Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா குறித்த சம்பந்தனின் நிலைப்பாட்டை ஏற்பதற்கு ரெலோ மறுப்பு – செல்வம் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா குறித்த சம்பந்தனின் நிலைப்பாட்டை ஏற்பதற்கு ரெலோ மறுப்பு – செல்வம் அறிவிப்பு

 
selvam-adaikalanathan-800-696x348.png
 2 Views

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரதான நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள 46/01 இலக்கப் பிரேணையை அதன் தற்போதைய நகல் வடிவத்தில் ஏற்று அங்கீகரிக்குமாறு அங்கத்துவ நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த கோரிக்கையுடன் தாங்கள் உடன்படவில்லை என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ தெரிவித்துள்ளது.

ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பியும், அக்கட்சியின் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமியும் இந்தத்தகவலை தெரிவித்தனர். சம்பந்தனின் கருத்து கூட்டமைப்பின் நிலைப்பாடாக நேற்று வெளியிடப்பட்டது. அது தொடர்பான அறிக்கையில் சம்பந்தன் ஒப்பமிட்டிருந்தார். இலங்கைத் தமிழரசுத் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரும் அதில் ஒப்பமிட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 23, 24ஆம் திகதிகளில் ஜெனிவா அமர்வை ஒட்டி இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா ஆற்றிய உரைக்குப் பதிலளித்து வெளியிடப்படுவதாக இந்த அறிக்கை அமைந்தது. அதில் இப்போது ஜெனிவாவில் பிரேரிக்கப்பட்டுள்ள – இலங்கை தொடர்பான – பிரேரணையை ஆதரிக்குமாறு பேரவை அங்கத்துவ நாடுகளைக் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலைப்பாட்டையே ரெலோ தலைவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். அந்த நிலைப்பாடு தங்களின் இசைவு அல்லது இணக்கத்துடன் வெளியிடப்பட்டதல்ல என்று செல்வமும் சுரேனும் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியவை வருமாறு:

“ஜெனிவா அமர்வை ஒட்டி தமிழ்த் தேசியத் தரப்புகளில் மூன்று பிரதான கூட்டுக்களின் தலைவர்களும் (சம்பந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர்) ஒப்பமிட்டு பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்குக்கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தனர். அதுவே தமிழர் தரப்பின் ஐக்கிய நிலைப்பாடாக வெளிப்படுத்தப்பட்டது.

அதில் தமிழர் தரப்புகள் கோரியுள்ள முக்கிய விடயங்கள் ஏதும் இப்போது பிரேரிக்கப்பட்டுள்ள நகல் வரைவில் இல்லை. அப்படி இருக்கையில் அதனை நிறைவேற்றுமாறு அங்கத்துவ நாடுகளை நாம் எப்படிக் கோர முடியும்? அத்தகைய கோரிக்கையுடன் நாம் இணங்க மாட்டோம். சம்பந்தன் ஐயா ஓர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறினார். அதைப்பார்த்துக் கருத்துக் கூறுமாறு கேட்டார்.

ஆனால் அந்த அறிக்கை எனது பார்வைக்கு வர முன்னரே – நாம் பரிசீலித்துக்கருத்து கூற முன்பே – ஒட்டு மொத்தக் கூட்டமைப்பின் அறிக்கையாக அது வெளியிடப்பட்டு விட்டது. அதை நாம் ஏற்க முடியாது. இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதி மன்றுக்கு பாரப்படுத்தக் கோருவது உட்பட நான்கு பிரதான கோரிக்கைகளை நாம் ஏற்கனவே ஒன்றுபட்ட வேண்டுகோளாக அங்கத்துவ நாடுகளிடம் வைத்துள்ளோம்.

அவற்றின் அடிப்படைகள் கூட இல்லாத ஒரு நகல் பிரேரணையை அங்கீகரிக்குமாறு அங்கத்துவ நாடுகளை நாம் கோருவது – அல்லது அத்தகைய கோரிக்கையுடன் நாம் உடன்பட்டுப் போவது – முறையான செயல் அல்ல. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் நடவடிக்கையாகவும் அது இருக்க மாட்டாது. எனவே சம்பந்தன் சார்பில் கூட்டமைப்பின் பெயரில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையுடன் நாம் உடன்படவில்லை என்பதை எமது மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். இது தொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் விவரமான அறிக்கை உடனடியாக வெளியாகும்” என்றார்.

 

 

https://www.ilakku.org/?p=43868

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு என சம்பந்தரின் அறிக்கையை நிராகரித்து ரெலோ விளக்கம்

 
1-49.jpg
 41 Views
மனித உரிமைச் சபையில் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆற்றிய உரைக்கு பதில் அளிக்கும் முகமாக சம்பந்தர் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை சம்பந்தமாக எமது நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் என ரெலோ   கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அவ்வறிக்கையில் கூட்டமைப்பாக எமது தலைவரின் பெயர் இணைக்கப்பட்டு இருந்தபோதிலும், எமது பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படாது வெளியிடப்பட்டமை வருத்தத்துக்குரியது என டொலோ இன்று (07) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ரெலோவின் ஊடக பேச்சாளர் கு. சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
“ஜெனிவா கூட்டத்தொடரில் மனித உரிமைச் சபையின் அமர்வில் தமிழ் மக்களுக்காக நீதிகோரி கொண்டுவரப்பட இருக்கின்ற பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் அடங்கிய கோரிக்கையை மூன்று தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டுத் தலைமைகள், சமூக அமைப்புக்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு அங்கத்துவ நாடுகளுக்கு அனுப்பி வைத்திருந்தோம்.
 
 இருப்பினும் மாதிரி வரைபிலே நாம் கோரிக்கை விடுத்த முக்கியமான விடயங்கள் உள்வாங்கப்படாமலும், முந்தைய பிரேரணைகளிலிருந்த உறுதியான பல சரத்துக்கள் தவிர்க்கப்பட்டமையையும் அவதானித்து இருந்தோம்.
 
 சமர்ப்பிக்கப்பட இருக்கும் பிரேரணை பலமான உறுதியான சரத்துக்களை உள்ளடக்கியதாக அமையுமிடத்தில் தான் நம்முடைய இனத்திற்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என்ற வகையில் அதை பலப்படுத்தும் வகையாக தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருப்பவர்களும், சர்வதேச உறவுகள்மற்றும் சமூகமும், இணை அனுசரணை நாடுகளும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
 
 இந்த இக்கட்டான, இறுதி வரைவின் வடிவம் என்னவென்று தெரியாமல் இருக்கின்ற சூழ்நிலையிலே இருக்கின்ற வரைபை பிரேரணையாக வெற்றிகரமாக நிறைவேற்றும்படி இணை அனுசரணை நாடுகளை கோருவது எமது முயற்சியை பலமிழக்கச் செய்வதோடு குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்துவது மாத்திரமல்லாமல் எமது மக்களின் நீதிக்கான போராட்டத்தினையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைப்பதையும் பலவீனமடையச் செய்யும்.
ஆகவே இந்த அறிக்கைக்கு நாம் ஒருபோதும் இணங்க மாட்டோம்.
 
 மனித உரிமைச் சபையில் அங்கத்துவ நாடுகளிடம் எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையான பலமான சரத்துக்களை உள்ளடக்கிய பிரேரணையை நிறைவேற்றுமாறு கோரிக்கை வைப்பதுதான் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி நிற்கும் எமது மக்களுக்கு நாம் செய்யும் தலையாய கடமையாக இருக்கும். தவிர அரச பிரநிதிகள், அமைச்சருடைய கருத்துக்களுக்கு பதில் அளிப்பதில் நேரம் கடத்துவது சரியான ஒன்றாக இந்த நேரத்தில் அமையாது.
 
எமது ஒன்றிணைந்த கோரிக்கைகளயும், ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகரது அறிக்கையிடப்பட்ட விடயங்களையும் உள்ளடக்கியதாக மனித உரிமைச் சபையில் எமது மக்களுக்கான நீதியை உறுதிப்படுத்துவதாகவே சமர்ப்பிக்கப் படுகின்ற பிரேரணை அமைய வேண்டும் எனவும் அதை வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் அங்கத்துவ நாடுகளை நாம் கோருகிறாம். இதுவே எமது நிலைப்பாடு.
 
எமது மக்களின் நீதிக்கான உரிமைக்கான போராட்டத்தில் எமது கட்சி தொடர்ந்தும் உறுதியுடன் பயணிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.