Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பர் கூட்டம் நாத்திகன், செந்தில்வாசன் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பர் கூட்டம் நாத்திகன், செந்தில்வாசன் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

spacer.png

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகச் சித்தரித்த குற்றச்சாட்டில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த நாத்திகன் மற்றும் செந்தில்வாசன் ஆகியோர் மீது குண்டர் சட்டம்போடப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கில் இருவர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம்ரத்து செய்துள்ளது.

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகச் சித்தரித்த குற்றச்சாட்டில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த நாத்திகன் என்கிற சுரேந்திரன், செந்தில்வாசன், சோமசுந்தரம், குகன் ஆகியோரை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் நாத்திகன் மற்றும் செந்தில்வாசன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுபிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நாத்திகனின் மனைவி கிருத்திகா மற்றும் செந்தில்வாசன் ஆகியோர் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்குகளின் விசாரணையின்போது, கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமையை ஒழிக்கவும் பல்வேறு தகவல்களை வெளியிட்டதற்காக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. ஒரே ஒரு வழக்குப் பதிவு செய்துவிட்டு அதை வைத்து குண்டர் சட்டம் போடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காவல்துறை தரப்பில், ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்ததற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கக் கூடாது என விதிகள் இல்லை என்றும், கறுப்பர் கூட்டத்தினரின் செயல்பாடு குறிப்பிட்ட மதத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி, கடும் எதிர்ப்பைச் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் கைது செய்யும் உத்தரவு பிறப்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள காரணத்தின் அடிப்படையில், இருவர் மீதான குண்டர் சட்டத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

ஒரே வழக்கிற்காக குண்டர் சட்டம் போடப்பட்டதை எதிர்த்து உள்துறைச் செயலாளரிடம் அளித்த மனு மீது உரிய காலத்தில் முடிவு எடுக்கவில்லை என விடுதலை செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/629630-black-meeting-atheist-senthil-vasan-s-thuggery-law-repealed-high-court-order.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பர் கூட்டம் தோழர்கள் கடைசி வரை மன்னிப்புக் கேட்கவில்லை விடுதலை!

கந்த சஷ்டிக் கவசத்தை இழிவு செய்ததாகக் கூறி பாஜகவினர் கொடுத்த அழுத்தத்தின் பேரில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் நிர்வாகத்தினர் மீது  கைது நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. அதில் செந்தில்வாசன், சுரேந்திரன் என்ற இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த குண்டர் சட்டம் செல்லாது என்று  சுரேந்திரன் மனைவி கீர்த்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் மீதான பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின்னர் செந்தில்வாசன், சுரேந்திரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்  பாஜக, ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அச்சுறுத்திய போதும், தமிழக அரசு, போலீஸ் என கடுமையாக நடந்து கொண்ட போது சுரேந்திரனும், செந்தில்வாசனும் கடைசி வரை நீதிமன்றத்தில் எந்த ஒரு இடத்திலும் மன்னிப்புக் கேட்கவில்லை.

கறுப்பர் கூட்டம் தோழர்களுக்கு எதிரான குண்டர் சட்டம் செல்லாததாகி இருப்பதில் நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் — முதலாவது, அவர்கள் நீதிமன்றத்தில் மன்னிப்போ அல்லது வருத்தமோ கூட கேட்கவில்லை என்பது. அடுத்தது அவர்கள் வைத்த வாதம் எந்த வகையிலும் விடுதலை பெறுவதற்காக தமது நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டதாக இல்லை. பேசியவற்றுக்கு பொறுப்பேற்று மக்களின் அறியாமையை அகற்றுதலும், மூடநம்பிக்கை ஒழிப்புமே தமது நோக்கம் என்பதைத் தான் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இந்துத்துவ கும்பல் வழங்க வாய்ப்புள்ள நீதிமன்ற அழுத்தம் பற்றி நாம் அறிய முடியாது என்றாலும் அவர்கள் வழங்கிய புறநிலை அழுத்தங்களை யாரும் மறுக்க முடியாது. இது நேரடி அழுத்தங்களும் வழங்கப்பட்டிருக்கக்கூடும் என்பதற்குரிய சுட்டுதலாக இருக்கிறது. ஆனால் அதையும் மீறி நீதிமன்றத் தீர்ப்பு கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாக வந்திருப்பது ஆச்சரியமானது. அது தமிழகத்தின் அன்றாட அரசியல் விவாதத்தில் நமது பொது அறிவுத்துறையினர் செலுத்தும் செல்வாக்குடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

மனநல மருத்துவர் ஷாலினி மற்றும் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் ஆகியோர் முருகன் பிரச்சினையில் முழு ஈடுபாட்டை காட்டினர். இருவருமே கறுப்பர் கூட்டத்தின் நிலைப்பாட்டை முழுவதுமாக ஏற்றவர்களில்லை. ஆனால் அவர்கள் கருத்துக்கள் இந்த பிரச்சினையை சமநிலை குன்றாமல் ஒருவர் புரிந்து கொள்ள உதவிகரமாக இருப்பவை என்று கூற முடியும். அதே நேரம் அவர்கள் ஏன் ஓரடி தூர நின்றார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். பொதுப் பிரச்சினைகளில் கருத்துத் தெரிவிப்பதில் அறிவுத்துறை நாணயம் உறுதிப்படுவதை மேலும் உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகள் வேண்டும்.

பாசிசத்தை எதிர்த்து நிற்கும் அனுபவங்களை நாம் தொகுத்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

 

https://inioru.com/கறுப்பர்-கூட்டம்-தோழர்கள/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.