Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்துப் பார்ப்பது தவறு!

Featured Replies

பிரித்துப் பார்ப்பது தவறு!

கொழும்பிலிருந்து தமிழரை வெளியேற்றியமை பெரும் வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளான விடயமாகியுள்ளது. ஒருபுறத்தில் வெளியேற்றுதலுக்கான கண்டனமும் மறுபுறத்தில் வெளியேற்றுதலுக்கான மன்னிப்புக் கோருதலும் நிகழ்ந்தன.

தமிழரை வெளியேற்றியமை குறித்து எழுந்த பலமான கண்டனங்களைத் தொடர்ந்து பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா மன்னிப்புக் கோரிய அதேவேளை கடும் நிபந்தனைகளுடன் வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கொழும்புக்குள் கொண்டு சென்றமையும் ஏற்கனவே அதிகம் பேசப்பட்ட விடயங்கள்தான். ஆயினும் இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முற்றுப்பெற்றுவிட்டதாக இல்லை.

ஒருபுறத்தில் ஆளும் கட்சியில் ஒருதரப்பினர் அத்தகையதொரு மன்னிப்புக் கோரவேண்டியதில்லை. அமெரிக்காவோ அன்றி மேற்கு நாடுகளோ செய்யாத எதையும் நாம் செய்துவிடவில்லை எனத் தெரிவிக்கும் அதேவேளை மற்றொரு தரப்பினரோ மன்னிப்புக் கோரினால் மட்டும் போதாது இது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகின்றனர். இதன் உச்சக் கட்டமாக கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

பொதுவில் இவ்விடயம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை மையமாகக் கொண்டே எழுந்துள்ளது. சிலர் அவரை ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் தமது அபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளனர். பலர் அனைத்துச் சம்பவங்களுக்கும் அவரே பொறுப்பு எனச் சாடுகின்றனர்.

ஆனால் இக் கண்டனங்கள் அபிப்பிராயங்கள் குறித்து கோத்தபாய ராஜபக்ச அலட்டிக்கொண்டதாக இல்லை. மாறாக தமிழர்களை வெளியேற்றியது நியாயமானதே. மேற்கு நாடுகள் ஐரோப்பா நாடுகள் பிரித்தானிய போன்றவை தம்மால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யட்டுமெனச் சவால் விட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் கருத்தானது அவரது சொந்தக் கருத்தாகவோ அன்றி தனிப்பட்ட கருத்தாகவே புறம்தள்ளி வைக்கத்தக்கதல்ல. இது சிறிலங்கா அரசின் சக்திமிக்க மனிதர் ஒருவரின் கருத்தாகும். இது அரசின் தீர்மானத்தின் அடிப்படை யிலானது என்று கூட கூறினால் கூட மிகையாகமாட்டாது.

ஆகையினால் இதன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று இல்லையென்பதை தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளது எனலாம். இது மட்டுமன்றி யார் எதிர்த்தாலும் தமது தீர்மானத்தில் தாம் உறுதியாவே உள்ளோம் என்பதையும் உறுதி செய்துள்ளது. மேற்கு நாடுகள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பது கோத்தபாயவின் அபிப்பிராயம் மட்டுமல்ல. சிறிலங்கா அரசினுடையதுமாகும்.

இதனால் தற்பொழுது தமிழர்களை வெளியேற்றியது தொடர்பான விடயத்தில் கோத்தபாயவின் மேற்குலகம் குறித்த கருத்துக்கள் முக்கியத்துவம் கொண்டதாகவுள்ளன. இதன் காரணமாக மேற்குலகம் குறித்த மகிந்த அரசின் நிலைப்பாடு என்ன? கோத்தபாய ராஜபக்ச இத்தகைய கருத்துக்களை வெளியிட அவருக்கு அதிகாரமளித்தது யார்? என்பவையே இம் முக்கியம் பெறுகின்றன.

இதேவேளை கோத்தபாய மேற்குலகத்தையும் ஐ.நா. சபையையும் ஒன்று சேர சாடியுள்ளமையானது இதுவரையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கையில் இருந்து சற்று வேறுபட்டதாகும். சுருக்கமாகக் கூறின் திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவே கருத இடமுண்டு.

அடுத்தது ஒரு அரசாங்க அதிகாரி என்ற நிலையில் உள்ள கோத்தபாய ராஜபக்ச இத்தகையதொரு விடயத்தைப் பேசமுடியுமா என்பது. ஏனெனில் இத்தகைய பேச்சு அரசாங்கத்தின் தீர்மானத்தின் பாற்பட்டதாகவே இருக்க முடியுமே ஒழிய அதிகாரிகளின் தீர்மானத்தின் பாற்பட்டதாக இருக்க முடியாது.

ஆனால் கோத்தபாய பேசியது சரியா? கோத்தபாயவிற்கு இது குறித்து பேச அதிகாரம் உண்டா? என்பனவெல்லாம் சனாதிபதி மகிந்த ராஜபக்ச இவ்விடயம் தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாட்டை பொறுத்தே தீர்மானிக்கப்படத் தக்கதாகும்.

ஏனெனில் கோத்தபாய ராஜபக்சவை பதவியில் அமர்த்தியவர் மகிந்த ராஜபக்சவே. அத்தோடு மகிந்தவின் சகோதரன் என்ற ரீதியில் ஒரு சிரேஷ்ட அமைச்சருக்கு மேற்பட்ட அந்தஸ்தில் கோத்தபாய உள்ளார். பாதுகாப்பு என்ற ரீதியில் அவர் பயணிப்பதற்காக வீதித்தடை ஏற்படுத்தப்படுகிறது. இன்று மகிந்த ராஜபக்சவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக செயற்பட்டு வருபவராக இருப்பவரும் கோத்தபாய ராஜபக்சவே.

ஆகையினால் கோத்தபாய ராஜபக்சவின் நடவடிக்கைகள் குறித்து மகிந்த ஆட்சேபமோ அதிருப்தியோ தெரிவிக்காதவரை அது மகிந்த ராஜபக்சவின் தீர்மானமாகவே கொள்ளத்தக்கது. சுருக்கமாகக் கூறின் மகிந்த வேறு கோத்தபாய வேறு எனப் பிரித்துப் பார்ப்பது தவறானதாகும்.

http://www.tamilnaatham.com/

சுருக்கமாகக் கூறின் மகிந்த வேறு கோத்தபாய வேறு எனப் பிரித்துப் பார்ப்பது தவறானதாகும்...

050325230917to1.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.