Jump to content

இராஜதந்திர ஜனநாயகப் போராட்டத்தின் அவசியம் – பி.மாணிக்கவாசகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இராஜதந்திர ஜனநாயகப் போராட்டத்தின் அவசியம் – பி.மாணிக்கவாசகம்

 
Capture-17-696x296.jpg
 19 Views

ஜெனிவாவில் உருவாகி வருகின்ற நெருக்கடிகளுக்கு உறுதியோடு முகம் கொடுப்பதற்கான ஆயத்தங்களில் அரசு ஈடுபட்டிருக்கின்றது. அதனை பகீரதப் பிரயத்தனம் என்று கூட குறிப்பிடலாம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ‘கோர் குறூப்’ என குறிப்பிடப்படுகின்ற முக்கிய உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக கடுமையானதொரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக வெளியாகிய அறிக்கையொன்றையடுத்து அரசு இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிகின்றது. அதற்கான அவசர கோரிக்கைக் கடிதம் ஒன்று இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதேவேளை, ஜனாதிபதி கோத்தாபாய அரசாங்கத்தின் நட்பு சக்திகளாகிய நாடுகளின் உதவி ஒத்துழைப்பையும் ஏற்கனவே அது நம்பிக்கையுடன் நாடியிருக்கின்றது. இலங்கை விவகாரத்தில் ஜெனிவாவின் அணுகுமுறை இறைமையுள்ள ஒரு நாட்டின் மீதான அத்துமீறிய செயல் என்றும் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கப்போவதாகவும் சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ஜெனிவாவில் எழுகின்ற நெருக்குதல்களை முறியடிப்போம் என்று அரச தரப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் முன்பே சூளுரைத்திருக்கின்றனர்.

இருப்பினும் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ‘கோர் குறுப்’ நாடுகளின் அணிக்கு எதிராக பலமுள்ளதோர் எதிரணியை உருவாக்குவதில் அரசு எந்த அளவுக்கு வெற்றி பெறப் போகின்றது என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. அதேபோன்று மனித உரிமைப் பேரவையில் எதிர்பார்க்கப்படுகின்ற புதிய பிரேரணையை எவ்வாறு இலங்கை ஏற்றுக்கொள்ளப் போகின்றது அல்லது மறுத்து நிராகரிக்கப் போகின்றது என்பதும் தெரியவில்லை.

சர்வதேச வல்லாண்மைப் போட்டி, அரசியல், பொருளாதார, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் நிலைமைகளிலேயே ஜெனிவாவில் இலங்கைக்கான ஆதரவும், எதிரணி உருவாக்கமும் அமைந்திருக்கின்றன. இந்த நிலைமகளில் ஏற்படுகின்ற மாற்றங்களே அதனை தீர்மானிக்க வல்லவை. எனவே இந்த மாற்றங்கள் எந்தவேளையிலும் இடம்பெறலாம். அல்லது இடம்பெறாமலும் போகலாம். அது அந்தந்தத் தருணத்தின் பிராந்திய அரசியல், பொருளாதார, பாதுகாப்பு நிலைமைகளிலேயே தங்கியிருக்கின்றது.

மறுபக்கத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர், முக்கியமாக தமிழ்த்தரப்பு ஜெனிவாவை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது அல்லது எவ்வாறு அதனைக் கையாளப் போகின்றது? – இந்தக் கேள்வி மில்லியன் டொலர் பெறுமதியுடையதாக இப்போது எழுந்து நிற்கின்றது.

41ec1f4e-gttg.jpg

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி தமிழ்த் தேசிய மக்களுடையதாக மட்டுமன்றி முஸ்லிம் மக்களையும் உள்ளடக்கிய சிறுபான்மை இன மக்களின் ஒன்றிணைந்த எழுச்சியாகப் பரிணமித்திருக்கின்றது. இது இனப்பிரச்சினை தொடர்பிலும், இலங்கையின் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கான நீதிகோருவதிலும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் மிக்க அம்சமாகி இருக்கின்றது. ஜெனிவா விவகாரத்தைத் தமிழ்த்தரப்பினர் எதிர்கொள்வதற்கும், அதனைக் கையாள்வதற்கும் இது ஓர் உந்து சக்தியாகவும் அமைந்திருக்கின்றது.

ஆனால் இந்த உந்து சக்தி மட்டுமே ஜெனிவாவில் இலங்கை அரசைக் கையாள்வதற்கு தமிழ்த்தரப்புக்குப் போதும் என்று திருப்தி அடைய முடியாது. ஏனெனில் இலங்கை அரசு பொறுப்பு கூறும் விடயத்தில் ஏற்கனவே மனித உரிமைப் பேரவையின் 30-1 தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகியிருக்கின்றது.

அது மட்டுமல்லாமல் உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயல்கள் என்பன இடம்பெறவில்லை  என்று பிடிவாதமாக வாதாடி வருகின்றது. இறுதி யுத்தத்தின்போது இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை. அங்கு இடம்பெற்ற அத்துமீறல்கள் போர்க்குற்றங்கள் என்பவற்றிற்கு விடுதலைப்புலிகளே காரணம் என குற்றம் சாட்டியிருக்கின்றது. இந்தப் பிடிவாதப் போக்கும், குற்றச்சாட்டுக்களும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உள்ளிட்ட அமைச்சர்களினால் நாடாளுமன்றத்திலும் பொது அரசியல் வெளியிலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

சிங்கள பௌத்த மக்களை உசுப்பேற்றுகின்ற வகையிலான இந்தக் கருத்துக்கள் வெறுமனே அரசியல் பிரசாரம் மட்டுமல்ல. இராணுவமயமான ஆட்சிப் போக்கில் நாட்டைக் கொண்டு நடத்தி வருகின்ற ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் கருத்துக்களாகவே அவைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் ஜெனிவாவில் எந்தவிதத்திலும் எதற்கும் இலங்கை பொறுப்பு கூற வேண்டிய அவசியமில்லை என்பதில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச கர்ண கடூர நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்.

அதற்கும் அப்பால் சீன ஆதரவுப் போக்கை இறுக்கமாகப் பற்றிப்பிடித்து, முக்கியமாக சீனா, ரசியா போன்ற நாடுகளையும் அவற்றின் நட்பு நாடுகளையும் வளைத்துப் போட்டுக் கொள்ள முடியும் என்று அரசு திடமாக நம்பியிருக்கின்றது. அத்தகைய ஆதரவைத் திரட்டி, தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்வதில் அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதுவே ஜெனிவா தொடர்பிலான அரச தரப்பு அரசியலின் யதார்த்த நிலைமை.

 இத்தகைய அரசியல் பின்புலத்தில் தமிழ்த்தரப்பு என்ன செய்யப் போகின்றது, எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றது என்பது ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. தளர்வில்லாத செயற்பாட்டிற்கான உறுதியான தீர்மானத்துக்கும் உரியது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான நீண்டகால ஏக்கத்திற்கு அரசியல் ரீதியான முடிவு காணப்பட வேண்டும். அதற்குரிய பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்கள் இடம்பெற்ற ஆயுத முரண்பாட்டு நிலைமைகள் மீண்டும் இடம்பெறாத வகையில் உறுதியான முடிவுகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் அமைதி, ஐக்கியம் என்பன ஏற்படுத்தப்படவும் வேண்டும் – இதுவே ஐ.நா மனித உரிமை ஆணையாளரினதும், மனித உரிமைப் பேரவையினதும் நோக்கமாகும்.

ஆயினும் அரசு பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை அதற்குரிய கட்டமைப்புக்களின் ஊடாக நிறைவேற்ற வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் எழுத்தளவிலேயே எஞ்சிக் கிடக்கின்றன. செயல்வடிவங்களின் ஊடாக அவற்றுக்கு உயிரூட்டுகின்ற சக்தி ஐநாவுக்கு இல்லை என்பதே சர்வதேச நிலைமையின் யதார்த்தம்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் ஊடாக இலங்கை அரசாங்கத்தை எந்த வகையில் செயற்படச் செய்ய முடியும் என்ற கேள்விக்கு உடனடி பதில் ஏதும் காணப்படவில்லை.

குறிப்பாக மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றச் செய்வதற்கு இலங்கை மீது அழுத்தம் கொடுக்கத்தக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் பரிந்துரைத்திருக்கின்றார். அந்த அறிக்கை பல்வேறு விடயங்களை உள்ளடக்கி கடும் சொற் பிரயோகத்தில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விரோத நிலைப்பாட்டைத் தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.

பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றுவதாக ஐ.நாவிடம் உறுதிப்படுத்தி அதற்கான வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கிய அரசு அதனை மீறிச் செயற்பட்டு வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அந்தத் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையையும் தூக்கி எறிந்து பொறுப்பு கூற முடியாது என்று முரட்டுத் தனமாக மறுதலித்து நிற்கின்றது.

எனவே தீவிரமான இன, மதவாதப் போக்கு, இராணுவமய ஆட்சி, சர்வாதிகாரத்தை நோக்கிய நிலைப்பாடு என்பவற்றை மூர்க்கத்தனமாகக் கொண்டுள்ள இலங்கையை பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டில் வழிக்குக் கொண்டு வருவதென்பது இலகுவான காரியமாகத் தென்படவில்லை.

ஐ.நா மனித உரிமைப் பேரவையும், அதன் உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய சர்வதேசம் வெறும் வாய்ச்சொற்களினாலும், தீர்மானங்கள் மற்றும் அறிக்கை வடிவங்களிலான அழுத்தங்களின் ஊடாக மட்டும் இலங்கையை பொறுப்புக்கூறச் செய்ய முடியாது.  இதனை பட்டவர்த்தனமாகத் தனது செயற்பாடுகளின் மூலம் இலங்கை அரசு வெளிப்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில் நாட்டில் நீதியானதோர் ஆட்சியையும் குறிப்பாக இறுக்கமான பன்மைத்தன்மையைக் கொண்ட உறுதியான ஜனநாயக நிலைமையையும் சர்வதேசத்தினால் உருவாக்க முடியுமா என்பதும் கேள்விக்கு உரியது.

உரிய பொறிமுறைகளின் ஊடாக போர்க்குற்றச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பு கூறுவது, மனித உரிமை நிலைமைகளைப் பேணுவது உள்ளிட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது உடனடியாகச் செய்யப்படத்தக்க பணிகளல்ல. அவற்றுக்குக் காலம் எடுக்கும். ஒரு நீண்டகால திட்டத்தின் கீழ் துரித அக்கறையான செயற்பாட்டின் மூலமே அவற்றை நிறைவேற்ற முடியும்.

வழங்கப்பட்ட உறுதி மொழிகளையும் ஏற்றுக்கொண்ட உடன்பாடுகளையும் தனது வசதிக்கும், சுய அரசியல் இலாபத்திற்கும் பலிக்கடாக்களாக்கி காலத்தை இழுத்தடித்து, பொறுப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளைக் கைவிடுவதே அரசாங்கத்தின் வழமையான நிலைப்பாடு.

இந்த நிலையில் எதிர்பார்க்கப்படுகின்ற ஐ.நாவின் பிரேரணையானது, எதிர்பார்ப்புகளுக்கமைய கடுமையானதாகவும்,  நிளைவேற்றப்பட வேண்டியதாகவும் அமைந்தாலும்கூட அரசாங்கம் முழுமையாக அதனைக் கடைப்பிடிக்குமா என்பது சந்தேகம். ஆகவே தொடர்ச்சியான அழுத்தமும் செயற்படு நிலைக்கான வெளித்தூண்டுதல்களும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

சர்வதேச நாடுகளோ ஐ.நா மன்றமோ கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படு நிலைக்குரிய தொடர்ச்சியான அழுத்தத்தையும், வெளித்தூண்டுதல்களையும் வழங்குமா என்பது நிச்சயமற்ற ஒன்றாகவே தெரிகின்றது. இந்த நிலையில் பாதிப்புக்கு உள்ளாகிய தமிழ்த்தரப்பினர் சர்வதேச இராஜதந்திர மட்டங்களில் தூண்டுவிசையாகச் செயற்பட வேண்டிய தேவை உள்ளது.

இராஜதந்திர மட்டத்திலான தூண்டுவிசை என்பது தமிழ்த்தரப்பின் கட்டமைக்கப்பட்ட ஒரு பொறிமுறை உருவாக்கத்தின் ஊடாகவே சாத்தியமாகக் கூடும். இத்தகைய பொறிமுறை அல்லது கட்டமைப்பு என்பது களத்தில் மட்டுமல்லாமல் புலம்பெயர் தளம், தமிழகம் மற்றும் தமிழகத்தையும் கடந்த நட்புச் சக்திகளை உள்ளடக்கிய இந்தியத் தளம் ஆகியவற்றுடன் சர்வதேச இராஜதந்திர களத்தின் ஆதரவையும் கொண்டதாக உருவாக்கப்பட வேண்டும்.

அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், (மண் மீட்பு, ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற பிரச்சினைகளுக்காகப் போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்ற) போராட்ட சக்திகள், துறை சார்ந்த நிபுணர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட பல தரப்பினரையும் உள்ளடக்கியதாக இந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

சிறுபான்மை இன, மத அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், தாயகப் பிரதேச கபளீகரம், கலாசாரப் பண்பாட்டு ரீதியான இன அழிப்புச் செயற்பாடுகள் என்பவற்றுக்கு துறைசார்ந்த நிலையில் போராட்டச் செயற்பாடுகளை களத்தில் முன்னெடுப்பதற்குரிய இராஜதந்திர ரீதியிலான வழிகாட்டல்களை இந்தக் கட்டமைப்பு வழங்கக் கூடியதாக இருத்தல் வேண்டும்.

இந்தப் போராட்டங்கள் களத்திற்கு வெளியில் தமிழகம், தமிழக எல்லையைக் கடந்து ஏனைய மாநிலங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகள் வழித்தடங்களை மேற்கொண்டு செயற்பட வேண்டியதும் இந்தக் கட்டமைப்பின் செயற்பாடாக இருத்தல் வேண்டும்.

அதேவேளை, இந்தக் கட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று முழு நேரமாக இராஜதந்திர மட்டங்களில் பல்வேறு தரப்பினருடனான தொடர்புகளை மேற்கொண்டு சர்வதேச அளவில் தனது செயற்படு தளத்தைக் கொண்டு இயங்க வேண்டியதும் அவசியம்.

இத்தகைய ஒரு கட்டமைப்பு ஐநா மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது அமர்வையொட்டி உருவாக்கப்பட வேண்டும். அந்த அமர்வு காலத்தில் இதனை உருவாக்க முடியாது. அது சாத்தியமில்லை. ஆனால் இந்த அமர்வின் பின்னரான நிலைமைகள் தமிழ்த்தரப்புக்கு சாதகமாக இருந்தாலும்சரி, இல்லாவிட்டாலும்சரி, களத்திலும் புலத்திலும் இராஜதந்திர ரீதியான போராட்டச் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

வலுமிக்கதோர் ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டு, ஒரு தசாப்த காலம் கடந்துள்ள நிலையில் ஜனநாயக வழிமுறையின் ஊடாகவே தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை, மற்றும் நிரந்தரமான இருப்புடன் கூடிய வாழ்வியல் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குள் தமிழ் மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

இந்தப் போராட்டமானது, இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட களநிலை என்ற எல்லையைக் கடந்து பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய கட்டாய நிலைமை உருவாகி இருக்கின்றது.

 எனவே பரந்த அளவிலான போராட்டச் செயற்பாட்டுக்குரிய கட்டமைப்பை உருவாக்குவது குறித்து உடனடியாகச் சிந்திக்க வேண்டும். செயற்படவும் வேண்டும்.

https://www.ilakku.org/?p=42952

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.