Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`சசிகலா சொன்ன சூசகம்’ - அதிர்ச்சியில் அ.தி.மு.க தலைமை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`சசிகலா சொன்ன சூசகம்’ - அதிர்ச்சியில் அ.தி.மு.க தலைமை?

சசிகலா

சசிகலா

அ.தி.மு.க தரப்பில் சிலருடன் சசிகலா தரப்பினர் பேசியிருந்தனர். ஆனால் அவர்களிடமிருந்து பாஸிட்டிவ் பதில் வரவில்லை. இது சசிகலா தரப்புக்கு ஆரம்பத்தில் வருத்தத்தைக் கொடுத்தது.

பெங்களூரிலிருந்து சென்னை திரும்பி பதினைந்து நாள்கள் கழித்து சசிகலாவின் அரசியல் சந்திப்புகள் இன்று ஆரம்பித்துள்ளன. சசிகலாவினால் அ.தி.மு.க-வுக்குள் எந்த அதிர்வலைகளும் இல்லையென்று உற்சாகமாக இருந்த அ.தி.மு.க தலைமை சசிகலாவின் அறிவிப்பால் கொஞ்சம் அதிர்ச்சியில் உள்ளது என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, சசிகலா
 
எடப்பாடி பழனிசாமி, சசிகலா

பிப்ரவரி 9-ம் தேதி அன்று காலை பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார் சசிகலா. கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்திருப்பதால், வெளியாட்கள் யாரையும் சந்திக்க நேரம் கொடுக்கவில்லை சசிகலா தரப்பு. சசிகலா பேச விரும்பிய சிலருடன் மட்டும் தொலைபேசியில் பேசியிருக்கிறார். விடுதலையாகி வந்தபிறகு அ.தி.மு.க-விலிருந்து பலரும் அவர் பின்னால் அணிவகுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த பதினைந்து நாள்களாக அ.தி.மு.க-விலிருந்து ஒருவர் கூட சசிகலாவை சந்திக்கவில்லை. இதனால் அ.தி.மு.க-வில் சசிகலாவின் சகாப்தம் முடிந்தவிட்டதாக பலரும் கருதிவந்தனர்.

ஆனால், தினகரன் தரப்பில், `அ.தி.மு.க-வை மீட்பதே எங்கள் நோக்கம்’ என்று தொடர்ந்து சொல்லிவந்தனர். அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலாவே உள்ளார் என்பதற்கான சட்டப் போராட்டத்தை தொடரவும் சசிகலா தரப்பில் முடிவெடுக்கப்பட்டது. பிப்ரவரி 24-ம் தேதி அன்று ஜெயலலிதா பிறந்தநாளுக்குப் பிறகே தனது அரசியல் சந்திப்புகள் எல்லாம் இருக்கும் என்று சசிகலா தரப்பில் சொல்லப்பட்டது. குறிப்பாக சசிகலாவைச் சந்திக்க முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். அவர்களிடம் ஜெயலலிதா பிறந்தநாளுக்குப் பிறகே எவரையும் சந்திக்க உள்ளார் என்ற தகவலை சசிகலாவின் உதவியாளராக உள்ள காரத்திகேயன் சொல்லியிருக்கிறார்.

சசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி ஏற்ற நிகழ்வில்...
 
சசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி ஏற்ற நிகழ்வில்...

இந்நிலையில் அ.தி.மு.க தரப்பில் சிலருடன் சசிகலா தரப்பினர் பேசியிருந்தனர். ஆனால், அவர்களிடமிருந்து பாஸிட்டிவ் பதில் வரவில்லை. இது சசிகலா தரப்புக்கு ஆரம்பத்தில் வருத்ததைக் கொடுத்தது. ஆனால், அ.தி.மு.கவின் சீனியர்கள் சிலர் எடப்பாடி மீது தனிப்பட்ட வருத்ததில் இருந்தனர். இவர்கள் சசிகலா பக்கம் சாயும் முடிவுக்கு வந்துள்ளனர். குறிப்பாக தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சசிகலா தரப்பு இல்லாமல் நாம் தென் மாவட்டங்களில் வெற்றி பெற முடியாது என்பதை அ.தி,மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் சூசகமாகச் சொல்லியிருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து தென் மாவட்டத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் சசிகலாவைச் சந்திக்க நேரம் பார்த்து வந்துள்ளனர்.

 

இவர்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் மூலம் தங்கள் விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு சசிகலா தரப்பு கொடுத்த பதில்,``என்னால் வளர்த்துவிடப்பட்டவர்களே இப்போது என்னைச் சந்திக்கவும் யோசிக்கிறார்கள். ஆனால், என் மீது விசுவாசம் உள்ளவர்கள், இப்போது என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களை நான்தான் அமைதியாக இருக்கச் சொல்லியுள்ளேன். தேர்தல் தேதி அறிவித்த பிறகு அவர்களை வரிசையாக சந்திப்பேன். ஒரு போதும் அ.தி.மு.க-விலிருந்து விலகிச்செல்ல மாட்டேன்” என்று சொல்லியுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், எடப்பாடி அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டுவிடும், அதன்பிறகு தனது அரசியல் ஆட்டத்தை நடத்தலாம் என்று சசிகலா நினைப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லுகிறார்கள். இந்த மையக்கருத்தில் தான் பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் அன்று பேசிய சசிகலா, ``நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது பொது எதிரியான தி.மு.க-வை தேர்தலில் வீழ்த்தவேண்டும்” என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா
 
சசிகலா

அ.தி.மு.க தலைமை பற்றியோ, அ.ம.மு.க பற்றியோ ஒரு வார்த்தைகூட தனது பேச்சில் அவர் பயன்படுத்தவில்லை. மாறாக தொடர்ந்து அவர் முன்வைப்பதே `அனைவரும் ஒன்றுப்பட்டால் மட்டுமே தி.மு.க -வை வீழ்த்த முடியும்’ என்கிற கருத்துதான். அ.தி.மு.க-வின் அடிமட்ட தொண்டர்கள் மனதிலும் உள்ள கருத்தும் இதுதான். இந்தக் கருத்தை, தொடர்ந்து பொதுவெளியில் வைப்பதால் தொண்டர்கள் மத்தியில் சசிகலா அ.தி.மு.க-வுக்குத் தேவை என்கிற எண்ணத்தை ஏற்படுத்தமுடியும் என்று நினைக்கிறார். அதே போல் 25-ம் தேதிக்கு மேல் சசிகலாவின் சுற்றுப் பயணமும் ஆரம்பிக்க உள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்திலும், ``அம்மாவின் அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்” என்று மட்டுமே சொல்ல இருக்கிறார். அ.தி.மு.கவுக்கு எதிராக குற்றச்சாட்டைச் சொல்லி தொண்டர்களிடம் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டாம் என்று நினைக்கிறார். சசிகலாவின் இந்த சூசகமான மூவ் எடப்பாடி தரப்புக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது.

மத்திய அரசையும் சரிக்கட்டி, அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ-க்கள் வரை இப்போது வரை தனது கட்டுபாட்டில் வைத்திருக்கிறார் எடப்பாடி. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு சீட் கிடைக்காத விரக்தியில் பலரும் சசிகலா பின்னால் அணிவகுப்பார்கள். அது தேர்தல் நேரத்தில் தனக்கு சிக்கலை ஏற்படுத்துமோ என்கிற எண்ணம் எடப்பாடியிடம் உள்ளது. பணம் பாதாளம் வரை பாயும் என்பது சரிதான், ஆனால், `பணமும் இல்லாமல் பதவியும் இல்லாமல் உள்ள கட்சி நிர்வாகிகள் அணிமாறுவதை எப்படித் தடுக்க முடியும்?’ என்கிற சிந்தனைக்கு சென்றுள்ளார் எடப்பாடி.

சசிகலா, தினகரன்
 
சசிகலா, தினகரன்

அதேநேரம், `சசிகலாவிடம் அ.தி.மு.க-வினர் நெருங்க அச்சப்படக் காரணமே சசிகலாவின் உறவுகளை நினைத்துத்தான். ஏற்கெனவே மன்னார்குடியில் பல அதிகார மையங்கள் இருந்துகொண்டு கட்சியினரைப் பந்தாடியதை இன்னும் பலரும் மறக்கவில்லை. இப்போதும் சசிகலாவைச் சுற்றி அவரது உறவுகளே வலம் வருகிறார்கள். இதுவே அவரைச் சந்திக்க நினைக்கும் அ.தி.மு.கவினரை அச்சப்படுத்துகிறது. ஜெயலலிதா பாணியில் ரத்த உறவுகளை ஒதுக்கிவைத்துவிட்டு அவர் அரசியல் களத்தில் பயணத்தால் அ.தி.மு.க-வில் உள்ள பலரும் அவர் பின்னால் அணிவகுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், இந்தக் கருத்தை அவரிடம் சொல்வதற்குக் கூட வாய்ப்பில்லை’ என்கிறார்கள் சசிகலாவின் அபிமானிகள்.

 

https://www.vikatan.com/news/politics/sasikalas-hint-aiadmk-leadership-in-shock

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.