்கும் தொடர்பு கிடையாது என கை விரிக்கின்றது. இது பல இன மாணவர்கள் கல்வி பயில்கின்ற இடம். அந்த வகையில் துணைவேந்தர் சற்குணராசா சரியான முடிவையே எடுத்திருக்கின்றார் என்று பந்தை அவர் பக்கம்  எறிந்திருக்கின்றது.

ஆனால் தனக்குள்ள அழுத்தம் காரணமாகத்தான் இதனைத் தான் செய்ததாகவும் ஒரு தமிழன் என்ற வகையில் இது தனக்கும் வலியையும் நோவினையும் கொடுக்கின்றது என்று பகிரங்கமாகக் கூறினார். இப்போது தன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு அடுத்தவர்கள் தப்பித்துக் கொண்டுள்ளனர். தேவைப்பட்டால் தான் அனைத்தையும் பகிரங்கப்படுத்துவேன். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருக்கின்றது என்று சொல்லி அவரே 11ம் திகதி திங்கள் காலையில் மீண்டும் நினைவுத் தூபியை அமைக்க அடிக்கல் நாட்டி இருக்கின்றார். எனவே ஒரு கௌரவமான துணைவேந்தரை அரசு ஜோக்கராக்கி விட்டது.

மேலும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் இருந்த மாணவர்களுக்கும் அவர் கையாலே பானமும்  கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் துணைவேந்தர் சற்குணராசா. அவர் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார் என்பது அவருடைய பேச்சுக்கள் மூலம் உணரமுடிகிறது. ஆனால் பிரச்சினை இத்துடன் முடிந்து விட்டது என்று நாம் கருதவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் இங்கு வந்து அரச மற்றும் தமிழ் தலைவர்களை சந்தித்த போது நமக்குத் திருப்தி என்று சுமந்திரன் பேசி இருந்தார். சில மணி நேரங்களில் என்ன நடந்தது. எனவே இந்த நினைவுத் தூபி விவகாரம் முற்றுப் பெற்றுவிட்டது என்று எவரும் கருதக்கூடாது. அது பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக வரும் என்றுதான் நாம் நினைக்கின்றோம்.

சீனா விவகாரத்தில் இந்தியா மிகுந்த அச்சத்தில் இருக்கின்றது. அதனால் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அது எந்தளவுக்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்திய ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக இதே நிலைப்பாட்டில்தான் கடந்த காலங்களில் இருந்த வந்திருக்கின்றார்கள். ஆனால் வடக்கிலும் தெற்கிலும் உள்ள இந்திய பொது மக்கள் ஈழத் தமிழர்கள் நலனுக்கு இந்தியா எதையாவது செய்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பது எமது அவதானம்.

வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அரசு தலைவர்களைச் சந்தித்து என்ன சொன்னாலும் இலங்கை அரசு அதனை காதில் போட்டுக் கொள்ளவில்லை என்பதற்கு எம்மிடம் வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. அவர் வந்து போன அடுத்த நிமிடமே ஜனாதிபதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சரத் வீரசேகர ‘எமக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. இலங்கை விவகாரத்தில் எல்லா விடயங்களையும் நாமே தீர்மானிப்போம்’ என்று அடித்துப் கூறி இருந்தார். இந்தியா விவகாரத்தில் ராஜபக்ஸாக்களுக்கிடையில் கடுமையான முறண்பாடுகள் தற்போது மேலோங்கி இருக்கின்றது என்பதும் இது பற்றி ஜனாதிபதி ஜீ.ஆருடன் சகோதரர்கள் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி இருக்கின்றார்கள் என்றும் தெரிய வருகின்றது. ஆனால் ஜனாதிபதி தனது பக்கத்தில் உள்ள நெருக்கடிகளை அவர்களிடம் சொல்லி ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாதவராக இருக்கின்றார் என்றுதான் அந்தரங்க வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

சுருக்கமாகச் சொன்னால் ஜனாதிபதி ஜீ.ஆர். கடும்போக்கு பௌத்த அரசாங்கம் ஒன்றை நாட்டில் முன்னெடுக்க விரும்புகின்றார். அதே நேரம் பிரதமர் எம்.ஆர். மற்றும் பசில் பௌத்த ஆதரவுடனான மிதவாத அரசங்கம் ஒன்றை முன்னெடுக்க விரும்புகின்றார்கள். எப்படியும் இந்த இரு தரப்பும் சீனாவை நம்பியே அரசியலை முன்னெடுப்பதில் ஆர்வமாக இருக்கின்றார்கள் என்பது மட்டும் தெளிவு.

 

https://thinakkural.lk/article/106251

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.