Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை கேட்கும் ஆயுத உதவிகளை வழங்குவதற்கு இந்திய அரசு தயார் இராணுவத் தளபதிகள் மாநாட்டில் அந்தோனி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Wed Jun 20 6:25:39 EEST 2007

இலங்கை கேட்கும் ஆயுத உதவிகளை வழங்குவதற்கு இந்திய அரசு தயார் இராணுவத் தளபதிகள் மாநாட்டில் அந்தோனி

இலங்கை அரசு கேட் கும் அனைத்து இராணுவ உதவி களையும், தளபாடங்களை யும் வழங்க இந்திய அரசு தயாராகவே உள்ளது என அறிவித்திருக்கின்றார் அந் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ. கே. அந்தோனி.

இராணுவத் தளபதிகளின் ஒருங்கி ணைப்பு மாநாடு புதுடில்லியில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. அதனைத் தொடக்கிவைத்து உரைநிகழ்த்தியபோதே அந்தோனி மேற்கண்ட தகவலையும் கசிய விட்டார் என டில்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

விடுதலைப்புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபடும் நோக்கில் "ராடர்' உள்ளிட்ட கருவி களை எம்மிடம் இலங்கை கேட்டிருக்கின் றது. அதற்கமைய அவர்களுக்குத் தேவை யான எல்லாவகை உதவிகளையும் நாம் செய் வோம். அதில் எந்தச் சிக்கலும் இல்லை

எனினும் அங்கு (இலங்கையில்) நிலவும் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சரிப் படாது. அரசியல் தீர்வே ஒரே வழி என் றும் அந்தோனி தமது உரையில் தெரிவித் தார். (சி)

உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு எதிரான போருக்கு இலங்கை கேட்கும் அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும்

வீரகேசரி நாளேடு

இலங்கை கேட்கும் உதவியை செய்வோம். அதே நேரத்தில் அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வை விட அரசியல் ரீதியான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதே இந்தியாவின் கருத்து என்று இராணுவ அமைச்சர் ஏ.கே.அந் தோனி தெரிவித்துள்ளார்.

டில்லியில் முப்படை தளபதிகளின் இரண்டு நாள் மாநாடு நேற்று முன்தினம் ஆரம்பமானது. இந்த மாநாட்டை தொடக்கி வைத்து இராணுவ அமைச்சர் அந்தோணி பேசுகையில், நாட்டில் ஏற்பட்டு வரும் நிலையற்ற தன்மையே இந்தியாவுக்கு எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும். மத பயங்கரவாதம் மற்றும் எல்லையில் ஊடுருவல் ஆகியவை அதிகரித்து வருகின்றன. இது நமது உள்நாட்டு பாதுகாப்புக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது என்றார்.

மாநாட்டில் பேசி முடித்த பின், நிருபர்களிடம் அந்தோனி கூறியதாவது:

இந்திய விமானப் படைக்கு தேவையான 126 போர் விமானங்களை வாங்குவது குறித்து இன்னும் இரண்டு வாரத்தில் முடிவு செய்யப்படும். இலங்கையில் விடுதலைப் புலிகள் விமானப் படையை அமைத்துள்ளது கவலை அளிக்கக் கூடிய விடயமே. ஒரு பயங்கரவாத அமைப்பு இது போன்ற வசதியை பெறுவது நிச்சயம் கவலை ஏற்படுத்தும் விஷயம் தான். இலங்கையுடன் இந்தியா சுமுக உறவையே மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு நிலைக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளோம்.

புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு இலங்கை அரசு கேட்கும் அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். அதே நேரத்தில் இலங்கை பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வை விட அரசியல் ரீதியான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதே இந்தியாவின் கருத்தாக உள்ளது.

காஷ்மீரில் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டம் ஏதும் இல்லை. இப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு இரண்டு கமிட்டிகளை அமைத்துள்ளது. அந்த கமிட்டி தனது பணியை செய்து வருகிறது.இவ்வாறு இராணுவ அமைச்சர் அந்தோனி கூறினார்.

"தவளை அவியல்" (Boiling frog From Wikipedia) என்றொரு சொற்பதத்தையும் அதன் பொருளையும் யாராவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதன் சுருக்கம் இதுதான். சுடுநீர் நிரப்பிய பாத்திரத்துக்குள் தவளை ஒன்றை விட்டால் அது வெளியே பாய்ந்து ஓடிப்போய்விடும். ஆனால் அதே தவளையை தண்ணீர் நிரப்பிய பாத்திரத்துக்குள் இட்டு மெல்ல மெல்லச் சூடேற்றி தண்ணீர் சூடாவதையே உணர விடாமல் செய்து மெதுமெதுவாக அவித்து இறக்கச் செய்யலாம்.

மேற்சொன்ன செய்தியை வாசித்தபோது இந்த "தவளை அவையல்" கதைதான் நினைவுக்கு வந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது? எமது தொப்புழ் கொடி உறவான தமிழ்நாட்டுச் சகோதரங்களை எமக்கு ஆதரவாக செயற்படாமல் பார்த்துக்கொள்ள முயற்சிக்கிறர்கள். சிறிதுசிறிதாக உய்த்தறியும் அறிவைச் சிதைத்து படிப்படியாக முட்டாள்கள் ஆக்கி விடப்பார்க்கிறார்கள்.

சென்ற வருட ஆரம்பத்தில் தமிழ் நாட்டு உறவுகள் ஈழத்தமிழர்களை குண்டுகள் போட்டு அழிக்காதே என்று எமக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள், கண்டன அறிக்கைகள், தீர்மானங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் போன்றனவற்றை நடாத்தினார்கள். இதனால் "இலங்கைக்கு ஆயுத உதவி செய்ய மாட்டோம்" என்று ஓர் அறிக்கையை இந்திய அரசு விட்டது. பின்பு தமிழ் நாட்டுத்தமிழர்களின் உணர்வுகளை "பதப்படுத்தல்கள்" மூலம் தணிவடையச் செய்ய முயற்சிகள் நடந்தன. தமிழ்நாட்டில் அங்குமிங்கும் குண்டுகள் பிடிபட்டதாகக் காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. அப்பாவி தமிழக மீனவர்கள் உடமைகள் சூறையாடப்பட, சுடப்பட்டு இறக்க ஈழத்தமிழ்ப் புலிகளே செய்ததாக சத்தியக்கடதாசிகள் வாசிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்திய அரசு ஆலோசகர் "தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே நாம் வழங்குவோம்" என்று சொல்ல அதற்க்கு ஓரிரு எதிர்ப்புக் குரல்களே எழும்ப தாங்கள் செய்த "பதப் படுத்தல்கள்" வேலை செய்கின்றன என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.

"எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற குறளையும் அதனை எழுதிய திருவள்ளுவரையும் தந்த தமிழகம் "தவளை அவியல்" மூலம் தனது முழு அறிவையும் இழந்து விட்டதாகக் கருதிய இந்திய பாதுகாப்பு அமைச்சர் "இலங்கை கேட்கும் ஆயுத உதவிகளை வழங்குவதற்கு இந்திய அரசு தயார்" என்று சொல்கிறார். ஆனால் இதற்க்கான தமிழக உறவுகளின் பதில் என்ன? நீறுபூத்த நெருப்பாயிருக்கும் தமிழின உணர்வின் வெளிப்பாடு எத்தகையது? இன்னும் சில நாட்களில் "தானாடாவிட்டாலும் தன் தசையாடும்" என்ற எமது சகோதரங்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பொறுத்து தமது ஈழத்தமிழர் எதிர்ப்புக்கொள்கையை இந்திய அரசு மாற்றும் என எதிர் பார்க்கலாம்.

நன்றி, சிறுபுள்ளி.

Edited by Small Point

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறு புள்ளி குறிப்பிட்டதுபோல் திமுக திட்டமிட்டு தவளை அவியல் செய்துவிட்டது.

ஆரம்பத்தில் பொடா சட்டவாக்கத்தின் துணையுடன் அதிமுக போட்ட வழக்குகளின் முடிச்சுகளை அவிழ்த்துவிட்டது. அதன்பின் தொல் திருமாவை வளைத்து ஆளும் கூட்டணிக்குள் கொண்டுவந்தனர். தமிழ் மைய நிகழ்வுக்கு அரச அனுசரனை வழங்கி கனிமொழியை முன்னிறுத்தி பாரம்பரியமான தமிழ் உணவாளர்களை திட்டமிட்டு ஊனப்படுத்தியது. இப்போ தவளை கொதிநீருக்குள்.

தமிழ் நாட்டில் வரலாறு காணாத பெரும் ஊர்வலம்,,பந்து என்பன நடத்தி ஆயுத உதவிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க உடனடியாக மக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் . இதில் கட்சி வேறு பாடு இருக்கக்கூடாது..

இதன் மூலம் தமிழ் நாட்டு மக்கள் இன்னும் விழிப்பாக ஆரியத்தின்,சிங்களத்தின் தமிழ்மக்களின் பிளவுபடுத்தும் சதியை முறியடிக்க வேண்டும்......

தமிழ்நாடு வட இந்தியாவிடம் அடிமைப்பட்டுக்கிடக்கின்றது. தமிழ்நாடு தனக்கிருக்கும் பலத்தில் 10 வீதத்தினை ஈழத்தமிழருக்கு ஆதரவாகத் தெரிவித்தாலும் அது பாரிய நிகழ்வுதான். ஆனால் சில ஆயிரம் தொகையோடு நடத்தப்படுகின்ற ஊர்வலங்கள் போராட்டங்கள் என்பன மத்திய அரசால் அலட்டிக் கொள்ளப்படும் விடயமாக இருப்பதில்லை என்பது அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றே அந்தோனி அவர்களின் இப்போதைய கருத்தும். இந்தியாவினால் பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் என்பது நடவாத காரியம். குழப்பம் விளைவித்தல் ஒன்றே அவர்களால் செய்யக் கூடிய ஒன்று. அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் சொல்லட்டும். சொல்வதைச் செய்யட்டும். அதனால் கிடைக்கப்போகும் முடிவையும் ஏற்றுக் கொள்ளட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.