Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர் பிரச்சினைப் பேசித் தீர்க்க வேண்டியது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர் பிரச்சினைப் பேசித் தீர்க்க வேண்டியது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

 
1-167.jpg
 16 Views

தொடரும் மீனவர் பிரச்சினை, பேசித் தீர்க்க வேண்டுமே தவிர மாற்று நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 18ம் திகதி இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட நான்கு மீனவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் சார்பான ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த மீனவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியா எமது அருகில் இருக்கக் கூடிய நாடு. பாக்கு நீரிணையில் மன்னார் வளைகுடாவில், வட பகுதியில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் தமிழ் மக்கள்தான் மீன் பிடிக்கிறார்கள்.

ஆகவே, எமது கடற் பரப்புக்குள் அவர்கள் வருவதும் அவர்களது பரப்புக்குள் நாங்கள் போவதும் காலாதி காலமாக நடைபெற்று வந்துள்ளது.

ஆனால், தற்போது இந்திய மீனவர்களின் வள்ளம் மூழ்கடிக்கப்பட்டதும் அதில் நான்கு மீனவர்கள் கொல்லப்பட்டதும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல. இலங்கைக் கடற்படையினுடைய கப்பலில் அடிபட்டுத்தான் மீனவர்களின் படகு மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நடவடிக்கை ஏற்புடையது அல்ல. நான்கு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் அல்லது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். எனவே, நிச்சயமாக இது அனுதாபத்துடன் பார்க்கப்பட வேண்டிய விடயம்.

எமது கடந்த காலப் போராட்டத்தில் இந்தியத் தமிழர்களுடைய அதிலும் குறிப்பாக, மீனவர்களுடைய பங்கு என்பது அளப்பரியது. அதனை நாம் மறுப்பதற்கில்லை.

மீனவர்கள் அத்துமீறும் போது கைதுகள் நடந்திருக்கின்றன. அவ்வாறே தற்போதும் நடந்திருக்கலாம். ஆனால், அதற்கு மேலதிகமாகச் சென்று நான்கு மீனவர்கள் நீரில் மூழ்கி இறந்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

இந்நிலையில், இலங்கை அரசாங்கம் இதுபோன்ற பிரச்சினைகள் இனிமேல் நடைபெறாமலிருக்க குறைந்தபட்சம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை, தாய்லாந்து, சீனா, தாய்வான் போன்ற பல நாடுகள் இலங்கையின் கடல் வளத்தைச் சூறையாடுகின்றன. அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்திருக்கின்றது.

ஆகவே, அவ்வாறானவர்கள் எமது கடல்வளத்தைச் சூறையாடுகின்றார்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது கொழும்பு அரசாங்கமே. ஆனால் அவை தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுத்ததில்லை.

எனினும், வட கடலில் பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா கடலில் இந்திய தமிழ் மீனவர்களும் வடக்கு மாகாண தமிழ் மீனவர்களும் தொடர்ச்சியாக மீன் பிடிப்பதென்பது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

அவை, சுமூகமாகப் பேசித் தீர்க்க வேண்டியதாகும். இதனை இரு தரப்பு மீனவர்கள், இரு தரப்பு அரசாங்கங்கள் இணைந்து பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்க வேண்டும். இதனைவிடுத்து வேறு நடவடிக்கைகளை எடுப்பதென்து தவறானது.

இதேவேளை, எமது அனைத்து தமிழ் மக்களின் அனுதாபங்களும் இறந்த தமிழக மீனவர்கள் மேல் நிச்சயமாக உண்டு” என்றார்.

 

https://www.ilakku.org/?p=40244

 

இதேவேளை, தாய்லாந்து, சீனா, தாய்வான் போன்ற பல நாடுகள் இலங்கையின் கடல் வளத்தைச் சூறையாடுகின்றன. அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்திருக்கின்றது.

 

 

எமது கடந்த காலப் போராட்டத்தில் இந்தியத் தமிழர்களுடைய அதிலும் குறிப்பாக, மீனவர்களுடைய பங்கு என்பது அளப்பரியது. அதனை நாம் மறுப்பதற்கில்லை.

மீனவர்கள் அத்துமீறும் போது கைதுகள் நடந்திருக்கின்றன. அவ்வாறே தற்போதும் நடந்திருக்கலாம். ஆனால், அதற்கு மேலதிகமாகச் சென்று நான்கு மீனவர்கள் நீரில் மூழ்கி இறந்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

Edited by உடையார்

On 25/1/2021 at 07:11, உடையார் said:

மீனவர் பிரச்சினைப் பேசித் தீர்க்க வேண்டியது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

 
1-167.jpg
 16 Views

தொடரும் மீனவர் பிரச்சினை, பேசித் தீர்க்க வேண்டுமே தவிர மாற்று நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

 

அது எங்களுக்கும் தெரியும். டக்ளஸ் ஐயா பேசிக்கொண்டிருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.