Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேசத்தின் கடும் எதிர்ப்பை தேடிச் சம்பாதிக்கும் அரசுத் தரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-06-18

சர்வதேசத்தின் கடும் எதிர்ப்பை தேடிச் சம்பாதிக்கும் அரசுத் தரப்பு

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டிய விட யங்களில் சர்வதேச சமூகத்தைக் கையாளும் இராஜதந்திரம் பற்றி அறிந்து கொள்ளாமல் கற்றுக்குட்டித்தனத்துடன் நடந்து கொண்டதன் விளைவாக, விபரீதத்தை வாங்கிக் கட்டிக் கொள்ளும் இக்கட்டுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது இந்நாட்டின் அரசாங்கம்.

தான் இறைமையுள்ள தனி அரசு என்ற தான்தோன்றித்தனத்துடன் கொழும்பு செயற்பட்டதன் பெறுபேறு, பெரும் சர்வதேச அழுத்தமாக அதற்கு எதிராகத் திரும்பியிருக்கின் றது. ஒரே சமயத்தில் மேற்குலகின் பல மட்ட எதிர்ப்பையும், கடும் அழுத்தத்தையும், நெருக்குவாரத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்கு மஹிந்த ராஜபக்ஷவின் அரசு தள் ளப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்தவும் அவரால் ஆட்சி அதிகாரத்தில் நிறுத்தப்பட்ட ஏனையோரும், உலக விவகாரங்களில் சர்வ தேசப் பங்களிப்பு, ஈடுபாடு போன்றவற்றைக் கவனத்தில் எடுக்காமல் தான்தோன்றித்தனமாக குதர்க்கத்தனமாக செயற்படுவதால் சிக்கலான விளைவுகளை எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பது ஆய்வாளர்களும் இராஜதந்திரி களும் எதிர்பார்த்த விடயம்தான். ஆனால் ஆட்சி அதிகாரத் துக்கு வந்து இவ்வளவு குறுகிய காலத்துக்குள் சுமார் ஒன் றரை வருட அவகாசத்துக்குள் இப்படி நிலைமையை அவர் கள் போட்டுடைத்து குட்டிச் சுவராக்குவார்கள் என்பது பல ரும் எதிர்பார்க்காத விடயம்.

அதுவும், விடுதலைப் புலிகள் தரப்பில் இவ்வளவு கால மும் லண்டனில் தங்கியிருந்தபடி சர்வதேசத்தைக் கை யாண்டு வந்த புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் கடந்த டிசம்பரில் மறைந்தபோது, சர்வதேச விவகாரங்களில் புலிகளின் போக்கு இறங்குமுகமாகவும், இலங்கை அரசின் போக்கு ஏறுமுகமாகவும் அமையும் என்றே பலரும் எதிர்பார்த் தனர்.

ஆனால் பலரின் கருத்தையும் பொய்யாக்கி, தவிடு பொடி யாக்கும் விதத்தில் யதார்த்தத்தில் அதற்கும் தலைகீழான மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது.

மதியுரைஞர் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பின்னரும் தமிழர் தரப்பை விடுதலைப் புலிகள் தரப்பை முன்னை யதை விடக் கூடிய பரிவுடன் சர்வதேசம் நோக்கும் சார்பு நிலை புதிதாகக் கனிந்து வருவதை உணரமுடிகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு அரசு நடந்து கொண்ட பொறுப்பற்ற போக்கும் இந்தத் தமிழர் சார்பு நிலையை நோக்கி சர்வதேசப் பார்வை திரும்புவதற்கு ஓர் அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது கவனிக்கத்தக் கது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவி அடுத்த மாதம் ஜேர்மனியிடம் இருந்து மீண்டும் பிரிட்டனிடம் கைமாற இருக்கையில் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப் பிய ஒன்றியம் உட்பட்ட மேற்குலக நாடுகளைத் தூக்கி எறிந்து, அவற்றின் மீது குற்றம் சுமத்தி, கருத்து வெளியிட்டு மேற்குலகை இலங்கைக்கு எதிர்த்தரப்பில் கொண்டுபோய் நிறுத்தியதன் மூலம் இராஜதந்திர ரீதியில் கொழும்பு அரசைப் பெரும் சிக்கலுக்குள் மாட்டி விட்டிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சுச் செயலாள ருமான கோத்தபாய ராஜபக்ஷ.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் சர்வதேச கருத்து நிலைப்பாடு கொழும்புக்கு எதிராக வேகமாக மாறி வருகின்றது.

மோசமான மனித உரிமை மீறல்கள் நாட்டில் தாராளமாக இடம்பெறுவதற்கு இடமளித்து, அனுமதித்து, அத்தகைய மீறல்களில் அரசுப் படைகள் ஈடுபடுவதற்கு உதவும் விதத் தில் படைகளுக்கு விசேட சட்ட விலக்களிப்பும் வழங்கி, பொறுப்பற்றுச் செயற்படும் கொழும்பு அரசுக்கு எதிராக ஐ. நா. சபையில் விசேட தீர்மானம் கொண்டு வந்தால் என்ன, என்று ஆராயும் நிலைக்கு சர்வதேச சமூகம் தள்ளப்பட்டு விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது விடயத்தில் இலங்கை அரசின் திமிர்ப்போக்குக் குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கொதித்துப் போயிருக்கின்றன.

ஐ. நா. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஒன்றை இலங்கையில் நிரந்தரமாக நிறுவி, இலங்கை நிலைவரத்தை நேரடியாகக் கவனத்தில் எடுக்க அனுமதிக்கும்படி ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான லூஸி ஆர்பர் அம்மையார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜெனிவாவில் சந்தித்து நேரடியாகவே கேட்டிருக்கின்றார்.

ஏற்கனவே, முக்கிய சில மனித உரிமை மீறல் சம்பவங் கள் சம்பந்தமாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடு உருப்படியானது அல்ல என்று அந்த ஆணைக் குழுவின் விசாரணைகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட சர்வதேசப் பிரமுகர்களின் குழு வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக அறிவித்து விட்டது.

இதேசமயம்

யுத்தத் தீவிரப் போக்கை முற்றாக நிறுத்தி, மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் நேரடி யாகக் களத்தில் ஆய்வு செய்வதற்கு அனுமதிக்க இலங்கை அரசு மறுக்குமானால், அப்போக்குக்கு எதிராகத் தீவிர கடும் நடவடிக்கைகளை எடுப்பது என இலங்கைக்கு உதவும் நாடு களின் இணைத்தலைமைகள் தீர்மானித்துள்ளன என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அடுத்த வார முற்பகுதியில் ஒஸ்லோவில் நடைபெற விருக்கும் இணைத் தலைமைகளின் கூட்டத்தின் முடிவில் கொழும்புக்கு சாட்டை அடி கொடுக்கும் அறிக்கை வெளி வரக்கூடிய ஏது நிலைகள் தென்படுகின்றன எனவும் கூறப் படுகின்றது.

இலங்கையில், ஒருபுறம், மனித உரிமைகள் விடயம், இனப்பிரச்சினைக்குத் தீர்வு போன்ற அம்சங்களில் சர்வ தேசம் எதிர்பார்க்கும் தரத்தை நிலைநிறுத்தாமல் மோசமாகச் செயற்படும் அரச நிர்வாகம்

மறுபுறம், அந்த விடயங்கள் தொடர்பாக சர்வதேசத்தைக் கையாளும் இராஜதந்திரத்தில் பொறுப்பற்று சிறுபிள்ளைத் தனமாக செயற்படும் அதிகார வர்க்கம்

இவை இரண்டும் சேர்ந்து கொழும்பை, சர்வதேச சமூகத்திற்கு எதிர்த்திசையில் எதிரியாக கொண்டுபோய் நிறுத்தியிருக்கின்றன.

இதனால் பலன் பயன் தமிழர் தரப்புக்கு. குறிப்பாகப் புலிகளுக்கு.

அத்தகைய நிலைமையைத் தாமாகவே ஏற்படுத்தித் தரும் கொழும்பு அரசுக்குத் தமிழர்கள் நன்றி கூறத்தான் வேண்டும்.

நன்றி - உதயன்

தமிழீழ அங்கீகாரத்துக்கு பாடுபடுகீனம் நன்றி சொல்லுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.