Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த அரசாங்கம் கவிழ்க்கப்படும்: மங்கள சமரவீர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அரசாங்கம் கவிழ்க்கப்படும்: மங்கள சமரவீர

[வெள்ளிக்கிழமை, 22 யூன் 2007, 10:51 ஈழம்] [க.திருக்குமார்]

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை உரிய நேரத்தில் கவிழ்ப்போம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி(மக்கள் பிரிவு) தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் நிறுவனர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி ஆகிய இருவரும் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:

நாம் உரிய நேரத்தில் மகிந்தவின் அரசாங்கத்தில் உள்ள 15 முதல் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை எமது பக்கம் உள்வாங்குவோம்.

116 உறுப்பினர்களின் பலத்துடன் தான் தற்போது ஆட்சி நடந்து வருகின்றது. எனவே புதிய கட்சியினால் இந்த சமன்பாட்டை மாற்றுவது கடினமாக இருக்காது. நாம் அவசரப்படக்கூடாது.

சுதந்திரக் கட்சியை சரியான பாதையில் செல்ல வைப்பது தான் எமது முதலாவது படி. தேர்தல் காலத்தின் போது மகிந்தவின் சகோதரர்களை நான் கண்டது அரிது. நாம் ஆதரவு தெரிவித்த குதிரை விரைவாக தடம் மாறும் என நான் எதிர்பார்க்கவில்லை.

ராஜபக்ச குழுவினது கேவலமான வேலைகளினால் சுதந்திரக்கட்சியின் கொள்கைகள் மாசடைந்துள்ளன. தற்போது சுதந்திரக்கட்சி வற்புறுத்தல்களினால் கட்டுப்படுத்தப்பபட்டு வருகின்றது. அதனை செய்பவர்கள் கட்சி அங்கத்தவர்களோ அல்லது இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்களோ அல்ல.

முன்னாள் அரச தலைவர் சந்திரிகா நாட்டை நடுநிலையான வழியில் ஆட்சி செய்திருந்தார். அவரை நாம் எம்முடன் சேருமாறு அழைக்கிறோம். அவருக்கு மீண்டும் அரசியலில் இணைய விருப்பம் இல்லை. எனினும் எமது குறிக்கோளை அடைவதற்காக எம்மை வழிநடத்த அத்தகைய ஒரு தலைவர் எமக்கு தேவை.

சிலருக்கு தற்போது சந்திரிகா போவியா என்ற நோய் பிடித்துள்ளது. அவர்கள் அதிகளவில் அச்சமடைந்துள்ளனர். தமது படுக்கைக்கு கீழே ஆவி இல்லை என உறுதிப்படுத்தும் வரை அவர்கள் உறங்க மாட்டார்கள் என்றனர் அவர்கள்.

புதினம்

மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான சர்வாதிகார அரசாங்கத்தை மிக விரைவில் வீழ்த்துவோம் : மங்கள சமரவீர, சிறிபதி சூரியாராச்சி.

அரசாங்கத்திற்கு எதிரான பலமான புதிய சக்தியொன்றை உருவாக்க ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி. உள்ளிட்ட ஜனநாயக அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். இதன்மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான சர்வாதிகார அரசாங்கத்தை மிக விரைவில் வீழ்த்துவோம். அதற்கான முயற்சிகளை பகிரங்கமாக மேற்கொள்வோம்.

அதனால் ஏற்படும் எதிர்ப்புகளையும் விளைவுகளையும் எதிர்கொள்ளத்தயாரகவுள்ளோம். உயிரையும் துச்சமென எண்ணியே இந்தப்போராட்டத்தில் குதித்துள்ளோம் என்று முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் சிறிபதி சூரியாராச்சியும் கூட்டாக தெரிவித்தனர். தனிக்கட்சியாக செயற்படும் நோக்கம் தமக்கு இல்லை என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர்கள், நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தவிரும்பும் கட்சிகளுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் கூறினர்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அமைச்சர்கள் இருவரும் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, கடந்த 19 வருடங்களாக சிறிலங்கா சுதந்தரக் கட்சியின் உறுப்பினராக உள்ளேன். 1988.06.19 ஆம் திகதியிலிருந்து மாத்தறை தொகுதியின் பிரதான அமைப்பாளராக செயற்பட்டுவருகின்றேன். இன்றுள்ள அரசாங்கம் போன்று நான் எப்போதும் காணவில்லை.

கட்சியின் கொள்கைகளை விட்டுவிட்டு, தான்தோன்றித்தனமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ செயற்படுகிறார். இதுவே என்னையும் நண்பர் சிறிபதி சூரியாராச்சியையும் எதிர்க்கட்சி வரிசையில் அமரச்செய்தது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் என்ற வகையில் பலமாக எதிர்க்கின்றோம். நாட்டின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் ராஜபக்ஸ சகோதரர்களின் மிக மோசமான நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மக்களின் கட்சியாக செயற்பட வேண்டிய சுதந்திரக் கட்சி, இன்று தனி நபர் கட்சியாக மாறியுள்ளது.

ஜனநாயகத்தை குழிதோண்டிப்புதைத்துள்ள அரசாங்கம், பழி வாங்கும் நோக்குடன் செயற்படும் நிறைவேற்று அதிகாரத்தை தலைமையாகக் கொண்டுள்ளது. அதனை மீறியும் வாய் திறந்தால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. நிதிகள் சூறையாடப்படுகின்றன. ஊழல், மோசடிகள் மலிந்துவிட்டன. வெளிப்படையான நிலையொன்று இல்லை. குறைகளை சுட்டிக்காட்ட முடியாதுள்ளது. அவ்வாறு சுட்டிக்காட்டினால் பழிவாங்கப்படுகின்றனர்.

இன்று சகோதர நிறுவனத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பது பாரிய குற்றமாகக் கருதப்படுகிறது. சிறிய விமர்சனத்தைக்கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத நிலையில் ஜனாதிபதி உள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கட்சியின் தலைவியாக இருந்தவேளையில் கருத்துச் சுதந்திரம் இருந்தது. ஆனால் இன்று கட்சிக்குள் பலவந்தமும் சர்வாதிகாரமுமே குடிகொண்டுள்ளன.

மனித உரிமை, மக்களின் உரிமை மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு எம்முன் உள்ளது. அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிந்திக்கவில்லை. இனத்துவேஷத்தை பிரதான கொள்கையாகக் கொண்டுள்ள இந்த அரசாங்கம், என்றும் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளைப் பெற்றுக்கொடுக்காது.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அவர்களின் நாட்டுக்கான பங்களிப்பு அளப்பரியது. எனவே அவர்கள் தொடர்பில் நாம் கூடுதலாக சிந்திக்க வேண்டும். நாட்டின் பிரஜாவுரிமை இல்லாத, கடவுச்சீட்டைக்கூட கொண்டிராத ஒருவர் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவது கவலையானதும் பாரதூரமானதுமான நிலை.

1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலேயே சிறுபான்மை மக்கள் மிகக்கூடுதலாக துன்புறுத்தப்பட்டுள்ளனர் இவ்வாறு அரசங்கம் நாட்டை வழிநடத்திச் சென்றால் சிம்பாப்பே போன்று விரைவில் இலங்கையும் மாற்றம் காணும். தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்கள் வெளிநாடு செல்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டு வருகிறது.

உலக நாடுகளுக்குச் சென்று செல்வந்தர்களைத் தேடிப்பிடித்து, நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்கின்றனர். நீதமாக செயற்படாது, அமைச்சரவைப்பத்திரங்களைக் கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றனர். கிராமிய மட்டத்தில் உட்கட்டமைப்புப்பணிகள் வீழ்ந்துள்ளது.

இந்த அரசு தொடர்ந்து நீடித்தால் நாடு கூட மிஞ்சுமா? என்பது சந்தேகமே. நாட்டில் மக்கள் ஆட்சியைக் கொண்டுவர நாம் அனைத்து ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து செயற்படுவோம். வீதியில் இறங்கிப் போராடுவோம். இந்த சர்வதிகார ஆட்சியை தோற்கடிப்போம். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. உள்ளிட்ட ஜனநாயக அமைப்புக்களுடன் பேச்சுவார்ததை நடத்தி பலமான புதிய சக்தியொன்றை உருவாக்குவோம் என்றார்.

பொலிஸாரைக் கொண்டு பொலிஸ்மயமான ஆட்சியை ராஜபக்ஸ சகோதரர்கள் முன்கொண்டு செல்வதாக இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் சிறிபதி சூரியராச்சி குறிப்பிட்டார்.

-Sankathi-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.