Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்மக்களை வெளியேற்றியமை சர்வதேச உள்ளூர் சட்டங்களை அப்பட்டமாக மீறிய செயலாகும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களை வெளியேற்றியமை சர்வதேச உள்ளூர் சட்டங்களை அப்பட்டமாக மீறிய செயலாகும்

-கலாநிதி குமார்ரூபசிங்க-

கொழும்பில் தமிழர் வாழும் பகுதிகள் பலவற்றை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுற்றிவளைத்திருந்த பொலிஸார், 376 பேரை பலவந்தமாக கைது செய்து அவர்களது பூர்வீக இடமான வடக்கு, கிழக்கிற்கு அனுப்பியிருந்தனர். எவ்வாறெனினும், அரசாங்கத்திற்கு இந்த நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்தும் சர்வதேச சமூகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்தும் மீண்டும் அந்த மக்களை கொழும்பிற்கு கொண்டு வந்து விடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

உண்மையில், இந்த மக்களை பலவந்தமாக அனுப்புவதற்கு பொலிஸார் நடந்து கொண்ட விதம் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகவே இருந்தது. செய்தி அறிக்கையின் பிரகாரம், வெள்ளவத்தை ஸ்ரேசன் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து மட்டும், 47 பேரை ஆண், பெண் என்று வயது வேறுபாடு எதுவும் இன்றி பொலிஸார் பலவந்தமாக பஸ்களில் ஏற்றிச் சென்றனர். இதே பகுதியில் உள்ள மற்றொரு விடுதியில் இருந்து 35 பேர் கைது செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர். மற்றும் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட மக்கள், அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களில் ஏற்றப்பட்டு வவுனியா, திருகோணமலை மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிகழ்விற்கு சரியாக ஒரு கிழமை முன்னதாகத்தான், தமிழர்களை இவ்வாறு பலவந்தமாக அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின், ஷரத்து 13 இன் கீழ், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது பொதுமக்களின் நடமாட்டத்திற்கான உரிமையை முற்றிலுமாக மறுக்கிறது. ஒவ்வொரு நாட்டினதும் எல்லைகளுக்குள் எந்த ஒரு இடத்தில் வசிப்பதற்கும் நடமாடுவதற்குமான உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் ஷரத்து 13 கூறுகிறது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம் ஒரு நாட்டின் பிரஜை தனது நாட்டின் எந்த ஒரு பகுதியில் நடமாடுவதற்கும் வசிப்பவதற்குமான சட்டபூர்வ உரிமையைக் கொண்டிருக்கிறார். இந்த உடன்படிக்கையின், 12 ஆவது ஷரத்தின் 1 ஆவது பந்தியின் பிரகாரம், ஒரு நாட்டில் அந்நாட்டுப் பிரஜைகள் எந்த ஒரு இடத்தில் இருந்து எந்த ஒரு இடத்திற்கு செல்வதற்கோ, தாம் விரும்பிய இடத்தில் தமது இருப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கோ உரித்துடையவர். அத்துடன், எந்த விதமான பலவந்தமான இடப்பெயர்வில் இருந்தும் அவர் பாதுகாப்பளிக்கப்படுகிறார்.

நாட்டினது வரையறுக்கப்பட்ட எந்த ஒரு பகுதிக்குள்ளும் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் அவர் உரிமை உள்ளவர். அத்துடன், ஷரத்து 12 இன் பிரகாரம் தனது பிரஜைகளுக்கான இந்த உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதும், எந்த ஒரு காரணிகளினாலும் இந்த உரிமைகள் பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பளிப்பதும் அரசாங்கத்தினது கடமையாகும்.

ஆனால், இந்த சர்வதேச உடன்படிக்கையை அப்பட்டமாக மீறுகின்றவகையில், அரசாங்கம் கொழும்பில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றிய செயல் அமைந்திருந்தது. குறிப்பாக, இந்த உரிமைகளை பெண்களுக்கு உறுதிப்படுத்திக் கொள்வதற்கான அரசாங்கத்தின் கடமையை இந்த ஷரத்து வலியுறுத்துகிறது. கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்ட 376 பேரில் ஏராளமான பெண்களும் சிறுவர்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, அப்பட்டமான முறையில், சர்வதேச விதியையும், இலங்கையின் அரசியலமைப்பையும் மீறுகின்றவகையில் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அமைந்தமையே, உடனடியான நீதிமன்ற தடை உத்தரவிற்கும், கண்டன அறிக்கைக்கும் வழிவகுத்தது.

தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றிய இந்தச் செயலாவது, இதற்கு முன்னர் இடம் பெற்ற இரண்டு சம்பவங்களின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும். முதலாவது, சரியாக இச்சம்பவம் இடம் பெறுவதற்கு ஒரு கிழமைக்கு முன்னராகத்தான், பொலிஸார் விடுதி உரிமையாளர்களை அழைத்து, விடுதிகளில் தங்கியிருக்கும் 5,000 தமிழர்களை வெளியேற்றுவது குறித்து அறிவுறுத்தியிருந்தார்கள். குறிப்பாக, புறக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள 68 விடுதிகளில் உள்ள தமிழர்களை வெளியேற்றுவது குறித்தே பொலிஸார் பிரஸ்தாபித்திருந்தனர். இரண்டாவது சம்பவமாக, சில அரசியற் கட்சிகளினால் உந்தப்பட்ட கடும் போக்காளர்கள், இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது எனவும், தமிழர்கள் தமது உரிமைகளுக்காக தமிழ் நாட்டிற்கு சென்று போராட வேண்டும் என்றும் கூறியிருந்தனர். குறிப்பாக, ஜாதிக ஹெல உறுமயவானது, இலங்கையை ஒரு பௌத்த, சிங்கள நாடு என்று குறிப்பிட்டிருந்தமையானது, 1983 இன வன்முறைகளுக்கு முன்னர் சிறுபான்மையினருக்கெதிராக விடுக்கப்பட்ட அறிக்கைகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

எவ்வாறெனினும், இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவெனில், கொழும்பில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் திட்டம் தம்மிடம் இல்லை என்று பொலிஸார் பல்வேறு மட்டங்களில் தெளிவான முறையில் உறுதியளித்த பின்னர், அதே காரியத்தை செய்திருக்கின்றனர். விடுதிகளில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் எந்த திட்டமும் தம்மிடம் இல்லை என்று கொழும்பு பிரதேச பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் அபயவர்தன கூறியிருந்தார். வடக்கு - கிழக்கு மக்கள் கொழும்பிற்கு வந்து தமது நியாயபூர்வ செயற்பாடுகளை மேற்கொள்வதை பாதிக்கின்ற வகையிலான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்த பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா, எந்த ஒரு பொதுமகனினதும் வசிப்பதற்கான உரிமை மற்றும் இதர உரிமைகளை பூரணமாக பாதுகாப்பதில் பொலிஸார் பற்றுறுதி கொண்டிருப்பதாக கூறியிருந்தார். தவிர, அரசாங்க தகவல் திணைக்களமும் தமிழர்களை கொழும்பில் இருந்து வெளியேற்றுவதற்கான திட்டம் குறித்து வெளிவந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தது.

எது நடைபெறாது என்று அரச உயர் மட்டம் அழுத்தம் திருத்தமாக கூறியதோ, அது நடைபெற்றிருக்கிறது. இதன் மூலம் அரசாங்கத்தின் நம்பகத்தன்மை உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்க அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் முரணாண தகவல்களை அளித்துவருவதும் முரணாக செயற்பட்டு வருவதும் உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள், இலங்கையை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தும் நிலைக்கு இட்டுச் சென்று விட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, அண்மையில் கொழும்பில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் இதற்கான பிரதான காரணிகளில் ஒன்றாக இருக்கிறது.

பொதுமக்களை தமது வசிப்பிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றுகின்ற செயல், இலங்கையில் ஒன்றும் புதிய விடயம் அல்ல. 1998 ஆம் ஆண்டிலும், கொட்டாஞ்சேனை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் இருந்த விடுதிகளில் இருந்து பொலிஸார் தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றியிருந்தனர். ஆனால், அப்போது அவர்கள் பலவந்தமாக வெளியிடங்களுக்கு அனுப்பப்படவில்லை. 1990 இல், வடக்கில் இருந்து சுமார் 1 இலட்சம் முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றினர். மீண்டும், 1995 சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின்போது, குடாநாட்டில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதற்கு புலிகள் நிர்ப்பந்தித்திருந்தனர். கிழக்கு மாகாணத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து இராணுவத்தினர் தமிழ், முஸ்லிம் மக்களை பலவந்தமாக வெளியேற்றிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. திருகோணமலையில் மூதூர், இத்திக்குளம் மற்றும் மட்டக்களப்பின் உடும்பன்குளம் ஆகியவை இதற்கான உதாரணங்களாகும். ஆனால், நன்கு திட்டமிட்ட முறையில், கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் பலவந்தமான முறையில் வடக்கு, கிழக்கிற்கு அனுப்பப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். இந்த நிகழ்வு மீண்டும் ஒரு `ஜூலை 83' கலவர அச்சத்தை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.

கடந்த மூன்று மாத காலமாகவே, நடமாட்ட சுதந்திரம், காணாமல் போதல் மற்றும் ஆட்கடத்தல்கள், கொலைகள் சம்பந்தமான கவலைகள் வெளியிடப்பட்டு வந்தன. குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் நடமாட்ட சுதந்திரத்தை பொறுத்தவரையில் தென்னிலங்கைக்கு தமது அலுவல்களின் நிமித்தம் பயணம் செய்ய விரும்புவர்களின் அனுமதி பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.