Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை அரசியலில் சந்திரிகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியலில் சந்திரிகா

வீரகேசரி நாளேடு

கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் ஜெயராஜ் தெரிவிப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இலங்கை அரசியலில் தலையிடப்போவதில்லை என தனக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் நான் தெரிவித்த கருத்துக்கு நன்றி தெரிவித்து சந்திரிகா குமாரதுங்க எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை அரசியல் விவகாரங்களில் அவர் இனியொருபோதும் ஈடுபடப்போவதில்லை என்றும் அக்கடிதத்தின் இறுதிப்பகுதியில் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசியலில் மூன்றாவது பலம் பொருந்திய அணி உருப்பெறும் என்ற ஊகங்களுக்கு இது நல்ல பதிலாக அமையும் என்றார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஹேமகுமார நாணயக்கார மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சந்திரிகா ?

[21 - June - 2007]

அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு நான்கு மாதங்களுக்கும் கூடுதலான காலத்துக்குப் பிறகு மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பிலிருந்து எதிரணிக்கு மாறியிருக்கிறார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தவறான வழியில் சென்று கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டும் இவர்கள் சுதந்திரக்கட்சி - மக்கள் பிரிவு என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கிறார்கள். ஹொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு அஞ்சலி செலுத்தும் வைபவத்துடன் நாளை வெள்ளிக்கிழமை புதிய கட்சி அங்குரார்ப்பணம் செய்யப்படவிருக்கிறது.

நேற்று புதன்கிழமை காலை பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய மங்கள சமவீர, தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளினால் ஓரங்கட்டப்பட்டு விரக்தியடைந்து போயிருக்கும் சுதந்திரக் கட்சியின் ஒவ்வொரு விசுவாசமான உறுப்பினரையும் ஆதரவாளரையும் தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அத்துடன் சுதந்திரக்கட்சியை சரியான திசையில் வழி நடத்துவதற்கான தங்களது போராட்டத்தில் இணையுமாறு முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் சமரவீர விசேட வேண்டுகோளொன்றை விடுத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று திட்டவட்டமாக திருமதி குமாரதுங்க அறிவித்திருந்தபோதிலும், கட்சியைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்துக்காக தங்களுடன் வந்து இணையுமாறு அவரைக் கேட்டுக் கொள்வதாக சமரவீர சபையில் தெரிவித்தார்.

மங்கள சமரவீர நேற்றைய உரையில் சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகரான காலஞ்சென்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவை அடிக்கடி மேற்கோள் காட்டியிருந்தார். பண்டாரநாயக்க குடும்பத்தின் ஒரேயொரு ஆண் வாரிசு என்று தன்னைக் கூறிக்கொள்வதில் பெருமைப்படுகின்ற அநுரா பண்டாரநாயக்க, ஜனாதிபதி ராஜபக்ஷவினால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட போதிலும் மீண்டும் அவருடன் சமரசம் செய்து அமைச்சர் பதவியொன்றைப் பெற்றுக் கொண்டு அடங்கி ஒடுங்கி மௌனமாக இருக்கும் நிலையில், அவரது தந்தையாரான பண்டாரநாயக்கவின் பெயரை அடிக்க உச்சரித்து, அடிக்கடி மேற்கோள் காட்டி கட்சியைக் காப்பாற்ற வருமாறு சமரவீர அதன் உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றமையை என்னவென்று வர்ணிப்பதென்றே புரியவில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் தலைமையிலான ஒரு கட்சிக்குள் முறுகல் நிலையொன்று ஏற்படுவதென்பது இதுதான் முதற்தடவையல்ல. ஏற்கனவே 1990 களின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முறுகல் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர்களான காலஞ்சென்ற லலித் அத்துலத் முதலி, காமினி திசாநாயக்க தலைமையிலான குழுவினர் ஐ.தே.க. வில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தனர். ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் அரசியல் குற்றச்சாட்டுப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியொன்றைத் தொடர்ந்தே அந்தப் பிளவு ஏற்பட்டது. தனக்குரிய சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி தனக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான முயற்சிகளை பிரேமதாசவினால் முறியடிக்கக் கூடியதாகவிருந்தது.

ஜனாதிபதி ராஜபக்‌ஷ தனது சகோதரர்களையும் மற்றும் நெருக்கமான குழுவினரையும் போஷிக்கும் ஒரு ஏதேச்சாதிகாரஆட்சியை நடத்துவதாக குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராகக் கிளம்பிய சமரவீரவும் சூரியாராச்சியும் தங்களுக்கு அரசாங்கத்திற்குள்ளும் சுதந்திரக்கட்சிக்குள்ளும் ஆதரவைத் திரட்ட முடியாத நிலையிலேயே இன்று எதிரணி தரப்புக்கு மாறி புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ராஜபக்‌ஷவுக்கு இருக்கின்ற மட்டுமீறிய அதிகாரங்களும் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் தற்போது அனுபவிக்கும் பதவிகளையும் வரப்பிரசாதங்களையும் இழக்க வேண்டியேற்படுமே என்று அமைச்சர்களுக்கும் எம்.பி.க்களுக்கும் இருக்கின்ற அச்சமுமே சமரவீரவுக்கு ஆதரவாக எவருமே கட்சிக்குள் பகிரங்கமாக பேசாமல் இருந்ததற்கான காரணங்களாகும். பிரேமதாசாவுக்கு எதிராகக் கிளம்பி லலித்தும் காமினியும் ஆரம்பித்த கட்சிக்கு இறுதியில் நேர்ந்த கதிதான் சமரவீரவும் சூரியாராச்சியும் இப்போது ஆரம்பிக்கவிருக்கின்ற கட்சிக்கும் ஏற்பட்டுவிடக்கூடும். ஜனாதிபதியின் சகோதரர்களின் செயற்பாடுகள் காரணமாக அரசாங்கத்திற்குள்ளும் சுதந்திரக்கட்சிக்குள்ளும் பெருமளவா னோர் அதிருப்திகொண்டிருப்பதாக கருதும் இவ்விருவரும் தங்களுக்கு நாளடைவில் ஆதரவு பெருகும் என்று நம்புகிறார் கள் போலும்.

இன்றைய கொழும்பு அரசியல் நிகழ்வுப் போக்குகளில் முக்கியமாக அவதானிக்கக் கூடியதாக இருக்கும் ஒரு அம்சம் முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க சம்பந்தப்பட்டதாகும். தனது மகளின் திருமண அலுவல்கள் காரணமாக பல மாதங்களாக லண்டனில் தங்கியிருந்த திருமதி குமாரதுங்க விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடக் கூடும் என்றும் அரசியல் வட்டாரங்களில் ஊகிக்கப்படுகிறது. இந்த ஊகங்களுக்கு வலுச்சேர்ப்பதாக நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சமரவீர ஆற்றிய உரையில் திருமதி குமாரதுங்கவிற்கு விடுத்த பகிரங்க அழைப்பு அமைந்திருக்கிறது. பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ஜனாதிபதியொருவர் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கிய முன்னுதாரணம் இலங்கையில் இல்லை. ஆனால், அதிகாரத்தில் இருந்து 2005 இறுதியில் திருமதி குமாரதுங்க திருப்தியுடன் இறங்கவில்லை. ஏக்கப் பெருமூச்சுடன்தான் அவர் ஜனாதிபதி ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வழிவிட்டார் என்பது ஒன்றும் இரகசியமானதல்ல. ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்‌ஷ வெற்றிபெருவாரென்று திருமதி குமார துங்க நிச்சயம் எதிர்பார்த்திருக்கவும்மாட்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sun Jun 24 10:32:44 EEST 2007

சந்திரிகா வெள்ளியன்று நாடு திரும்புகிறார்; மங்களவின் கட்சியில் சேர்வாரா, இல்லயா?

லண்டனில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்தி ரிகா குமாரதுங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு திரும்புகிறார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆரம்பித்துள்ள கட்சியில் இணையுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

நாடு திரும்பியதும் அவர் புதிய கட்சியில் இணைந்து கெள்வாரா இல்லையா, என்ற முடிவுக்கு வருவாரா என் பது குறித்து அரசியல் வட்டாரங்கள் ஆவலுடன் எதிர் பார்த்திருக்கின்றன.

இதேவேளை

நீதி அமைச்சர் டிலான் பெரேரா கருத்து வெளியிடு கையில்

சந்திரிகா நாடு திரும்பி மங்களவுடன் சேரக் கூடாது. சேரவும் ஸ்ரீலங்கா சுதந் திரக்கட்சி விடக்கூடாது.

ஏனெனில், மங்கள சமரவீர நடுநிலைக் கொள்கையில்லாதவர். ஒன்றைக் கூறுவார். மற்றொன்றைச் செய்வார். அவருடன் சந் திரிகா சேர்வதைத் தடுக்கவேண்டும் என்று கூறி யுள்ளார்.

இதேவேளை, மங்கள சமரவீரவும், ஸ்ரீபதி சூரியாராய்சியும் கட்சியுடன் சேர்வதற்கு எப்போதும் கதவு திறந்தே உள்ளது எப் போதும் அவர்கள் கட்சியில் இணையலாம் என்று ஸ்ரீல.சு.கட்சியின் மூத்த உறுப்பினர் கள் தெரிவித்திருக்கின்றனர்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.