Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போராட்டம் ஐந்து வருடத்தை எட்டியது-தொடர்ந்து போராடுவோம் என உறவுகள் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் ஐந்து வருடத்தை எட்டியது-தொடர்ந்து போராடுவோம் என உறவுகள் அறிவிப்பு

 
IMG20210224132454-696x393.jpg
 16 Views
வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்குவருடங்கள் பூர்த்தியாகியது.
 
இதனையடுத்து குறித்த உறவுகளால் இன்று மதியம் கவனயீர்ப்பு போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது.
IMG20210224132454.jpg
 
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,
 
எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஐந்துவருடங்களை எட்டுகின்றது. எமக்கான நீதி கிடைக்கவில்லை. எமது போராட்டங்களில் பங்குபற்றிய பல தாய் தந்தையர்கள் பிள்ளைகளை காணாத ஏக்கத்துடனேயே உயிழந்துள்ளனர்.
 
எமது பிள்ளைகள் அழிக்க முடியாத சாட்சிகளாகியுள்ளனர். அவர்களிற்கு நீதி கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும். அந்தவகையில் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை நாம் எதிர்ப்பார்த்து நிற்கிறோம் என்றனர்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சத்தியாக்கிரகப் போராட்டம் 19ஆவது நாளை எட்டியது -அரசியல்வாதிகள் அசமந்தமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிப்பு

 
IMG-77ef65117749d8412b9811450946a373-V-6
 41 Views
வவுனியா, பூந்தோட்டம் ஸ்ரீறிநகர் கிராம மக்களினால் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 9 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் இன்றுடன் 19 நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
 
20 வருடங்களாகியும் தமக்கு காணி, உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை, உட்கட்டுமான வசதிகள் செய்துதரப்படவில்லை, மைதானம் இன்மை, வீட்டுத்திட்டம் வழங்காமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
IMG-8e033935f03622ba33d0f5962a554be8-V.j
 
பலவருடங்கள் ஆகியும் எமது கோரிக்கைகளிற்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் இது தொடர்பாக ஜனாதிபதினால் தெரிவு செய்யப்பட்ட வன்னி அபிவிருத்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மற்றும் அரச அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியும் இந்த விடயத்தில் எவரும் கரிசனை கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
IMG-77ef65117749d8412b9811450946a373-V.j
 
தற்போது போராட்டத்தை முன்னெடுத்து 19 நாட்கள் கடக்கின்ற நிலையில் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் ஒரு சிலர் கூட தங்களது பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறியவில்லை என்றும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
 
IMG-f2bf16908624fb15027ca4bc1354c9de-V.j
 
இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் வவுனியா தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராசிங்கம் ஆகியோர் மாத்திரமே வருகை தந்து தமது பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட நிலையில் தேர்தல் காலங்களில் வருகை தரும் வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களை திரும்பி கூட பார்க்கவில்லை என்று அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.