Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு – கிழக்கில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் புதிய அமைப்புக்கள் - குற்றம் சுமத்தும் கெஹலிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு – கிழக்கில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் புதிய அமைப்புக்கள் - குற்றம் சுமத்தும் கெஹலிய

Screenshot-2021-02-15-09-41-04-812-org-m 

வடக்கு மற்றும் கிழக்கில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பல்வேறு அமைப்புக்கள் உருவாகியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி மெனிக்ஹின்ன பகுதியில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் நாடு என்ற ரீதியில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். வடக்கு மற்றும் கிழக்கில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும் அமைப்புக்கள் மீண்டும் உருவாகியுள்ளன.

நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் நாட்டின் புலானாய்வு பிரிவு செயலிழந்து காணப்பட்டது. அதற்கு உயிர்த்த ஞாயிறு சிறந்த உதாரணம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலாகும். ஆனால் தற்போதைய ஆட்சியில் நாம் புலனாய்வு துறையை மேன்மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நல்லாட்சி அரசாங்கத்தில் காணப்பட்ட இருண்ட யுகம் எமது ஆட்சியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படுத்தப்பட மாட்டாது. நாட்டில் பயங்கரவாத தாக்குதலை முன்னெடுப்பதற்கு ஏற்படுத்தப்படும் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்படும் வகையில் புலனாய்வு துறை பலப்படுத்தப்படும் என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

https://sudarseithy.com/47372/

  • கருத்துக்கள உறவுகள்

http://www.thinakaran.lk/sites/default/files/styles/node-detail/public/news/2019/12/20/keheliya-rambukwella.jpg?itok=WlgfQYsO

வடக்கு- கிழக்கில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைப்புக்கள் உருவாகியுள்ளன- கெஹலிய

வடக்கு- கிழக்கில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைப்புக்கள் பல உருவாகியுள்ளன என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் நாடு என்ற ரீதியில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும் அமைப்புக்கள் மீண்டும் உருவாகியுள்ளன.

இதேவேளை நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் நாட்டின் புலானாய்வு பிரிவு செயலிழந்து காணப்பட்டமையினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது.

ஆகவேதான் தற்போது புலனாய்வு துறையை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.

அதாவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில்  புலனாய்வு துறை பலப்படுத்துவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/வடக்கு-கிழக்கில்-பயங்கர/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.